Skip to main content

தொடர் ரெயில் மறியல் போராட்டம் - பி.ஆர்.பாண்டியன்

Published on 22/04/2018 | Edited on 22/04/2018
p.r.pandiyan


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் தொடர் ரெயில் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறினார். 
 

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 
 

தமிழகத்தில் காவிரி உரிமை மீட்பு போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதை பொறுத்துக்கொள்ள முடியாத பா.ஜ.க., ஒரு சில தலைவர்களை சதி திட்டத்தில் ஈடுபடுத்தி வருகிறது. தமிழக அரசியல் கட்சிகள், பா.ஜ.க.வின் சதியை முறியடிக்க காவிரி போராட்டத்தை ஒன்றுபட்டு தீவிரப்படுத்த வேண்டும். இதற்காக இருசக்கர வாகன பேரணி நடத்துகிறோம்.
 

வருகிற 25-ந் தேதி முதல் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில், வேதாரண்யத்திலிருந்து இந்த பேரணி தொடங்குகிறது. இப்பயணம் தஞ்சாவூர், கல்லணை, திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், மேட்டூர், தர்மபுரி, வேலூர், காஞ்சீபுரம், சென்னை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, காரைக்கால், நாகப்பட்டினம் வழியாக வருகிற 29-ந்தேதி திருவாரூர் நகரத்தில் நிறைவடையும்.
 

மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை மே 1-ந் தேதி முதல் சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் முதல் திருவொற்றியூர் வரை ரெயில் பாதையில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் தொடர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறினார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

"ஓ.என்.ஜி.சி. கிணறு அமைக்க கால நீட்டிப்பு செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்"- பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை!

Published on 13/09/2020 | Edited on 13/09/2020

 

tiruvarur district ongc union government

ஓ.என்.ஜி.சி. கிணறு அமைக்கும் காலத்தை 2023- ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு செய்யும் மத்திய அரசு அந்த முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் அனைத்து விவசாய சங்க கூட்டமைப்பின் தலைவர் பி.ஆர்.பாண்டியன்.

 

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதற்காக தமிழக முதல்வர் பழனிசாமிக்கும் காவிரி காப்பாளர் என்கிற பட்டம் வழங்கி பாராட்டு விழாவும் நடந்தது. இந்நிலையில் மத்திய அரசு 2020 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு மசோதா என்ற பேரில் விவசாயிகளின் கருத்துக்களைக் கேட்காமலேயே மாசுகட்டுப்பாட்டு துறை அனுமதியின்றியும், மாநில அரசுகளின் ஒப்புதலின்றியும் ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற பேரழிவு திட்டங்களை நிறைவேற்ற மாபெரும் சதித் திட்டத்தை அரங்கேற்றி வருகிறது.

 

இந்தநிலையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம், கோட்டூர் ஒன்றியம் பெரியகுடி ஹைட்ரோகார்பன் எரிவாயு எடுப்பதற்கு தோண்டப்பட்டு நிறுத்தப்பட்டுள்ள கிணறு அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், "கடந்த 2013- ல் திருவாரூர் மாவட்டம், பெரியகுடி கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஹைட்ரோகார்பன் எரிவாயு கிணறு அமைக்கும் போது கட்டுகடங்காத வாயு வெடித்து குழாயை உடைத்துக் கொண்டு வெளியேறியது. இதனையறிந்த விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டோம். தொடர்ந்து தீயை அணைத்து கிணறு தோண்டும் பணி நிறுத்தப்பட்டது.

 

பின்னர் இக்கிணற்றை சுற்றி இருள்நீக்கி,விக்கிரபாண்டியம், ஆலாத்தூர், மாவட்டக்குடி, குலமாணிக்கம், பெரியகுருவாடி, பள்ளிவர்த்தி, சேந்தமங்கலம் கிராமங்களில் 8 கிணறுகள் புதிதாக அமைக்க மத்திய அரசின் மாசுகட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்கியது. இது குறித்து 2014-ல் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் கருத்துக் கேட்பு கூட்டத்தில் அனுமதி வழங்க கூடாது என ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டு தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் ஓ.என்.ஜி.சி.க்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டதோடு நிலம் கொடா இயக்கமும் துவங்கப்பட்டு விவசாயிகள் நிலம் அளிக்க மாட்டோம் என உறுதியேற்றனர்.

