Skip to main content

பொள்ளாச்சி கொடூரத்தில் தலைமறைவாக இருந்தவர் சரண்...

Published on 25/03/2019 | Edited on 26/03/2019

பொள்ளாச்சி கொடூரத்தில் புகாரளித்தவரின் அண்ணனை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்துவந்த குற்றவாளி மணி என்கிற மணிவண்ணன், நீதிமன்றத்தில் இன்று (25/3/2019) சரணடைந்தார்.

 

pollachi issue

 

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடந்த மணிவண்ணனை வரும் 8-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி நாகராஜ் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில், பாபு, வசந்தகுமார், பார் நாகராஜ் ஆகியோர் மீது பொள்ளாச்சி போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ள நிலையில், மணிவண்ணன் தற்போது சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்