Skip to main content

’10ம் தேதி இறுதி காணொளி , 11-ம் தேதி கண் கலங்குவீர்கள்’-ராமர் பிள்ளையின் மரண வாக்குமூலம்

Published on 06/12/2018 | Edited on 06/12/2018

 

r

 

மூலிகை பெட்ரோல் ராமர்பிள்ளை யூடியூப் இணையதளத்தில் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  ’பாரத பிரதமருக்கும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் ராமர் பிள்ளையின் கருணை மனு’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு தனது மரண வாக்குமூலம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

மூலிகை பெட்ரோல் சோதனையை நிரூபிக்கவும்,  மூலிகை பெட்ரோல் சோதனை தொடர்பான ரகசியங்களையும் வெளியிடுவேன்.  ஆனால், அதற்கு முன்பாக மரணத்தின் விளிம்பில் நின்று கேட்டுக்கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.  அவர்  தனது வீடியோ பதிவில்,  ’’என்னுடைய தமிழ் மக்களுக்கு அன்பான வேண்டுகோள்.  இது என்னுடைய இறுதி காணொளி. இனிமேல் நான் காணொளியில் பேசமாட்டேன்.   இது என்னுடைய மரண வாக்குமூலம் என்று சொன்னால் சரியாக இருக்கும்.  என் உயிரை பணயம் வைத்தாவது உங்கள் கையில் சேர்ப்பேன் என்று  நான் அளித்த வாக்குறுதிப்படி என்னுடைய செய்முறை விளக்கத்தை உங்கள் கையில் சேர்ப்பேன். அதற்காக டிசம்பர் 10ம் தேதியை முடிவு செய்திருக்கிறேன்.  10ம் தேதிக்குள் நான் மக்களுக்கு மூலிகை பெட்ரோல் பார்மூலாவை சமர்ப்பிக்க வேண்டும்.   

 

ஆகவே, உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை ஒரு வழக்காக அதுவும் அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்.  நான் உங்கள் முன் மூலிகை எரிபொருளை உற்பத்தி செய்து காட்டுகிறேன்.  அதை சோதனைக்கு அனுப்பி வையுங்கள்.  நான் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன்.   நான் அதை நிரூபிக்க தவறிவிட்டால் ஆயுள்தண்டனை கொடுத்து சிறையில் அடைத்துவிடுங்கள்.  இல்லையென்றால் தூக்கு தண்டனை கூட கொடுத்துவிடுங்கள்.  நான் தயாராக இருக்கிறேன்.  நீதிமன்றம் தாமாக முன்வந்து இதை விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.   நான் வருகின்ற 11ம் தேதி உயிருடன்  இருப்பேனா? இல்லையா? என்பது உயர்நீதிமன்ற நீதிபதி கையிலும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கையிலும், தமிழிசை சவுந்தரராஜன் கையிலும் இருக்கிறது.   10ம் தேதி இரவு எனது உயிர் பிரிந்துவிட்டாலும் இறுதி காணொளி காட்சி ஒன்று வெளியாகும்.   என் அருகில் இரண்டு கல்லூரி மாணவ, மாணவிகள் இருப்பார்கள்.   அவர்கள் சொல்லும் செய்முறை விளக்க வீடியோவை பார்த்துவிட்டு 11ம் தேதி என்னை குற்றம் சொல்லியவர்கள் கண் கலங்குவீர்கள்.   இது உறுதி’’ என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மூலிகை பெட்ரோலுக்கு அங்கீகாரம் - ராமர் பிள்ளை

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

Endorsement of herbal petrol - Ramr Pillai

 

மூலிகை பெட்ரோல் மூலம் பிரபலமானவர் ராமர் பிள்ளை. இவர் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர், நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு நீதிமன்றம் தனது மூலிகை பெட்ரோல் கண்டுபிடிப்பை அங்கீகரித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

மூலிகை பெட்ரோல் ஒரு லிட்டர் 15 ரூபாய்!  - விடுதலைக்குப் பின்  ராமர் பிள்ளை பேட்டி!      

Published on 26/04/2023 | Edited on 26/04/2023

 

Ramar Pillai has informed that herbal petrol will be sold at Rs 15 per litre

 

போலி பெட்ரோல் மோசடி வழக்கிலிருந்து விடுதலையான ராமர் பிள்ளை ராஜபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, முதலில் அவருடைய சட்ட ஆலோசகர் சொக்குசாமி பாலசுப்பிரமணியம் பேசினார்.

 

“ராமர் பிள்ளை கண்டுபிடித்தது மூலிகை பெட்ரோல் கிடையாது. போலியாக வேதிப் பொருட்களைக் கொண்டு தயாரித்தார் என்று கடந்த 2000ல் சிபிஐ  மூலம் மோசடி வழக்கு பதிவாகி, 2016ல் சென்னை எழும்பூர் நீதிமன்றம், ராமர் பிள்ளைக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து, கூடுதல் அமர்வு  நீதிமன்றத்தில்  ராமர் பிள்ளை மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின்  தீர்ப்பு மூலம் ராமர் பிள்ளை விடுதலை செய்யப்பட்டார்.” என்றார்.     

 

இதனைத் தொடர்ந்து ராமர் பிள்ளை “1999ல் மூலிகை பெட்ரோலை கண்டுபிடித்தேன். முறையான அனுமதி பெற்று ஆலை தொடங்கினோம். மூலிகை பெட்ரோல் தயாரித்து ஒவ்வொரு லிட்டருக்கும் அரசுக்கு வரி செலுத்தி மூலிகை பெட்ரோலை விற்றோம். இந்த நிலையில்தான், அது  போலி பெட்ரோல் என்று வழக்கு தொடரப்பட்டது. முதன் முதலில்  ராஜபாளையத்தில்தான் மூலிகை பெட்ரோலைத் தயாரித்து வெளியிட்டேன். இப்போது என் மீதுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பொய்யென்று நிரூபித்துவிட்டேன். விரைவிலேயே விருதுநகர் மாவட்டத்தில் பெரிய  அளவில் மூலிகை எரிபொருள் உற்பத்தி ஆலை தொடங்கப்படும். அந்த ஆலையில் மூலிகை எரிபொருள் உற்பத்தி நடக்கும். மூலிகை பெட்ரோலை குறைந்த விலையில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.15-க்கு வழங்குவோம். அது புகையில்லாத எரிபொருளாகவும் இருக்கும். இந்தக் கண்டுபிடிப்பை தொழிலதிபர்கள் முன்பாக நிரூபித்திருக்கிறேன். புதிய ஆலை தொடங்குவதற்கு முதலீட்டாளர்கள் முன்வந்திருக்கிறார்கள். விரைவிலேயே புதிய ஆலை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்குவோம். என்னுடைய கண்டுபிடிப்புக்கு இனி எந்தப் பிரச்சனையும் இல்லை.” எனப் பேட்டியளித்தார்.