Skip to main content

பெண்ணை நீதிமன்ற வளாகத்தில் இழுத்து சென்ற பெற்றோர்... பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு!

Published on 13/10/2021 | Edited on 13/10/2021

 

The parents who dragged the girl to the court premises

 

நாகை சார்பதிவாளர் அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ள வந்த இளம்பெண்ணை, கையெழுத்து போடும்போது சினிமா பாணியில் பெண்ணின்  உறவினர்கள் வந்து இழுத்துச் சென்று காரில் ஏற்றியபோது பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பெண்ணை மீட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியைச் சேர்ந்த பாரதி (23) என்பவரும், நாகை மாவட்டம் செம்பியன்மாதேவி கிராமத்தைச் சேர்ந்த மதன்ராஜ் (24) என்பவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிவருகின்றனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களான இருவருக்கும் ஏற்பட்ட நட்பு காலப்போக்கில் காதலாக மாறி, இரண்டு ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளனர்.

 

ஒருகட்டத்தில் இருவரின் காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவர, இருவரது காதலையும் கடுமையாக எதிர்த்துள்ளனர். இந்தநிலையில், இருவரும் பதிவு திருமணம் செய்ய திட்டமிட்டு, கடந்த 9ஆம் தேதி திருச்சியிலிருந்து நாகை வந்து நேற்று (12.10.2021) பதிவு திருமணம் செய்ய திட்டமிட்டு தலைமறைவாக இருந்தனர். நேற்று பதிவுத் திருமணம் செய்வதற்கு முன்பே நாகையில் உள்ள பிரசித்திபெற்ற ஒரு கோவிலில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதன்பின்னர் வழக்கறிஞர்கள் மூலமாக முறைப்படி பதிவுத் திருமணம் செய்ய நாகை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். இந்த விவகாரம் பெண்வீட்டிற்கு தெரிந்து, பதிவுத் திருமணம் செய்து இறுதியாக கையெழுத்து போடும் நொடிநேரத்தில் நாகை சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் சினிமா பானியில் நுழைந்த பெண்ணின் உறவினர்கள், பெண்ணை அடித்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்.

 

இந்தச் சூழலில் சார்பதிவாளர் அலுவலகத்திலேயே இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டது. ஆனாலும் பெண்ணின் உறவினர்கள் பெண்ணை விடாப்பிடியாக அங்கிருந்து நாகை நீதிமன்ற வளாகத்தின் வழியாக இழுத்துச் சென்றனர். அப்போது அந்தப் பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்டு நீதிமன்ற வலாகத்தில் இருந்த பொதுமக்கள் திரண்டுவந்து அவர்களிடம் கேட்டனர். அவர்கள் பதில் ஏதும் கூறாமல், பெண்ணை காரில் ஏற்றுவதற்கு முயற்சி செய்தனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் காரை மறித்துப் பெண்ணை கீழே இறக்கிவிடும்படி கூச்சலிட்டனர். பெண்ணின் தந்தையோ "நான் ஒரு கிராம நிர்வாக அலுவலர், என்னை யாரும் தடுக்கக் கூடாது," என்றும் அங்கிருந்த பொதுமக்களிடமும், அந்தவழியாக வத்த பெண் காவலர் ஒருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

add

 

இந்த விவகாரம் அருகில் இருந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குத் தெரியவர, அங்கு கூடுதல் போலீசார் அனுப்பப்பட்டு காரை மறித்துப் பெண்ணை மீட்டு நீதிபதியிடம் அழைத்துச் சென்றனர். பாதிக்கப்பட்ட காதலர் மதன்ராஜ், தங்கள் இருவருக்கும் பாதுகாப்பு வழங்கி, தனது மனைவியை மீட்டுத்தர வேண்டும் என்று வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். நாகையில் நடந்த சாதி மறுப்பு திருமணத்தைத் தடுத்து நிறுத்தி பெண்ணை பெற்றோர்கள் நீதிமன்ற வளாகம், எஸ்.பி. அலுவலகம் அருகிலேயே வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.