Skip to main content

முற்றுகையிட்ட தொகுதி மக்கள்!  டென்ஷன் அடைந்த ஓபிஎஸ்!!

Published on 10/12/2018 | Edited on 10/12/2018
ops

 

பாராளுமன்ற தேர்தலும் இடைத்தேர்தலும் கூடிய விரைவில் வர இருப்பதால் அமைச்சர்களும் அவ்வப்போது தொகுதி பக்கம் தலை காட்டி வருகிறார்கள். அதுபோலத் தான் துணை முதல்வர் ஓபிஎஸ் தேனி மாவட்டத்தில் உள்ள தனது போடி தொகுதியில் விசிட் அடித்து தொகுதி மக்களின் குறை தீர்க்கும் முகாமை நடத்தி வருகிறார்.

 

 கடந்த 7ம் தேதி போடி தொகுதியில் உள்ள தேனி ஒன்றிய பகுதியில் இருக்கக்கூடிய அரண்மனைப்புதூர்,  கோட்டைப்பட்டி,  வீரசின்னம்மாள் , பள்ளபட்டி,  மரியாதை வெட்டி உள்பட சில கிராமங்களுக்கு சென்ற ஓபிஎஸ்சை அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அதோடு எங்கள் பகுதிக்கு முல்லைப் பெரியாறு ஆற்றில் இருந்து குடிநீரும் நூலகம் சாலை சாக்கடை கழிப்பிட வசதிகள் மற்றும் முதியோர் உதவித்தொகை வேண்டும் என கோரி பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர். அதை உடன் வந்த மாவட்ட கலெக்டரிடம் கொடுத்து மக்கள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுக்க உத்தரவிட்டார்.  

 

op

 

அதைத்தொடர்ந்து மறுநாள் எட்டாம் தேதி உப்பார்பட்டி திருமண மண்டபத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் இருக்கு மாலை நாலரை மணிக்கு ஓபிஎஸ் வந்தார்.   அப்போது அங்குள்ள மக்கள் எங்கள் பகுதிக்கு எங்கள் பகுதியில் குடிநீர் கழிப்பிட வசதிகள் இல்லை எனக் கோரி மனு கொடுத்த மக்களிடம் உங்கள் குறைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கிறேன் என்று கூறி அப்பகுதி மக்கள் கொடுத்த மனுக்களையும் ஓபிஎஸ் பெற்றுக்கொண்டு கோட்டூர் புறப்பட்டார்.  ஆனால் கோட்டூரில் ஒருவர் தவறி விட்டதாக ஓபிஎஸ்-க்கு தகவல் கிடைக்கவே திரும்ப வரும்போது கோட்டூர் செல்லலாம் எனக் கூறி சீலையம்பட்டி மக்கள் குறைதீர்க்கும் முகாமுக்கு சென்றார்.  அப்பொழுது ஊர் எல்லையில் பொதுகழிப்பிடம் இருக்கும் இடத்தில் இருபதுக்கும் மேற்பட்ட மக்கள் ஓபிஎஸ் காரை திடீரென  முற்றுகையிட்டு ஆறு மாதமாக இந்த பொதுக்கழிப்பறையை சுத்தம் செய்யவும் இல்லை.  தண்ணீர்வசதியும் இல்லை.  அதனால நாங்கள் ரோட்டு ஓரங்களில் ஒதுங்கி வந்தோம் .   இப்ப நீங்க  வருகிறீர்கள் என்று தெரிந்தவுடன்  இந்த பாத்ரூமை சுற்றியிருந்த முள்செடிகளையும்.பாத்ரூமையும் சுத்தப்படுத்தி தண்ணீருக்காக பைப் லயனையும் பஞ்சாயத்து போர்டுகிளார்க்( ரதவேல்) போட்டுஇருக்கிறார் .  ஆனால்  அதில்  தண்ணீர் வரவில்லை பெயருக்கு மாட்டி இருக்கிறார்.  அதை வந்து பாருங்க என்று ஓபிஎஸ் சிடம் கூறினார்கள்.  அதற்கு ஓபிஎஸ்சும் அந்த பைப்பில் தண்ணீர்  கொடுக்க சொல்கிறேன் என்று
கூறினார்.

