Skip to main content

மாணவர்களின் பரிதவிப்பு; ஆளுநரின் அறிவிப்பால் மகிழ்ச்சி

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

Pity of 9 lakh students; Happy with Governor's announcement

 

நெல்லையில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடைசியாக 2021 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. மேலும் சில பல்கலைக்கழகங்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. அதேபோல் 2022 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்தது. மற்ற பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. 

 

திருச்சி, கோவை, நெல்லை பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடக்காத காரணத்தால் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் படிப்பை முடித்த மாணவர்கள் பட்டம் பெற முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மேற்படிப்புக்கு செல்லும் மாணவர்கள், வெளிநாடுகளில் மேற்படிப்பிற்காகவும் ஆய்வுப் படிப்பிற்காகவும் செல்லும் மாணவர்களின் நிலை கேள்விக்குறியானது. தற்போது 4 பல்கலைக்கழகங்களுக்கான பட்டமளிப்பு விழா தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.  

 

ஜூன் 16 ஆம் தேதி சென்னை பல்கலைக்கழகத்திற்கும், ஜூன் 28 ஆம் தேதி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கும், ஜூன் 19 ஆம் தேதி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கும், ஜூலை 7-ஆம் தேதி நாகையில் உள்ள ஜெயலலிதா மீனவப் பல்கலைக்கழகத்திற்கும் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை., பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழா ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்