Skip to main content

விருந்து வைக்கும் ராமதாஸ்! "மொய்" வைக்கும் எடப்பாடி?

Published on 21/02/2019 | Edited on 21/02/2019

 

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வை இணைத்து அக்கட்சிக்கு ஐந்து தொகுதிகள் கொடுத்து, கூட்டணியை உறுதி செய்த அ.தி.மு.க. அடுத்து பாமகவையும் கூட்டணிக்குள் கொண்டு வந்து அக்கட்சிக்கு ஏழு இடங்கள் கொடுத்து பா.ம.க வையும் தங்கள் அணியில் இணைத்துக்கொண்டது அ.தி.மு.க. இது அரசியல் வட்டாரத்தில் முக்கிய நகர்வாக பேசப்படுகிறது. இந்நிலையில் திமுக அணியும் காங்கிரசை இணைத்ததோடு   தொடர்ச்சியாக கம்யூனிஸ்டுகள் ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் என அவர்கள் அணியிலுள்ள தோழமைக் கட்சிகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

 

ஒ

 

தேர்தல் கூட்டணி என்றால் வெறுமனமே தொகுதிப் பங்கீடு மட்டுமில்லை. கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளுக்கு ஆகும் செலவுகளையும் கூட்டணிக்கு தலைமை ஏற்கும் கட்சியே செய்யவேண்டுமென்பது  எழுதப்படாத ரகசிய ஒப்பந்தம் என்பது அரசியல் வட்டாரத்தில் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் அ.தி.மு.க அணி மிகவும் தாராளமாக உள்ளது என்றும் அதன் வெளிப்பாடுதான் நாளை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் கொடுக்கும் விருந்தில் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்கள் என்று அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. 

 

இது சம்பந்தமாக கொங்குமண்டல அதிமுக எம்எல்ஏ ஒருவரிடம் நாம் பேசியபோது, இப்போதெல்லாம் தேர்தல் வந்துவிட்டால் கூட்டணிக் கட்சிக்கு தொகுதி கொடுப்பது மட்டுமல்ல, அந்தக் கட்சி அடுத்த சில ஆண்டுகள் கட்சியை நடத்துவதற்கும் தேவையான பொருளாதாரத்தையும் கூட்டணிக்குத் தலைமை ஏற்கும் கட்சி கொடுப்பது வாடிக்கையாகிவிட்டது. அதிலும் எங்கள் கட்சி இப்போதைய நிலைமையில் மிகவும் தாராளமயத்தில்  தான் உள்ளது. நாளைக்கு டாக்டர் ராமதாஸ் எங்கள் கட்சியின் முதல்வர் துணை முதல்வர் மற்றும் இந்த கூட்டணிக்கு வித்திட்ட அமைச்சர்கள் தங்கமணி ,வேலுமணி ஆகியோருக்கு சிறப்பான விருந்து கொடுக்க உள்ளார்.  அங்கு போய் விருந்து சாப்பிட்டுவிட்டு வணக்கம் போட்டுவிட்டு மட்டும் எங்கள் கட்சித் தலைமை வந்துவிடாது. சாதாரணமாக நாம் ஒரு விசேஷத்திற்கு சென்றால் என்ன செய்வோம் மொய் வைப்போம்.

 

நம்மளவில் ஏதோ 500 ரூபாய் வைத்துவிட்டு வருவோம். ஆனால் நாளைக்கு நடப்பதோ சிறப்பான விருந்து, கூட்டணி விருந்து. அடுத்து அ.தி.மு.க ஆட்சி நிலைக்க வேண்டுமென்றால் இடைத்தேர்தலில் பா.ம.க வின் துணையோடு அ.தி.மு.க வெற்றி பெற வேண்டியது அவசியமானது . ஆகவேதான் இந்த விருந்து எங்களைப் பொறுத்தவரை பா.ம.க.வுக்கு சூப்பர் விருந்து என நினைக்கிறோம். ஆக விருந்துக்கு போகும் முதல்வர் மொய் வைத்துவிட்டு வருவார் என்பது உறுதி. நாம் வைக்கும் மொய் 500 ரூபாய் என்றார் அவர்கள் வைக்கும் முறை அதே கணக்கில் பெரிய அளவாகத்தானே இருக்கும்.  என பளிச்சென நம்மிடம் சிரித்தார் அதிமுக எம்எல்ஏ. கூட்டணி என்றால் தேவையான தொகுதி மட்டுமில்லை கட்சி நடத்த  தேவையானதையும் பெறுவதில் தமிழகம் முன்னோடி தான் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அறுசுவை உணவு 500 பரிமாறுவது சிறப்புத்தான் என பூடகமாக கூறுகிறார்கள் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக மா.செ. கூட்டம்; தேதி அறிவிப்பு

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

AIADMK M.S meeting; Notification of date

 

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அண்மையில் அதிமுகவின் 'பொன்விழா எழுச்சி மாநாடு' மதுரையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டைத் தொடர்ந்து அடுத்தபடியாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்த அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளது.

