Skip to main content

வெறிநாய்கள் அட்டகாசம்.... சிறுவனைக் கடித்துக் குதறி காட்டிற்குள் இழுத்துச் சென்ற கொடூரம்!

Published on 05/09/2021 | Edited on 05/09/2021

 

The rabid dogs roared .... The cruelty of biting the boy and dragging him into the jungle!

 

நெல்லை மாவட்டத்தின் கடையநல்லூர் மக்கள் நெருக்கம் கொண்ட நகரம். இங்குள்ள அரசு மருத்துவமனையின் மேல்புற ஒதுக்குப்பகுதியில் அன்றாடம் நகரில் சேரும் கோழிக் கழிவுகள் மற்றும் ஆட்டிறைச்சிக் கழிவுகளைக் கொட்டுவது வழக்கமாக இருந்திருக்கிறது. இரத்தமும் சதையுமாக இருக்கும் அந்தக் கழிவுகளை அன்றாடம் நாய்களின் கூட்டம் தின்று வருவதன் காரணமாக அவைகளுக்கு வெறி ஏறியதாகச் சொல்லப்படுகிறது. மேலும் அந்த இடத்தில் 10க்கும் மேற்பட்ட நாய்கள் அன்றாடம் சதைக்கழிவுகளைத் தின்று வருகின்றன என்கிறார்கள் அந்தப் பகுதியினர்.

 

இதனிடையே கடையநல்லூர் மேற்கு மலம்பாட்டடை பகுதியைச் சேர்ந்த செய்யது அலி மகனான சிறுவன் ஆதில்(7) கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்தப் பக்கமாகச் சென்றிருக்கிறான். அது சமயம் அந்தச் சிறுவனை சுற்றிய 10க்கும் மேற்பட்ட வெறிநாய்கள் கூட்டம் அவனைச் சுற்றி வளைத்துக் கடித்துக் குதறியிருக்கிறது. மட்டுமல்ல அப்படியே அந்தச் சிறுவனை காட்டுப்பகுதியை நோக்கி இழுத்துச் சென்றபோது சிறுவனின் கதறல் கேட்டு அந்த வழியாக சென்ற சிலர் நாய்களை விரட்டிவிட்டு படுகாயமடைந்த சிறுவன் ஆதிலை கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்திருக்கின்றனர். அங்கே ஆரம்பகட்ட சிகிச்சைக்குப் பின்பு தென்காசி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். வெறி நாய் கடிகளால் படுகாயமுற்ற சிறுவனுக்கு அங்கே அவசர சிகிச்சை நடைபெற்று வருகிறது. 

 

இதுகுறித்து தகவலறிந்த தி.மு.க.வின் வ.மா.செ.செல்லத்துரை தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் ஆதிலை பார்வையிட்டு பெற்றோர்களுக்கு ஆறுதலும் சொன்னார். தொடர்ந்து சிறுவனின் உடல் நலம் மற்றும் மருத்துவ சிகிச்சை குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தவர் மாவட்டக் கழகம் சார்பில் நிவாரண உதவிகளும் வழங்கியிருக்கிறார். தொடர்ந்து கடையநல்லூர் நகராட்சி ஆணையரை தொலைபேசியில் தொடர்பு கொண்டவர் சிறுவன் ஆதிலின் நிலைமைகளைச் சொல்லி கடையநல்லூரைச் சுற்றித் திரியும் வெறிநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

 

அதே சமயம் நகரவாசிகளும் இந்தக் கொடூர சம்பவம் காரணமாக பீதியில் உறைந்து போனவர்கள் நகராட்சி நிர்வாகம் உடனடியாக வெறிநாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.