Skip to main content

'மலைகளின் இளவரசி மருத்துவத்துறையின் இளவரசியாக காட்சியளிக்கிறது'- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு!

Published on 11/06/2022 | Edited on 11/06/2022

 

'Princess of the Mountains presents as the Princess of Medicine' - Minister Ma Subramaniam's speech!

 

நாட்டில் அதிகரித்து வரும் கரோனா பரவலை கருத்தில்கொண்டு தனிநபர் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றைத் தொடர்ந்து கடை பிடிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

 

கொடைக்கானல் பகுதியில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்ய வருகை தந்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மகப்பேறு உதவித்தொகை, 100 சதவீதம் கரோனா ஊசி செலுத்திய நகராட்சி மற்றும் ஊராட்சி தலைவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல், முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அடையாள அட்டை வழங்குதல் போன்றவற்றை வழங்கினார்.

 

அதன் பின் அமைச்சர் பேசும் போது... ''கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான 30 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. அரசு ஆஸ்பத்திரிக்கு விரைவில் 2 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் புதிய சிடி ஸ்கேன் வழங்கப்பட உள்ளது. பண்ணைக்காடு அரசு மருத்துவமனையில் கடந்த 1946 ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது அது மிகவும் பழுதடைந்துள்ளது. இதையடுத்து மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் நேரில் பார்வையிட்டு திட்டம் தயாரிக்கப்பட உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு 2 கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் அங்கு விரைவில் கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கொடைக்கானல் பகுதியில் ஒரு லட்சத்து 21 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் இங்கு மூன்று இடங்களில் அரசு மருத்துவமனைகள், 5 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 20 துணை சுகாதார நிலையங்கள், ஒரு நகர்ப்புற சுகாதார நிலையம் உள்ளது. இவற்றுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் விரைவில் செய்து தரப்படும். பூம்பாறை பகுதியில் சுமார் 87 லட்சம் ரூபாய் செலவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குடியிருப்பதற்கு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

 

சட்டமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று அரசு மருத்துவமனை, மாவட்ட மருத்துவ ஆஸ்பத்திரி ஆக தரம் உயர்த்தப்பட்டு அதனை சீரமைக்க சுமார் 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது கொடைக்கானல் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மிகவும் தூய்மையாகப் பராமரிக்கப்படுவது மகிழ்ச்சி அளித்தது. மலைகளின் இளவரசி மருத்துவத்துறையின் இளவரசியாக காட்சியளிக்கிறது. கொடைக்கானல் நகராட்சி பகுதிகள்தான் முதன் முதலாக 100 சதவீதம் கரோனா தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாவது தவணையை சுமார் 92 சதவீதம் அளவுக்கு போடப்பட்டுள்ளது பாராட்டத்தக்கதாகும். திண்டுக்கல் மாவட்டம் தடுப்பூசி போடுவது சாதனை படைத்துள்ளது.

 

'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழ் நேற்று வரை சுமார் 73 லட்சத்து 30 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர். இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து 96 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். முதல்வரின் விருப்பப்படி விரைவில் ஒரு கோடி பேருக்கு மக்களை தேடி மருத்துவத் திட்டம் வீடு தேடிச் சென்று மருந்துகள் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும். மாவட்டத்தில் உள்ள தாடிக்கொம்பு, பாப்பம்பட்டி, எரியோடு, வடமதுரை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் லட்ச ரூபாய் செலவில் சீரமைக்கப்பட உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திற்கு மட்டும் கடந்த ஒரு ஆண்டில் சுமார் 125 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது'' என்று  கூறினார்.

 

இந்த விழாவில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார் பேசும்போது, 'தமிழக அரசு பொறுப்பேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மா.சுப்பிரமணியன் எங்கு சென்றாலும் ஆய்வு நடத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். பழனி சட்டமன்ற தொகுதிக்கு கடந்த எட்டு மாத காலத்தில் பல்வேறு வேலை செய்து கொடுத்துள்ளார். மருத்துவக் கல்லூரி, பழனி அரசு மருத்துவமனைக்கு சுமார் 78 கோடி ரூபாய்களை வழங்கி உள்ளார். கொடைக்கானலில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்கு ஒரு கோடியே 60 லட்ச ரூபாய் செலவில் விடுதி கட்டப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதியில் மத்திய அரசு அனுமதி பெற்று மேலும் ஒரு ஆரம்பச் சுகாதார நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைப்பகுதியில் காலியாக உள்ள மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்'' என்று கூறினார்.

 

இந்த விழாவில்  நகரசபைத் தலைவர் செல்லத்துரை துணைத் தலைவர் மாயக்கண்ணன், ஆர்டிஓ முருகேசன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுப்பையா, ஒன்றிய செயலாளர் ராஜதுரை, நகர செயலாளர் முகமது இப்ராஹிம் உட்பட அதிகாரிகளும் கட்சி பொறுப்பாளர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.