Skip to main content

தனியார் நிறுவனத்துக்கு கைக்கூலியாக இருப்பது மிக கேவலம்...: சிவசங்கர் கண்டனம்

Published on 25/05/2018 | Edited on 25/05/2018
eps

 

 


தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அறவழியில் இன்று (25.05.2018) முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. 
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சிவசங்கர், 


தமிழகத்தின் ஒட்டுமொத்த நிர்வாகமும் இன்றைக்கு சீர்குலைந்த நிலையில் இருக்கிறது. அதில் கடைசி செயலாக தூத்துக்குடி துப்பாக்கி சூடு அமைந்திருக்கிறது. 100 நாட்கள் போராடிய மக்களை சமாதானபடுத்த அரசும் முன்வரவில்லை. அரசு அதிகாரிகளும் முன்வரவில்லை. போராட்டகளத்தில் எவ்வளவு பேர் திரளுவார்கள் என்பதை அரசும் அறிந்திருந்தது, காவல் துறையும் அறிந்திருந்தது.


அவர்களை தடுத்து நிறுத்துவதை விடுத்துவிட்டு, அவர்களை தாக்கி கொலை செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு இருக்கிறார்கள். அதற்காக தனித்த அடையாளத்தோடு ஒரு துப்பாக்கி சூடு குழு தயார் செய்யப்பட்டுள்ளது. எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் துப்பாக்கி சூடை தொடங்கி இருக்கிறார்கள். துப்பாக்கி சூடு நிகழ்த்துவதற்கு முன்பாக தண்ணீர் பீச்சி அடித்தல், அறிவிப்பு என செய்ய வேண்டிய எந்த நடைமுறைகளையும் பின்பற்றாமல், முட்டிக்கு கீழே சுடாமல் நேரடியாக காவல் துறை வாகனத்தின் மீது நின்று கொண்டு குறி வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கிறார்கள் அந்த 11 பேரும்.
 

 

 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு ஒட்டுமொத்த தமிழகமே கொந்தளித்து எதிர்ப்பை தெரிவித்த இருந்த நிலையிலும், எல்லா எதிர்கட்சி தலைவரும் மக்களும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்திருந்த பிறகும், அடுத்த நாளும் துப்பாக்கி சூடை நடத்தி அங்கே ஒருவரை கொன்று இருக்கிறார்கள். 
 

ஒரு தனியார் நிறுவனத்திற்கு கைக்கூலியாக மாநில அரசும் மத்திய அரசும் பணிபுரிவதை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். தாங்கள் கைக்கூலியாக பணிபுரிவதை காவல் துறை துப்பாக்கி சூட்டின் மூலம் மிக வெளிப்படையாக இன்றைக்கு தெரிவித்து இருக்கிறார்கள். வாக்களித்து தேர்ந்தெடுத்த பொதுமக்களுக்கு சேவனாக இருக்க வேண்டிய அரசு, ஒரு தனியார் முதலாளிக்கு ஊழியம் செய்கின்ற பணியாளனாக இருப்பது மிக கேவலமான நிகழ்வு.

 

STERLITE


அதனால் இதனை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டித்திற்கு திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பாக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு கொடுத்திருந்தார். அதன்படி இன்று முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நேற்றைக்கு முதலமைச்சர் அலுவலகத்தில் சென்று இதுகுறித்து வலியுறுத்த சென்றபோது ஸ்டாலினை அங்கிருந்து அகற்றி கைது செய்து இருக்கிறார்கள். ஒட்டுமொத்த தமிழகத்தையும் சீர்குலைத்திருக்கிற இந்த அரசு உடனடியாக பதவி விலக வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வேண்டும் என்ற அவரது கோரிக்கையை ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வாக உணர வேண்டும் என்பதை இந்த இடத்தில் வலியுறுத்திகிறோம். இவ்வாறு கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.