Skip to main content

காவல் நிலையத்தில் வைத்தே மது விற்பனை செய்த காவலர்கள்... சஸ்பென்ட் செய்த டி.ஐ.ஜி!!

Published on 08/06/2021 | Edited on 08/06/2021

 

Policemen selling liquor at the police station... DIG Suspended them

 

தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தபோதே டாஸ்மாக் கடைகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு மது விற்க திட்டமிட்ட பலரும் பெட்டி பெட்டியாக மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். டாஸ்மாக் கடை வாசலில் நின்றே போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். போலீசாரின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு பலர் மதுபாட்டில்களைக் கொண்டு சென்று பதுக்கிவைத்து, கூடுதல் விலைக்கு விற்றனர். மற்றொரு பக்கம் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் தொடர்ந்துள்ளது.

 

இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை டி.எஸ்.பி சரகம் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களில் பல ஆயிரம் மது பாட்டில்களை ஆய்வாளர் அனிதா கிரேசி தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களைக் காவல் நிலையம் கொண்டு வந்தபோதும் வழக்குப் பதிவு செய்யவில்லை. இதேபோல் மே 8ஆம் தேதி 434 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீசார், அவற்றையும் கணக்கில் காட்டாமல் பறிமுதல் செய்தவர்களிடமும் மேலும் சில மது விற்பனையாளர்களிடமும் புரோக்கர்கள் மூலம் ஒரு குவாட்டர் ரூ. 500 என கள்ளத்தனமாக விற்பனை செய்துள்ளனர். 

 

இந்த தகவல் வெளியே கசிய, பட்டுக்கோட்டை டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ் விசாரனை செய்தபோது ஆய்வாளர் அனிதா கிரேசி, உதவி ஆய்வாளர் ராஜ்மோகன், சிறப்பு உதவி ஆய்வாளர் துரையரசன், தலைமை காவலர் ராமமூர்த்தி ஆகியோர் மது விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், காவல் நிலைய சிசிடிவி கேமராக்களிலும் பதிவாகியுள்ளது. இந்த தகவல் தஞ்சையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள டி.ஐ.ஜி பிரவேஷ்குமாருக்கு சென்ற நிலையில், காவல் ஆய்வாளர் உள்பட 4 பேரையும் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்மந்தப்பட்டவர்கள் பற்றிய விசாரணையும் நடந்துவருகிறது. கள்ள மது வியாபாரிகளிடம் பறிமுதல் செய்த மது பாட்டில்களைக் காவல் நிலையத்தில் வைத்தே கள்ளத்தனமாக விற்பனை செய்து மாட்டிக்கொண்டு சஸ்பென்ட் ஆகியுள்ள பெண் ஆய்வாளர் மற்றும் போலீசாரை பொதுமக்கள் வேறு விதமாக பேசிவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.