Skip to main content

2021-லும் இபிஎஸ்தான் முதல்வர்... வழக்கம்போல் ரஜினி அந்த அதிசயத்தை வேடிக்கை பார்ப்பார்- புகழேந்தி பேட்டி! 

Published on 20/11/2019 | Edited on 20/11/2019

டிடிவியின் தீவிர ஆதரவாளராக இருந்த புகழேந்தி கடந்த சில மாதங்களாகவே டிடிவி-க்கு எதிராக செயல்பட்டுக் கொண்டு ஊர் ஊருக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக போட்டி கூட்டங்களை போட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உள்ள கட்சி பொறுப்பாளர்களையும், தொண்டர்களையும் தன் பக்கம் இழுத்து வருகிறார். இப்படி  கட்சியை உடைத்து ஆதரவாளர்களை திரட்டி வரும் புகழேந்தி கூடிய விரைவில் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைய இருக்கிறார்.

 

PUGAZHENDTHI INTERVIEW

 

இந்தநிலையில் திண்டுக்கல் ஆலோசனை கூட்டத்திற்கு வந்த புகழேந்தி பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, 

நடத்துனர் சிவாஜி ராவாக சென்னைக்கு வந்த ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக மாறியது ஆச்சரியம் இல்லையா. பாஜக ரஜினிகாந்தின் வருகையை எதிர்பார்த்து ஏமாந்து தற்போது வாசன் தலைமையில் கட்சியை ஒப்படைக்க இருக்கிறது. அந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள இயலாமல் ஆத்திரத்தில் ரஜினிகாந்த் உளறுகிறார். 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெற்று முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி மீண்டும்  முதலமைச்சராக பதவியேற்பார். வழக்கம்போல நடிகர் ரஜினிகாந்த்  கட்சியை துவக்காமல் இந்த அதிசயத்தை வேடிக்கை பார்ப்பார். எம்எல்ஏவாக, எம்பியாக அமைச்சராக 45 ஆண்டு காலம் அரசியல் அனுபவம் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக மீண்டும் வருவார் என்று கூறினார். 

பேட்டியின்போது நகர மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் உடனிருந்தனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.