Skip to main content

வன்முறைகளை தடுப்பதற்காக பத்திரிகையாளர்களுக்கான பயிற்சி கருத்தரங்கம்

Published on 10/01/2019 | Edited on 10/01/2019

 

ii

 

தோழமை அமைப்புகள் மற்றும் UNICEF அமைப்பும் இணைந்து, குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்காக பத்திரிகையாளர்களுக்கான பயிற்சி கருத்தரங்கம் ராமநாதபுரத்தில் நடத்தினர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஊடகவியலாளர்களுக்கு குழந்தைகள் பற்றி ஆவணப்படுத்துதல், குழந்தைகளைப் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தும்போது தரம் நிர்ணயம் மேலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வரும்போது அதை முழுமையாக சொல்வதற்கான பயிற்சிகளை UNICEF அமைப்பு, தோழமை அமைப்புடன் இணைந்து பத்திரிகையாளர்களுக்கான கருத்தரங்கத்தை ராமநாதபுரத்தில் நடத்தியது. 

 


இதில் UNICEF ஊடக ஆலோசகர் அஜித் பெஞ்சமின் டேனியல் தோழமை அமைப்பினுடைய இயக்குனர் தேவநேயன் மூத்த பத்திரிகையாளர் திருமலை ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த கருத்தரங்கில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

 

 

இந்த கருத்தரங்கில் மூத்த பத்திரிக்கையாளர் திருமலை பேசும்போது, "குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தொல்லைகள் மற்றும் பிரச்சனைகளின் போது குழந்தைகளின் வருங்காலங்கள் பாதிக்காத வகையில் செய்தி வெளியிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண்பது மட்டுமின்றி, இதுபோன்ற பிரச்சனைகள் இனி சமூகத்தின் நடைபெறாமல் இருக்க பத்திரிகையாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்" என்று அறிவுரைகளை வழங்கினார். மேலும் UNICEF ஊடக ஆலோசகர் அஜித் பெஞ்சமின் டேனியல், "தற்பொழுது வரை குழந்தைகள் எவ்விதமான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்" என்ற புள்ளி விவரங்களையும் எடுத்துரைத்தார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம்; கைது செய்யப்பட்ட 2 பேருக்கு கால் முறிவு!

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
2 persons arrested in the case of attack on the journalist suffered a broken leg

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் நேசபிரபு. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் வழக்கம்போல் கடந்த 24 ஆம் தேதி செய்தி சேகரித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதத்தால் நேசபிரபுவை சரமாரியாக வெட்டி தப்பி ஓடியுள்ளனர்.

இதில் நேசபிரபு படுகாயமடைந்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த நேசபிரபுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய கும்பலைத் தேடி வந்த போலீஸார், 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 2 பேருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது தடுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்த பிறகு இன்று நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். 

Next Story

தமிழக பாஜக மாநிலத் தலைவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 26/01/2024 | Edited on 26/01/2024

 

பத்திரிகையாளர்களைக் கீழ்த்தரமாகப் பேசிவரும் தமிழக பாஜக மாநிலத் தலைவரைக் கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (25-01-2024) மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த மு.அசீப் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் நக்கீரன் ஆசிரியர், தி இந்து குழுமத்தின் தலைவர் என். ராம், சன் நியூஸ் தொலைக்காட்சி ஆசிரியர்  மு. குணசேகரன் எனப் பல்வேறு மூத்த பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர்.