Skip to main content

மாணவர்களுக்கு பாலியல் தொல்லை; அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்!

Published on 02/10/2024 | Edited on 02/10/2024
pudukkottai dt alangudi govt boys high sec school history teacher suspended

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆண்டுகளாக வரலாறு பாட ஆசிரியராக உள்ள கீழகரும்பிரான்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(வயது 40). இவர் திருமணம் செய்து கொள்ளாமல் ஆலங்குடி நகரில் உள்ள ஒரு வீட்டில் வசிக்கிறார். தனது பள்ளி மாணவர்களை வீட்டிற்கு வரச் சொல்லி அவர்களுக்கு உணவு கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் பல மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் சில மாணவர்கள் 1098க்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் இந்த புகார் குறித்து புதுக்கோட்டை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் வசந்தகுமார் விசாரனை செய்தார். அதனைத் தொடர்ந்து ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் போலிசார் விசாரனை செய்து போக்சோ வழக்கு பதிவு  செய்து ஆசிரியர் சக்திவேலை கைது செய்தனர். இதனையடுத்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலக தகவல் மற்றும் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சண்முகம் ஆலங்குடி ஆசிரியர் சக்திவேலை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார். இந்த சம்பவத்தால் ஆலங்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்