 

o

 

 அப்படி இருந்தும் கூட அந்த மக்கள் ஓபிஎஸ் காரை விடாமல் நீங்க இறங்கி வந்து கழிப்பறையை பாருங்க என தொடர்ந்து வற்புறுத்தினார்கள்.  இதனால் டென்ஷன் அடைந்த ஓபிஎஸ் உடனே காரை விட்டு இறங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.  பார்வையிட்டு விட்டு வெளியே வந்தார்.  அப்பொழுது அதன் அருகே நின்று கொண்டிருந்த மக்கள் இந்தப் பகுதியில் பாதிதான் போட்டிருக்கிறார்கள்.  பாதிக்குமேல் ரோடு போடவில்லை.  இந்த  இந்த கழிப்பறையை சுத்தம் செய்யாததாலா துர்நாற்றம் வீசிவருவதால் மக்கள் இந்த பகுதியில் போய் வர முடியவில்லை.  அதை சரி செய்ய சொல்லுங்கள் என முறையிட்டனர்.  

                    

o3

 

தொடர்ந்து  காரில் ஏறிய ஓபிஎஸ்சை ஸ்ரீ தளத்திலேயே மற்ற பகுதி மக்கள் மரித்து எங்கள் பகுதிக்கு 15 நாளைக்கு ஒரு முறைதான் தண்ணீர் வருகிறது அந்த தண்ணீரை முறையாக வருவது இல்லை அப்படி இருக்கும்போது சரி கட்ட சொல்லி எங்களை மிரட்டி வருகிறார் என முறையிட்டனர் அதையும் கேட்டுவிட்டு அருகே உள்ள திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு சென்றார் அங்கு கூடியிருந்த மக்களும் குடிநீர். கழிப்பறை‌. லைட் வசதிகள் இல்லை என  ஓபிஎஸ் இடம் கூறினார்கள். அதைஎல்லாம்  பொறுமையாக கேட்டு விட்டு அந்த மக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களையும் பெற்றார் ஆனால் சீலையம்பட்டியை  பொறுத்தவரை ஒரே சமூகத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் தான் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள்.  அப்படி இருந்தும் கூட ஓபிஎஸ்சின் இந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் வெறும் நூறு பேருக்குள் தான் கலந்துகொண்டனர்.  அந்த அளவுக்கு இப்பகுதியில்   பெரும்பான்மையாக உள்ள தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் இருந்தும் கூட  ஓபிஎஸ் நடத்திய குறைதீர்க்கும் கூட்டத்தை  புறக்கணித்து இருப்பதை பார்க்க முடிந்தது.  அதை கண்டு ஓபிஎஸ்சும் டென்ஷனாக இருந்தார்.  அதன்பின்  கோட்டூர் மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு ஒபிஎஸ் வருவார் என காலையிலிருந்து அப்பகுதி மக்களை திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து இருந்தனர் அப்படி இருந்தும் திடீரென ஓபிஎஸ் இந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமிற்கு   வரவில்லை வேறு ஒரு நாள் மனு வாங்கும் முகாம் நடைபெறும் என மைக்கில் கட்சிக்காரர்கள் கூறியதை  கண்டு மக்கள் டென்ஷனாகவே  திரும்பிச் சென்றனர்.  இப்படி திடீரென்று ஓபிஎஸ் கோட்டூர் புரோகிராமை கேன்சல் செய்தது அப்பகுதி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் பா.ஜ.க., அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Announcement of constituencies contested by BJP and its allies in TN

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்தவகையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (21.03.2024) வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகி யுள்ளது. அதன்படி திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. அதே சமயம் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

Next Story

இரட்டை இலை சின்னம் வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Madras High Court action decision on double leaf symbol case

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. 

அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. 

அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், “பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே எந்த தடையும் விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இதனையடுத்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில், அ.தி.மு.க. கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் எனவும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி நிவாரணம் பெற ஓ. பன்னீர்செல்வத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த 4 ஆம் தேதி (04.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்னமும் தன்னை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது. அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் இன்னமும் தன்னை ஒருங்கிணைப்பாளராக கூறி வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமியின் தரப்பு வாதம் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (18-03-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், ‘அதிமுக இரட்டை இலை சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், தற்போது நிரந்தர தடை விதித்திருப்பது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.