Skip to main content

ஜெயிக்கப் போவது பொன்முடியா? கே.என். நேருவா?

Published on 10/03/2019 | Edited on 10/03/2019

 

திமுக கூட்டணியில் பாரிவேந்தர் கட்சிக்கு கள்ளக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாக சொல்லப்பட்ட நிலையில் முன்னாள் அமைச்சரும் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளருமான பொன்முடி தனது மகன் கௌதம சிகாமணியை கள்ளக்குறிச்சி தொகுதியில் நிறுத்த தீவிர முயற்சி எடுத்து வந்ததும், விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு ஒன்றிய செயலாளர்களை தனிப்பட்ட முறையில் பார்த்து தன் மகனுக்கு ஆதரவு திரட்ட முயற்சித்து வருகிறார். இதற்கு இடையில் பொன்முடி மகன் கள்ளக்குறிச்சியில் போட்டியிடுகிறார் என விளம்பரங்களும் வெளிவர துவங்கியுள்ள நிலையில் இதற்கு வலு சேர்க்கும் விதமாக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள துரைமுருகன் இல்லத்திற்கு பொன்முடி தனது மகன் கவுதம சிகாமணியுடன் சந்தித்து உற்சாகமாகப்பேசிய திமுக பொருளாளர், பொன்முடியின் கைகளைப் பிடித்தபடி ‘என் மகனும், உன் மகனும் எம்.பியாக போவது உறுதி என நம்பிக்கையாக கூறியுள்ளார். 

 

k

 

இப்படி பொன்முடி தன் மகனுக்காக பாரிவேந்தரை பெரம்பலூருக்கு தள்ளிவிட நினைக்கும் நிலையில் கே.என்.நேருவோ பெரம்பலூர் தொகுதியோ திருச்சியில் உள்ள லால்குடி, குளித்தலை, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் பெரம்பலூர் என திருச்சியில் உள்ள பாதி சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. ஏற்கனவே நடிகர் நெப்போலியன் நின்று அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்த தொகுதி. இந்த முறையும் அதே போலதி.மு.க.விற்கு கொடுத்தால் கட்டாயம் ஜெயித்து விடலாம் என ஜெயிக்கிற கணக்கை சொல்லியிருக்கிறார். 

 

பாரிவேந்தர் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் என இரண்டில் ஒரு தொகுதி கேட்கப்பட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ரவி, “எங்களுக்கு விருப்பமான தொகுதி கள்ளக்குறிச்சிதான் அதைக் கேட்டிருக்கிறோம். விரைவில் முடிவு செய்வோம் என்று சொல்லியிருந்தார்.

 

இந்நிலையில், பாரிவேந்தர் கட்சிக்கு கள்ளக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்படுவது உறுதியாகிவிட்டது. இதனைத் தொடர்ந்து இரவோடு இரவாக தேர்தல் பிரச்சாரத்தில் குதித்துள்ளனர் பாரிவேந்தரின் ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினர். இதற்காக போஸ்டர், பேனர் என அனைத்து வேலைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

 

p

 

கடந்த முறை பெரம்பலூரில் கோடிக்கணக்கில் செலவு செய்து அதிமுக மருதை ராஜிடம் தோற்றதால், இந்த முறை திமுக வாக்கு வங்கியோடு, கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என முடிவு செய்து தொகுதி முழுவதும் பாரிவேந்தர் வேலையில் இறங்கினார். ஸ்டாலினிடம் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை எதிர்த்து நாங்கள் முழுபலத்துடன் பண பலம், ஆட்கள் பலத்தை இறக்குகிறேன் என உறுதி கொடுத்ததால் ஸ்டாலினும் பாரிவேந்தருக்கு ஓகே சொல்லி இருப்பதாக தகவல்.

 

அதே நேரத்தில் பொன்முடி தன் மகனுக்காக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து கள்ளக்குறிச்சியை வாங்கினால் பெரம்பலூர் பாரிவேந்தருக்கு கிடைத்தால் திருச்சியில் தி.மு.க. போட்டியிட வேண்டும் என்று தி.மு.க. கட்சி தலைமை நெருக்கடி கொடுக்கிறது.  ஆனால் கே.என்.நேரு தரப்போ ஏற்கனவே திருச்சியில் கடந்த முறை தி.மு.க. போட்டியிட்ட மாநகர செயலாளர் அன்பழகன் செலவுக்கு பணம் இல்லாமல் தற்போது கடனாளியானார். மீண்டும் இந்த முறையும் அவருக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது என்றும், அதுவும் இல்லாமல் தாராளமாக பணம் செலவு பண்ணக்கூடிய தி.மு.க. வேட்பாளர் இல்லை என்பதாலும், இந்த தொகுதியில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற காங்கிரசுக்கு தொகுதியை ஒதுக்கி கொடுங்கள். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் எம்.பியுமான அடைக்கலராஜ் மகன் லூயிஸ் அடைக்கலராஜ்க்கு கொடுத்தால் பணம், செல்வாக்கு தாராளமாக இருப்பதால் ஈசியா ஜெயித்து விடலாம் என தலைமைக்கு தகவல் சொல்லியிருக்கிறார். 

 

பொன்முடி தன் மகன் நிற்க வேண்டும் என்பதற்காக பாரிவேந்தரை பெரம்பலூருக்கு தள்ளிவிடவும், கட்டாயம் திருச்சி தி.மு.க. விற்காக தள்ளிவிட தலைமை முயற்சிப்பது தான் தற்போது அரசியலில் பரபரப்பாக இருக்கிறது. 

