வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி.
நகை தப்பியது!
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகில் உள்ள தச்சங்குறிச்சியில் உள்ள கூட்டுறவு வங்கியில் நேற்று இரவு, 12.00 மணி அளவில் வந்த சில மர்ம நபர்கள் இரவு காவலாளி சொக்கலிங்கம் 65 த/பெ கருப்பையா தச்சங்குறிச்சி என்பவரை கட்டிப் போட்டு விட்டு சுவற்றில் துளையிட்டு, அலாரம் வயர்களை துண்டித்து லாக்கரை உடைக்க முயற்ச்சிக்கும் போது சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்ததால் திருடர்கள் தப்பியோடி விட்டனர்.
அதனால் விவசாயிகளிடம் அடகு வாங்கிய ரூ 3 கோடி மதிப்பிலான நகைகள் தப்பியது. பொதுமக்கள் காவலாளியை மீட்டுள்ளனர் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
-இரா. பகத்சிங்