Skip to main content

வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. நகை தப்பியது!

Published on 22/01/2018 | Edited on 22/01/2018
வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. 
நகை தப்பியது!



புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகில் உள்ள தச்சங்குறிச்சியில் உள்ள கூட்டுறவு வங்கியில் நேற்று இரவு, 12.00 மணி அளவில் வந்த சில மர்ம நபர்கள் இரவு காவலாளி சொக்கலிங்கம் 65 த/பெ கருப்பையா தச்சங்குறிச்சி என்பவரை கட்டிப் போட்டு விட்டு சுவற்றில் துளையிட்டு, அலாரம் வயர்களை துண்டித்து லாக்கரை உடைக்க முயற்ச்சிக்கும் போது சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்ததால் திருடர்கள் தப்பியோடி விட்டனர். 

அதனால் விவசாயிகளிடம் அடகு வாங்கிய ரூ 3 கோடி மதிப்பிலான நகைகள் தப்பியது. பொதுமக்கள் காவலாளியை மீட்டுள்ளனர் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

-இரா. பகத்சிங்

சார்ந்த செய்திகள்