 

ஜெயிக்கப் போவது பொன்முடியா ? கே.என். நேருவா? என்கிற விவாதம் கட்சியின் மேல் மட்டங்களில் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஆளுநருக்கு என் மீது பாசம் அதிகம்'-அமைச்சர் பொன்முடி பேச்சு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
 'Governor has a lot of affection for me' - Minister Ponmudi's speech

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியின் தண்டனை உச்சநீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு பிறகு ஆளுநர் அவருக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் விழுப்புரம் கூட்டத்தில் பொன்முடி பேசுகையில், 'ஆளுநருக்கு என் மேல் ரொம்ப பிடிப்பு, பாசம் அதிகம். ஏனென்றால் என்னுடைய நண்பர்கள் எல்லாம் சொன்னதைப்போல நான் கொஞ்சம் சமத்துவக் கொள்கை, சமதர்மக் கொள்கை இதெல்லாம் கொஞ்சம் பேசுற ஆளு. மத்த அமைச்சர்களை விட நான் தான் அவரிடம் நேரடியாக எல்லாவற்றிலும் தொடர்புடையவன். அதனால் என் மேல அவருக்கு பாசம், பற்று, பிரியம் எல்லாம் இருந்தது. உச்சநீதிமன்றத்தை தீர்ப்பு வந்ததற்கு பிறகு சட்டமன்ற உறுப்பினராக என்னை டிசம்பர் 19ஆம் தேதியிலிருந்து சபாநாயகர் அறிவித்துவிட்டார். அதற்கு பிறகு மார்ச் மாதத்தில் உத்தரவு எல்லாம் வந்த பிறகு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை அவர் உடனடியாக பார்த்து நான் அமைச்சராக பொறுப்பேற்கிறேன் என்று சொல்லி இருந்தால் சரி. அதைதான் அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஆளுநர் செய்ய வேண்டும்.

உண்மையான நிர்வாகத்தை நடத்துபவர் முதல்வர். ஆளுநர் பெயருக்கு நிர்வாகத்தை நடத்துபவர். கவர்னர் என்ன ஓட்டு போட்டா வந்தார். ஒரு நியமனம் செய்யப்பட்ட ஒருவர் மாநில அரசாங்கம் எதை சொல்லுகிறதோ அதை செய்ய வேண்டியதுதான் அவருடைய பொறுப்பு. அதுதான் அரசியலமைப்பு சட்டம் சொல்லுவது. இன்றுகூட கேரளாவில் ஏழு அரசியலமைப்பு சட்டங்களுக்கு கையெழுத்து போடாமல் ஆளுநர் இருக்கிறார் என்று சொல்லி கேரளாவினுடைய முதல்வர் உச்சநீதிமன்றம் சென்று இருக்கிறார் என்று சொன்னால் இந்த ஆளுநர்களை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்களையெல்லாம் ஆட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கின்ற இந்த ஒன்றிய அரசை நீங்கள் தூக்கி எறிய வேண்டுமா வேண்டாமா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

Next Story

“இந்த தீர்ப்பு எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கும்” - அமைச்சர் பொன்முடி

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
"This verdict will be a guide for everyone" - Minister Ponmudi

சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றிருந்த அமைச்சர் பொன்முடி, தண்டனையை எதிர்த்து செய்த மேல்முறையீட்டு வழக்கில் அவரது தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் பொன்முடியை அமைச்சராகப் பதவியேற்க ஆளுநர் மறுத்திருந்தார். இதனையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கில் ஆளுநருக்கு பல்வேறு கண்டனங்களையும் கேள்விகளையும் உச்சநீதிமன்றம் எழுப்பி இருந்தது. இத்தகைய சூழலில் இன்று (22.03.2024) பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்க ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்திருந்த நிலையில், பிற்பகல் 03.30 மணிக்கு பதவியேற்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. அதன்படி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் வந்தனர். முதல்வர் முன்னிலையில் பொன்முடி அமைச்சராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பொன்முடிக்கு அவர் ஏற்கெனவே வகித்து வந்த உயர் கல்வித்துறை மீண்டும் ஒதுக்கப்பட்டது.

"This verdict will be a guide for everyone" - Minister Ponmudi

பதவியேற்புக்குப் பின்னர் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோருடன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நிணைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்த சட்ட நடவடிக்கையின் காரணமாக சட்டப்பூர்வமாக இன்று (22.03.2024) அமைச்சர் பொறுப்பில் அமர்ந்துள்ளேன். இதனை யாரும் மறுக்க முடியாது. முதல்வருக்கும், வழக்கறிஞர்கள் இளங்கோ மற்றும் வில்சனுக்கும் உளமாற நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நிச்சயமாக இந்த தீர்ப்பு என்பது எல்லோருக்கும் வழிகாட்டியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது நன்றியைத் தெரிவித்திருந்தார். இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “அரசியல் சட்டத்தின் பாதுகாவலரான உச்சநீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிட்டு, அரசியல் சாசனத்தின் உணர்வை நிலைநாட்டி ஜனநாயகத்தைக் காப்பாற்றியதற்காக தமிழக மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவின் மக்கள் ஜனநாயகம் சிதைவதையும், கூட்டாட்சியின் தத்துவம் வறண்டு போவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறையாண்மை கொண்ட அரசாங்கங்களின் செயல்பாட்டிற்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. பல காலமாக தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழமையான மரபுகளையும் கை விட்டு வருவதையும் மக்கள் பார்த்து வருகின்றனர். 2024 ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்றவும், அரசியலமைப்பை நிலைநிறுத்தவும் முக்கியமானது. நமது புகழ்பெற்ற தேசத்தை நாசமாக்க அச்சுறுத்தும் பாசிச சக்திகளின் வெட்கக்கேடான அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்க கடுமையாகப் பாடுபடுவோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.