 

இந்நிலையில் தமிழக அரசு காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக 2020- ல் ஜனவரி மாதம் அறிவித்து தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், வேளண்மை துறை சார்பில் தனித்தனியே அரசாணைகளும் வெளியிடப்பட்டுள்ளது. இதனை முடக்கும் உள்நோக்கத்தோடு மத்திய அரசு மேற்கண்ட 8 கிணறுகளை மீண்டும் தோண்டுவதற்கு 2023- ஆம் ஆண்டு வரை  கால நீட்டிப்பு வழங்க ஓ.என்.ஜி.சி.யின் விண்ணப்பத்தை ஏற்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு பரிந்துரைத்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இதனை மத்திய அரசு உடன் கைவிட வலியுறுத்துகிறோம். மேலும் தமிழக அரசு இதனை தடுத்து நிறுத்த அவசர கால நடவடிக்கைகளை மேற்க்கொள்ள வேண்டுகிறோம்" என்றார்.

 

 

Next Story

வைகோவை பொது வேட்பாளராக அறிவிக்க வேண்டுகோள்!

Published on 18/02/2019 | Edited on 18/02/2019

 


தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
 

அப்போது அவர், 
 

தமிழ்நாட்டில் தூத்துகுடி மாவட்டத்தில் பேரழிவை ஏற்படுத்தி வந்த நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மக்களின் போராட்டம் தீவிரமடைந்தது. ஆலையை மூட வேண்டிய தமிழக அரசு 13 உயிர்களை பழி வாங்கியது. பின்னர் அரசே ஆலையை மூடி சீல் வைத்ததோடு உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.
 

இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக சமரசமின்றி மக்கள் போராட்டத்தையும், சட்டப் போராட்டத்தையும் நடத்தி வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தமிழக அரசின் வழக்கு இறுதி விசாரனை முடிவடைந்த நிலையில் தீர்ப்பும் வேதாந்தாவிற்கு சாதகமாக வந்து விடுமோ என அரசும், பொதுமக்களும் அச்சமடைந்த நிலையில் நீதிமன்றத்திற்குள் சென்ற வைகோ நீதிபதிகளிடம் முன்வைத்த தனது கடுமையான வாதத்தால் அறிவிக்கும் நிலையிலிருந்த தீர்ப்பையை நிறுத்தி வைத்தது. 
 

இதனால் நீதிபதிகளே அதிர்ச்சி அடையும் நிலையை உருவாக்கியது. உலகமே வியந்தது. இதுவே உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல் முறை என்ற நிலையை உருவாக்கியது. இந்திய அரசியலில் அசைக்க முடியாத ஜாம்புவான் வைகோ என்ற அதிர்ச்சியை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தியது.

 

p.r.pandiyan - vaiko


 

 இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுத்து மூடியதை உறுதி படுத்தி உள்ளதை விவசாயிகள் சார்பில் வரவேற்கிறோம். தமிழக அரசுக்கு பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 

மத்திய அரசின் தமிழக விரோத செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவும், திருக்கார வாசல், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் பேரழிவு திட்டங்கங்களுக்கு எதிராகவும், காவிரி உரிமை மீட்பிற்கும் பாராளுமன்றத்தில் சமரசத்திற்கு இடமின்றி குரல் கொடுத்து தமிழக உரிமைகளை மீட்கும் வகையில் வைகோ அவர்களை பொது வேட்பாளராக அறிவித்து வெற்றி பெற செய்வது நம் அனைவரின் கடமை என்பதை உணர்ந்து அரசியல் கட்சிகள் உதவிட முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.