Skip to main content

பொள்ளாச்சி பாலியல் கொடூரம்; திருநாவுக்கரசிடம் தொடங்கியது சிபிசிஐடி விசாரணை!!

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

பொள்ளாச்சி சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து  விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் திருநாவுக்கரசை சிபிசிஐடி போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

pollachi

 

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திருநாவுக்கரசை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய சிபிசிஐடி போலீசாரின் மனு இன்று கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் திருநாவுக்கரசை நேரில் ஆஜர்படுத்தாமல் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற வளாகத்தில் பயிற்சி வழக்கறிஞர்கள், மாதர் சங்க அமைப்புகள் மற்றும் போராட்ட அமைப்புகளை சேர்த்தவர்கள் கூடியுள்ளதால் திருநாவுக்கரசு மீது தாக்குதல் நடத்தக்கூடும் என வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர் படுத்தப்பட்டான் திருநாவுக்கரசு. சுமார் 40 நிமிடம் நடந்த விசாரணைக்கு பிறகு 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து திருநாவுக்கரசை விசாரிக்க சிபிசிஐடி  போலீசாருக்கு நடுவர் உத்தரவிட்டார்.

 

திருநாவுக்கரசை வீடியோ கான்பரன்ஸில் ஆஜர் படுத்தியது ஏன் என வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் முறையிட்டனர். உளவுத்துறையின் எச்சரிக்கையை அடுத்து திருநாவுக்கரசு வீடியோ கான்பரன்ஸில் ஆஜர் படுத்தப்பட்டதாக நீதிபதி விளக்கமளித்தார்

 

சிபிசிஐடி போலீசார் 15 நாட்கள் கோரியிருந்த நிலையில் 4 நாட்கள் மட்டும் காவலில் எடுத்த விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து திருநாவுக்கரசை கோவை சிறையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் கூட்டி சென்ற சிபிசிஐடி போலீசார் அவனிடம் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.    

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தின் மௌன அலறல் ஓயவில்லை!" - கமல் ட்வீட்!

Published on 06/01/2021 | Edited on 06/01/2021

 

pollachi issue Kamal tweets!

 

பொள்ளாச்சி பாலிய வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் நிலையில், அ.தி.மு.க. கட்சியின் பொள்ளாச்சி நகர மாணவர் அணிச் செயலாளராக இருந்த அருளானந்தம் மற்றும் அவரது கூட்டாளிகளான பைக் பாபு, ஹேரென் பால் உள்ளிட்ட மூவரும் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர்.

 

அதைத் தொடர்ந்து மூன்று பேரும், கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மூன்று பேரையும் ஜனவரி 20-ஆம் தேதி வரை (15 நாள்) நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மூவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

இதனிடையே, இந்த வழக்கில் மேலும் இரண்டு பெண்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில் மூன்று பேரைக் கைது செய்ததாகவும் சி.பி.ஐ.யின் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. அதேபோல் அ.தி.மு.க. கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அருளானந்தத்தை நீக்கி, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். ஆகிய இருவரும் உத்தரவிட்டுள்ளனர்.

 

அரசியல் கட்சியினர் பலரும் இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது. குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை கிடைக்கவேண்டும் என தங்களது கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ''பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் மௌன அலறல் ஓயவில்லை. ஆளும்கட்சியைச் சேர்ந்தவர் கைதாகியிருக்கிறார். இது பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்குப் பாதையாக இருக்கவேண்டும். வேறெதற்காகவோ பயன்பட்டுவிடக் கூடாது'' என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

 

 

Next Story

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு... மூன்றாவது நபர் கைது!

Published on 05/02/2020 | Edited on 05/02/2020

டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு செய்தவர்களை சிபிசிஐடி  போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டு  தொடர்ச்சியாக கைது செய்து வருகின்றனர்.

 

 Group 2A exam malpractice... third person arrested!

 

இதுவரை குரூப் தேர்வு முறைகேட்டில் 30 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெறவைக்க 7 தேர்வர்களிடன் 82.50 லட்சம் பெற்றதாக காவலர் சித்தாண்டி, பூபதி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது நபராக எழிலகத்தில் வணிகவரித்துறை ஊழியரான கார்த்திக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.