Skip to main content

குமரியில் பரவி வரும் பன்றி காய்ச்சலால் மக்கள் அச்சம்!!!

Published on 16/10/2018 | Edited on 16/10/2018

 

Swine flu



குமாி மாவட்டத்தில் பரவி வரும் பன்றி காய்ச்சலால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.  இதுவரை பாதிக்கப்பட்ட 5 போ் தனியாா் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருகின்றனா்.


குமாி மாவட்டத்தில் தற்போது பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் மற்றும் பொியவா்களுக்கு இருமல், சளி, விட்டு விட்டு வரக்கூடிய காய்ச்சல்களால் அவதி பட்டு வருகின்றனா். இதனால் தனியாா் பாிசோதனை நிலையங்களிலும் அதுபோல் தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் வெளி நோயாளிகளின் வருகை வழக்கத்துக்கு மாறாக அதிகாித்துள்ளது. 


இங்கு வரும் நோயாளிகளின் ரத்த மாதிாியை சோதித்ததில் பலருக்கு பன்றி காய்ச்சலுக்கான அறிக்குறி இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் நாகா்கோவில் ராமன்புதூரை சோ்ந்த  ஒய்வு பெற்ற பேராசிாியை ஓருவரும் அதே போல் புத்தோாி பகுதியை சோ்ந்த ஒருவரும் கோட்டாா் பகுதியை சோ்ந்த இன்னொருவா் என 3 போ் ஆசாாிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூாி மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வருகின்றனா். மற்ற இருவா் தனியாா் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். 


மேலும் மருத்துவ கல்லூாி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவா் திடீரென்று இறந்துள்ளாா். இதுவும் மருத்துவமனை நோயாளிகள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இது குறித்து மாவட்ட கலெக்டா் பிரசாந்த் வடநேரா கூறும் போது... பன்றி காய்ச்சல் என்பது காற்று மூலம் பரவும் ஓரு வைரஸ் ஆகும். இதனால் ஓருவாிடமிருந்து இன்னொருவருக்கு பரவ கூடும். மேலும் சிலருக்கு பன்றி காய்ச்சல் இருப்பதாக மருத்துவா்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அது மேலும் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் இதற்கென்று சிறப்பு வாா்டுகளும் திறக்கப்பட்டுள்ளது. இதற்காக மக்கள் அச்சம் பட தேவையில்லை என்றாா். 

                                  












 

சார்ந்த செய்திகள்

Next Story

கேரளாவில் பன்றி காய்ச்சல் தீவிரம்; உஷார் நிலையில் தமிழகம்

Published on 11/01/2023 | Edited on 11/01/2023

 

swine flu in kerala tamil nadu ready to preparedness 

 

பீகார், உத்தராகண்ட், மிசோரம், சிக்கிம், திரிபுரா போன்ற மாநிலங்களில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவி வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் இரண்டு பன்றிப்பண்ணைகள் மற்றும் கோட்டயம் மாவட்டத்தில் ஒரு  பன்றிப்பண்ணை என மூன்று பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

 

கேரளாவில் பன்றி இறைச்சிகள் உணவு புழக்கம் அதிகம் என்பதால் அம்மாநில அரசு பன்றிக்கறி விற்பனைக்குத் தடை விதித்ததுடன், ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட பண்ணைகளில் உள்ள பன்றிகளுக்கு நோய்கள் மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு அங்குள்ள பன்றிகளைக் கொன்று புதைக்கும் படி உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பல பன்றிகள் உயிரிழந்துள்ளன. இந்தச் சூழலில் கேரளாவில் பரவி வருகிற ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் அண்டை மாநிலமான தமிழகத்திலும் பரவிவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

தமிழக - கேரள எல்லையான தென்காசி மாவட்டத்தின் புளியரை சோதனைச்சாவடி அருகே மாவட்டக் கலெக்டர் ஆகாஷ் உத்தரவுப்படி கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இயக்குனர் பொன்னுவேல், உதவி இயக்குனர் மகேஸ்வரி ஆகியோர் அறிவுறுத்தலின்படி கால்நடை மருத்துவர் ஜெயபால் ராஜா தலைமையிலான குழுவினர் முகாமிட்டு தமிழகத்திற்குள் வருகிற கேரள மாநிலத்தின் பன்றிகள் மற்றும் அவற்றின் கழிவுகள், பன்றியின் உணவுகள் மற்றும் கால்நடைகளை ஏற்றி வரும் வாகனங்களை நுழையவிடாமல் தடுத்து திருப்பி அனுப்புகின்றனர்.

 

மேலும், பறவைக்காய்ச்சலும் அதிகமாகப் பரவுவதால் வாத்து, கோழி முட்டை, கோழிகள் போன்ற இனங்களை ஏற்றி வரும் வாகனங்களும் கேரளாவுக்குள் திருப்பி அனுப்பப்படுகின்றன. மற்ற வாகனங்கள்  தீவிரமாகச் சோதனையிடப்பட்டு கிருமிநாசினி மற்றும் நோய்த்தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்ட பின்பே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. தமிழக - கேரள எல்லையில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணியில் 5 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

இதுகுறித்து கால்நடை மருத்துவர் ஜெயபால் ராஜா தெரிவிக்கையில், "கிருமிநாசினி தெளித்த பிறகே தமிழகப் பகுதிக்குள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. தமிழகத்தில் அதிகமான மக்கள் பன்றி இறைச்சி சாப்பிடுவதில்லை. எனவே பன்றி பண்ணைகளும் இங்கு குறைவு" என்றார். 

 

 

Next Story

மதுபான கூடம் அடித்து நொறுக்கம்... பொறுத்தது போதுமென பொங்கியெழுந்த பொதுமக்கள்!!

Published on 08/01/2022 | Edited on 08/01/2022

 

Crushing the bar ... people who got up in a rage!

 

விருதுநகரில் மக்களின் தொடர் போராட்டத்தை மீறி செயல்பட்ட தனியார் மதுபான கூடம் பொதுமக்களாலேயே அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள அன்னபூர்ணயாபுரம் அருகே தனியார் மதுபான கூடம் ஒன்று சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட அன்றிலிருந்தே அப்பகுதி மக்கள் அந்த மதுபான கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அருகிலேயே பள்ளி மற்றும் கோவில்கள் இருப்பதால் உடனடியாக தனியார் மதுபானக்கூடம் மூடப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்திவந்த நிலையில் எதிர்ப்பை மீறி மதுபான கூடம் செயல்பட்டு வந்தது. இது தொடர்பாகப் போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் கொடுக்கப்பட்டது.

 

Crushing the bar ... people who got up in a rage!

 

Crushing the bar ... people who got up in a rage!

 

இப்படி பல முயற்சிகள் எடுத்தும் அந்த மதுபானக்கூடம் மூடப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அந்த தனியார் மதுபான கூடத்தை செங்கற்களால் அடித்து நொறுக்கினர். 50 ஆயிரம் ரூபாய் பெறுமானமுள்ள மதுபாட்டில்கள், சிசிடிவி கேமராக்கள் அடித்து நொறுக்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் மண்ணெண்ணெய் கேனுடன் அடித்து நொறுக்கப்பட்ட மது கூடத்தின் முன் பொதுமக்கள் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த வெம்பக்கோட்டை தாசில்தார், காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதோடு  அடித்து நொறுக்கப்பட்ட மது கூடத்திற்கு சீல் வைத்தனர்.