 

இந்நிலையில், வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மதுரை மாநாட்டை நடத்துவதற்கு அமைக்கப்பட்டிருந்த குழுவினருடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. கொடநாடு விவகாரம், அண்ணாமலையின் பாத யாத்திரை, இந்தியா கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

 

 

Next Story

“விலைவாசி ஏற்றத்தை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” - ஓ.பன்னீர்செல்வம்

Published on 05/07/2023 | Edited on 05/07/2023

 

paneerselvam press statement for vegetable price hike issue

 

விளைச்சல் குறைவு மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளி மற்றும் பல்வேறு காய்கறிகளின் விலை கடந்த ஒரு வாரமாக  உயர்ந்துள்ளது. இதையடுத்து தமிழக அரசு சார்பில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தவும், அரசு தரப்பில் குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்யவும் கூட்டுறவுத்துறை மூலம் தக்காளி கிலோ ஒன்றுக்கு 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் 35,000-க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகள், குறிப்பாக நகர்ப்புறங்களிலேயே ஆயிரக்கணக்கான ரேஷன் கடைகள் இருக்கின்ற நிலையில், வெறும் 82 ரேஷன் கடைகள், 62 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 3 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் என 147 கடைகள் மூலம், ஒரு கடைக்கு 100 கிலோ என்ற அடிப்படையில் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பும், இலட்சக்கணக்கான கிலோ தக்காளி ஒரு நாளைக்கு மக்களுக்கு தேவைப்படுகின்ற நிலையில் மேற்படி கடைகள் மூலம் வெறும் 5500 கிலோ தக்காளி மட்டுமே ஒரு நாளைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதும் யானை பசிக்கு சோளப் பொறி போடுவது போல் அமைந்துள்ளது. தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னை மற்றும் நகரப் பகுதிகளில் காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.

 

உதாரணமாக, பெங்களூர் தக்காளி ஒரு கிலோ 145 ரூபாய்க்கும், நாட்டு தக்காளி ஒரு கிலோ 115 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் கிலோ 170 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், காரட் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வீட்டிலும் காய்கறி செலவு மட்டும் மும்மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால், தி.மு.க. அரசோ தக்காளி மட்டும் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு குறைந்த ரேஷன் கடைகளில் குறிப்பிட்ட அளவு விற்பனை செய்யப்படும் என்று அறிவித்து இருப்பது வியப்பாக உள்ளது.

 

பொதுவாக காய்கறிகள் விலை உயர்வுக்கு விளைச்சல் குறைவு, வரத்துக் குறைவு, பதுக்கல், கடத்தல் என பல காரணங்கள் கூறப்படுகின்றன. மக்கள் வாங்கும் திறனுக்கு ஏற்பப் பொருள்களை அதிகமாக உற்பத்தி செய்யவும், இயற்கைச் சீற்றங்களிலிருந்து இன்றியமையாப் பொருட்களை காப்பாற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தவிர வியாபாரம் என்ற பெயரில் கொள்ளை இலாபம் ஈட்டுவோரையும், பொருட்களை பதுக்கி வைத்து பற்றாக்குறை ஏற்படுத்தி பொருட்களின் விலையேற்றத்திற்கு காரணமானவர்களையும் கண்டறிந்து அவர்கள்மீது சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க. அரசு இவற்றையெல்லாம் சரிவரச் செய்யாததுதான் தற்போதைய காய்கறிகள் விலை ஏற்றத்திற்கு முக்கியக் காரணம். இதைச் செய்யாமல், விலை உயர்ந்த பிறகு அவற்றை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்குவது என்பது தும்பை விட்டு வாலைப் பிடிப்பதற்குச் சமம். கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு சென்னை மற்றும் இதர நகரப் பகுதிகளில் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வந்துள்ளன.

 

உண்மை நிலை என்னவென்றால் வெளிச்சந்தையில் ஒரு கிலோ தக்காளி 145 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதர காய்கறிகளும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இலாபம் அடைபவர்கள் இடைத்தரகர்களே தவிர, நுகர்வோர்களும், விவசாயிகளும் அல்ல. இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், சொற்ப எண்ணிக்கையிலான கடைகளில், குறைந்த அளவில், தக்காளி ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று தி.மு.க. அரசு அறிவித்திருப்பதைப் பார்க்கும்போது, தி.மு.க.வினரே இடைத்தரகர்களாக செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

எது எப்படியோ, தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் குறைந்த விலையில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் கிடைக்கும் வகையில் கடைகளின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கவும், பதுக்கலைத் தடுக்கவும், இனி வருங்காலங்களில் விலைவாசி ஏற்றத்தை அவ்வப்போது கண்காணித்து அதனைத் தடுக்கவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.