Skip to main content

வாலிபர்களை குறி வைக்கும் போலீஸ்: ராணுவ கட்டுப்பாட்டில் தூத்துக்குடி - தொடரும் பதட்டம்

Published on 25/05/2018 | Edited on 25/05/2018
Tuticorin



தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. விஜயகுமார் தலைமையில் 8 ஐ.ஜி.க்கள், 13 டி.ஐ.ஜி.க்கள், 20 எஸ்.பி.க்கள் இவர்கள் தலைமையில் வெளி மாவட்ட போலீசார் உள்பட சுமார் 5 ஆயிரம் பேர் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தூத்துக்குடி டவுன், அண்ணாநகர், பிரையன் நகர், மடத்தூர், ரகமத்துல்லா புரம், தாளமுத்து நகர், திரேஸ்புரம், மாதாகோவில், மீனவர்கள் பகுதிகள் உள்ளிட்ட தூத்துக்குடி பகுதிகளில் உள்ள ரிமோட் பகுதிகளில் செக் போஸ்ட் அமைத்து சோதனையிட்டு வருகின்றனர்.
 

இந்த அனைத்து சோதனை சாவடிகளிலும் அதிரடிப்படையினர் காவலுக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். இதைத்தவிர தூத்துக்குடி செல்லும் நான்கு புற சாலைகளிலும் சோதனை சாவடிகள் அமைத்துள்ளனர். இதன் காரணமாக அந்தந்த பகுதிகளுக்குள் நுழைபவர்களை சோதனையிட்டு விசாரிக்கின்றனர். சந்தேகம் ஏற்பட்டால் அவர்களை கைது செய்கிறார்கள். 
 

குறிப்பாக 20 வயது முதல் 35 வயது வரை உள்ள வாலிபர்களை குறி வைத்தே சோதனை மேற்கொள்கின்றனர். இந்த சூழல் தமிழக வரைபடத்தில் தூத்துக்குடி நகரை தனி ஆட்சியான யூனியன் பிரதேசத்தின் நிலைமையையும், கட்டுப்பாடுகளையும் உணர்த்துகின்றன. இதனால் தூத்துக்குடி நகரவாசிகள் பதட்டத்தில் பொழுதை கழிக்கின்றனர். 
 

இன்று அதிகாலை அண்ணாநகர், பிரைன்நகர், ரகமத்துல்லா புரம், செல்வநாயகபுரம் போன்ற பகுதிகளில் மின் இணைப்பை துண்டித்துவிட்டு அந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் நுழைந்து ஆண்களையும், வாலிபர்களையும் இழுத்துச் செல்கிறார்கள். காரணம், அண்ணாநகரில் டாஸ்டாக் கடை உடைத்து தீ வைக்கப்பட்டதும், குறிப்பாக எஸ்.பி. மகேந்திரனுக்கு காலில் ஏற்பட்ட காயத்தின் அடிப்படையிலும் அந்த பகுதியை குடைந்து குடைந்து தேடுகின்றனர். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீசார் இழுத்துச் சென்றுள்ளனர். அவர்களை மீட்பதற்கு வழி தெரியாமல் விழிபிதுங்கும் அப்பகுதி மக்கள், அதிமுகவின் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏவான சண்முகநாதனின் அலுவலகம் சென்று, பிடித்து சென்ற தங்களது உறவினர்களை மீட்டுத் தருமாறு கோரிக்கை வைத்துள்ளனர். அவரும் அதற்கான ஏற்பாட்டை செய்வதாக கூறினாராம். 
 

சூழ்நிலை இப்படி இருக்க பதட்டத்தை தணிக்க 68 பேரை தங்களது சொந்த ஜாமீனில் போலீஸ் வெளியே விட்டுள்ளது. மேலும் போலீஸ் வாகனங்கள், போலீசாரின் வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களையும் பாதுகாப்பான இடத்தில் வைக்கும்படி போலீஸ் உயரதிகாரிகள் ஆணையியட்டுள்ளனர். ஆனால் நிலைமையோ கட்டுக்குள் வராமல் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

“ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
issue of ration rice should be prevented says Edappadi Palaniswami

ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தலுக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் வீட்டில் அரிசி கடத்தல் கும்பல் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்ட ஆட்சியில் ஏற்கெனவே போதைப்புழக்கமும், அதுசார்ந்த குற்றங்களும் சர்வ சாதாரணம் ஆகிவிட்ட நிலையில், தற்போது வெடிகுண்டு கலாச்சாரமும் தலைவிரித்தாடுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் இருந்து ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதும் இந்த ஆட்சியில் தொடர்கதையாகிவிட்டது. மாநிலத்தில் நடக்கும் எந்த விஷயத்திலும் கட்டுப்பாடு இல்லாத முதல்வராக இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய ரேஷன் கடத்தல் கும்பல் மீது துரிதமாக சட்ட நடவடிக்கை எடுத்து, இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழா வண்ணம் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்குமாறும், ஏழை எளிய மக்களின் பசியாற்றும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறும் முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.