Skip to main content

எட்டு வழிச்சாலைக்கு மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்! முதல்வர் வேண்டுகோள்!!

Published on 13/12/2018 | Edited on 13/12/2018
edappadi

 

போக்குவரத்து நெரிசல், சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை தடுக்கவே சர்வதேச தரத்தில் எட்டு வழிச்சாலைத் திட்டம் கொண்டு வரப்படுவதால், இத்திட்டத்திற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


சேலம் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (டிசம்பர் 13, 2018) மாலை நடந்தது. ஈரடுக்கு பேருந்து நிலையம், ஐந்தடுக்கு வாகன நிறுத்துமிடம் உள்பட ரூ.166.52 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசியது:


சர்வதேச தரத்தில் சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை அமைப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இப்போதுள்ள நிலவரப்படி 150 சதவீதம் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 250 மடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 

 


வாகன பெருக்கத்தால் சாலை விபத்துகள் பெருகும். அவற்றால் விலைமதிப்பற்ற உயிர் பலிகளும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதேபோல் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குச் செல்ல நேரமும், எரிபொருளும் விரயம் ஆகிறது. இவற்றை எல்லாம் தடுப்பதற்காகவே வெளிநாடுகளில் இருப்பதுபோல், போக்குவரத்து நெரிசலை குறைக்க எட்டு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.  

 

edappadi


ஆனால், சில அமைப்புகள் இத்திட்டத்திற்கு தடையாக இருந்து வருகின்றன. இதனால்தான் இத்திட்டம் ஜவ்வுபோல் இழுத்துக்கொண்டே செல்கிறது. எட்டு வழிச்சாலைக்கு நிலம் வழங்குபவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என அரசு ஏற்கனவே உறுதி அளித்துள்ளது. மக்களுக்கு நல்ல திட்டமாக அமையவுள்ள இத்திட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். 

 


தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகள் சிறப்பாக செயல்படுவதற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான் காரணம். எனக்கு அவர் உறுதுணையாக உள்ளார். துணை முதல்வரும், மற்ற அமைச்சர்களும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். 

 


கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரமே அழிந்து விட்டது. தென்னை மரங்கள், மாமரங்கள், தேக்கு, சவுக்கு, வெற்றிலைக்கொடி என அனைத்தும் சேதமடைந்துள்ளன. இதனைக் காணும்போது மனம் வேதனை அடைகிறது. புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அதே வேகத்தில் புனரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. 

 


புயலால் 2.21 லட்சம் மின் கம்பங்கள் சாய்ந்து விட்டன. 26 ஆயிரம் ஊழியர்கள் மின் கம்பங்களை நடும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். உயிரை பணயம் வைத்து அவர்கள் பணியாற்றுகின்றனர். உள்ளாட்சி துப்புரவு பணியாளர்கள் 2400 பேர் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வருவாய்த்துறையினரும் களத்தில் இறங்கி மக்களுக்கு வேண்டிய நிவாரணப் பணிகளை செய்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

 


சேலத்தில் நவீன பேருந்து நிலையம் அமைப்பதற்கு மத்திய அரசு அதிகாரிகள் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். மின் தடை ஏற்படாமல் இருக்க, பூமிக்கடியில் மின் கேபிள்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சேலம் மாநகரம் மிகுந்த வளர்ச்சி அடைந்துள்ளது. எதிர்க்கட்சிகள் எதையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்சி வருகின்றன. அவர்களுக்கு சேலத்தின் வளர்ச்சியே பதிலாக அமையும். 

 


இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

 

  
உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ரோகிணி, எம்எல்ஏக்கள் செம்மலை, வெங்கடாசலம், சக்திவேல், மாநகராட்சி ஆணையர் சதீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  
 

சார்ந்த செய்திகள்

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார்.