Skip to main content

மூடப்பட்ட ரயில்வே கேட்; பரிதாபமாக உயிரிழந்த மாணவி

Published on 12/07/2023 | Edited on 12/07/2023

 

Railway Gate closed; A student who passes away

 

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே விருசங்குளத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவருக்கு 18 வயதில் ஒரு மகள் இருந்தார். அவர் திருமங்கலம் கப்பலூர் அரசு கலை கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால், அப்போது அங்கிருந்த பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர்.

 

தகவல் அறிந்து 108 ஆம்புலன்ஸ் திருமங்கலத்திலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அப்போது வரும் வழியில் ரயில் வருகைக்காக ரயில்வே கேட் மூடப்பட்டதால் 108 ஆம்புலன்ஸ்  20 நிமிடங்களுக்கும் மேலாக அந்த ரயில்வே கேட்டில் சிக்கி நின்றது. ஆம்புலன்ஸ் ரயில்வே கேட்டில் சிக்கிருப்பதை அறிந்த மாணவியின் உறவினர்கள், அவரை இருசக்கர வாகனத்தில் அமர வைத்துக்கொண்டு வந்தனர். பிறகு ரயில்வே கேட்டில் மாணவியை ஆம்புலன்ஸுக்கு மாற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.  

 

 

சார்ந்த செய்திகள்