Skip to main content

ஏட்டு கொலை! எங்களை தடுத்தால் இதுதான் பதிலடி! நடுங்க வைக்கும் மணல் மாஃபியாக்கள்​!

Published on 08/05/2018 | Edited on 08/05/2018

 

          ஒரு லோடு மணல் 70 ஆயிரம் ரூபாய்கு போய், குடியிருக்க ஒரு வீடு என்ற உழைக்கும் வர்க்கம் உட்பட மெத்தப் பணக்காரர்கள் வரையிலான கட்டுமான ஆசையைத் தகர்த்தவர்கள் மணல் மாஃபியாக்கள். எங்கே வேண்டுமானாலும் உரக்கச் சொல்லலாம் என்பதை நிகழ்வுகள் வெளிச்சம் போடுகின்றன.    
 

நெல்லை மாவட்டத்தின் விஜயநாராயணம் காவல் நிலைய தனிப்பிரிவு ஏட்டான ஜெகதீஸ்துரை, நடு இரவில் மணல் கொள்ளையர்களைத் தடுக்கச் சென்றவர். அந்த டாண்களால் இரும்பு ராடால் அடித்துக் கொல்லப்பட்டது தமிழகத்தையே பதறவைத்தது. நாங்கள் சர்வ வல்லமை கொண்டவர்கள். எங்கள் தொழிலைத் தடுத்தால் இதுதான் கதி. எவரும் குறுக்கிடக்கூடாது. இதுதான் பதிலடி என்கிற அடிவயிற்றுப் பீதியை உருவாக்கியிருக்கிறார்கள் மணல் கொள்ளையர்கள்.
 

 

 

இந்த அளவுக்கு தாமிரபரணி, நம்பியாறு, பச்சையாறு ஆற்றுப்படுகைகளின் மணல்குன்றுகள் மாஃபியாக்களை வளர்த்துள்ளன. 
 

விஜயநாராயணம் அருகில் உள்ள பரப்பாடி, மற்றும் ஐ.என்.எஸ்.கட்டபொம்மன் கடற்படைத்தளம் அருகில் நம்பியாறு ஓடுகிறது. மணல்குன்றுகள் அதிகமாகவே காணப்படுகின்றன. அதனருகில் உள்ள பாண்டிச்சேரி, தாமரைக்குளம், அணைக்கரை, மிட்டாதார்குளம்  கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ஆற்றுப்படுகைகளில் திருட்டு மணல் அள்ளுபவர்கள். அரசியல் போர்வைக்குள் அதன் பாதுகாப்போடு கொள்ளையை நடத்துகிறார்கள். 
 

இதனால் நடவடிக்கைக்குப் பயந்து காவல் நிலையங்கள், வருவாய்த்துறை கூட வேண்டாம் வம்பு, கிடைத்தவரை போதும் என்று அவர்களோடு மாமூல் கள்ள உறவை ஏற்படுத்திக் கொண்டு, திருட்டுத் தொழிலுக்கு உரமாகியிருக்கிறது. இதற்கு மணல் குன்றுகளின் காவல்நிலையங்கள் கூட விதிவிலக்கல்ல.
 

இந்தச் சூழலில் விஜயநாராயணம் காவல் நிலைய மாவட்ட எஸ்.பி.யின் தனிப்பிரிவிற்குத் தகவல் கொடுக்கும் ஏட்டு ஜெகதீஸ்துரைக்கு, மே 6 அன்று நடு இரவில் திருட்டு மணல் அள்ளுகிறார்கள் என்கிற தகவல் வர அந்த நள்ளிரவில் அங்கே போயிருக்கிறார். பாண்டிச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தன் டிராக்டரில் நான்கைந்து பேர்களைக் கொண்டு திருட்டு மணல் அள்ளிக் கொண்டிருப்பதைக் கண்டவர், அவர்களைத் தடுத்திருக்கிறார். உடன் இதுபற்றி விஜயநாராயணம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்திருக்கிறார். 
 

போலீசைக் கண்டதும் மணல் அள்ளுபவர்கள் தப்பியோடினர். அப்போது மணல் புள்ளி ஒருவர், மாமூல் வாங்கிக் கொண்டு ஏன் தடுக்குறீர்கள் எத்தனை பேருக்குத்தான் மாமூல் தருவது என்று வாக்குவாதம் நடத்தியிருக்கிறார். அவரோடு பதில் வாக்குவாதம் செய்திருக்கிறார் ஏட்டு. அவரைத் தடுத்த மணல் புள்ளி மணலோடு டிராக்டரைக் கிளப்பியிருக்கிறார். அதனை வழிமறித்து நின்ற ஏட்டு ஜெகதீஸை ஆத்திரத்தில் டிராக்டரில் கிடந்த இரும்பு லீவரால் மண்டையில் ஒரே அடி அடிக்க, மண்டை பிளக்கப்பட்டு ரத்தம் கொட்ட ஸ்பாட்டிலேயே ஏட்டுவின் முச்சு அடங்கியிருக்கிறது. மணல் கொள்ளையர்கள் அந்த இடத்தில் இருந்து தப்பியிருக்கிறார்கள். தகவல் அறிந்து ஸ்பாட்டுக்கு வந்த மாவட்ட எஸ்.பி.யான அருண் சக்திகுமார் நடவடிக்கையைத் துரிதப்படுத்தியிருக்கிறார். 
 

இங்கு மணல் கொள்ளை அதிகம். இந்தப் படுகொலை அவர்களுக்குப் புதிதல்ல. இதற்கு முன்பு இது போன்று நடந்துள்ளன. அவைகள் போலீஸ், மணல் மாஃபியாக்கள் கூட்டணி காரணமாக கொலைகள், விபத்து என்று எப்.ஐ.ஆர். ஆகி மூடப்பட்டுள்ளன. விஜயநாராயணம் காவல் நிலையத்திற்கு மாமூல் முறையாகப் போகிறது என்கிற கனமான பேச்சும் அந்தப் பக்கம் சுற்றுகிறது.
 

ஏட்டு கொலை காரணமாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு பேரைத் தேடுகிறார்கள். நான்கு மாத கர்ப்பிணியான ஏட்டு மனைவி மரிய ரோஸ்மார்க்கரெட் எம்.காம்.,எம்.எட்., படித்தவர் தன் கணவரின் உடலைப் பார்த்து மயங்கி சரிந்தார்.
 

குற்றவாளிகளுக்கு உட்சபட்ச தண்டனை பெற்றுத்தர வலுவான காரணங்களைச் சேகரித்து வருகிறோம். மணல் கொள்ளையைத் தடுக்க தனி செல் அமைக்கப்படும் என்கிறார் எஸ்.பி.யான அருண் சக்திகுமார்.
 

மணல் மாமூல்கள் ஒழிக்கப்படும்வரை மணல் படுகொலைகளுக்கு ஃபுல்ஸ்டாப் இல்லைதான். குற்றத்தின் ஆணிவேரே இதுதான்.

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.