Skip to main content

"நம்ம ஊரு, நம்ம முன்னேற்றம்" - முகநூல் முயற்சியாளர்கள்.

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

மனிதன் அன்றாட தேவையாக விளங்குவது தான் தண்ணீர். விவசாயம், உயிரிணங்களுக்கான வாழ்வியல் என அனைத்திலும் முதன்மை தேவையாக விளங்குவது தண்ணீர். தண்ணீரின்மையால் பல்வேறு கிராமங்கள் விவசாய நிலங்கள், விவசாயிகள் மற்றும் வளர்ப்புப் பிராணிகள் என அனைத்தும் அழிவின் விளிம்பில் உள்ள இச்சூழலில் இளைஞர்களாகிய நாம் ஒவ்வொரு நிமிடமும் சிந்தித்துப் பயணிக்க வேண்டியுள்ள கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இச்சூழலில் சமூகவலைதளங்களில் ஓர் அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தன் கிராம மக்களுக்கு சேவை செய்யும் மனப்பக்குவம் அனைவருக்கும் வந்துவிடாது. ஆனால் அதை மிக எளிதாக முன்னெடுத்துச் சென்றுள்ளனர் முகநூல் பிரியர்கள்.
 

youth union

   

திண்டுககல் மாவட்டம் நிலக்கோட்டை அருகிலுள்ள ஜெயநாயக்கன்பட்டியில் இருபது வருடங்களுக்கு முன் விவசாயம் , கால்நடைகள் , நீர்நிலைகள் மற்றும் மக்களின் வருமானநிலை என அனைத்தும் உயர்ந்து காணப்பட்ட இக்கிராமத்தில் இன்று குடிநீருக்கே பெரும் பஞ்சம் ஏற்பட்டுள்ளன. இதனால் விவசாயம், கால்நடை என அனைத்தும் அழிவின் விழிம்பை நோக்கிச் சென்றுவிட்டது.ஊர் மக்கள் தங்கள் வருமானத்தைத் தேடி பெரும் நகரங்களுக்கு இடம் பெயர ஆரம்பித்துவிட்டனர். அச்சூழலில் தன் கிராமத்தை காக்க புயலன் திறன்ட இளைஞர்கள் தங்களின் விடாமுயற்சியால் பல்வேறு இன்னல்களை சந்தித்தாவது கிராமத்தை பழைய நிலைக்குக் கொண்டுவரவேண்டும் என்ற முயற்சியில் ஒரு முகநூல் அமைப்பை உருவாக்கினர்.

  

social workers

பள்ளிப்பயிலும் பருவத்தில் இருந்தே தன் கிராமத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணங்கள் அனலாக பறக்க கிராம இளைஞர்கள் இணைந்து "நம்ம ஊரு, நம்ம முன்றேற்றம்", என்ற முகநூல் பக்கத்தை உருவாக்கி அதன் மூலம் தங்கள் பகுதியில் வாழும் மக்களுக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகின்றது என்பதை ஆராய்ந்து அதற்காக செயல்பட தொடங்கினர்.


முதல் கட்டமாக தங்களுடைய பகுதியில் பெரும் பிரச்சனையாக திகழ்ந்த குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்தனர்.பொதுவாக நிலக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மாதம் ஒருமுறை குடிநீர் விநியோகம் இன்றும் வழங்கப்படுகின்றன.ஆனால் இந்த முகநூல் பிரியர்கள் தங்கள் முதல் முயற்சியை சொந்த ஊரிலேயே  நிறைவேற்ற எண்ணி  அனைத்து சமுதாய மக்களும் பயன்படும் வகையில் பொது இடத்தில் 20- க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய்களை அமைத்து அதில் மாதம் மூன்று அல்லது நான்கு முறை குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது. 


அதுமட்டுமின்றி தங்கள் கிராமத்தில் வருங்கால தலைமுறையை நல்வழியில் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அக்கிராம குழந்தைகளுக்கு சமூக உணர்வுகளுடன் கூடிய மாலைநேரப்பள்ளி என்ற ஒன்றை ஆரம்பித்து அதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் படிப்பை வழங்கிவருகிறனர். மாதம் ஒரு முறை மாணவர்களுக்கு வருங்காலங்களில் என்ன மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் அதை தவிர்க்க நாம் என்னென்ன வழிமுறைகளை கையாள வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றனர்.மாணவர்களுக்கு ஏற்ற கட்டமைப்புக் கொண்ட ஓர் இடத்தை ஏற்பாடு செய்து, அதைச்சுற்றிலும் மாணவர்கள் வளர்க்கப்பட்ட மரங்களே மாணவர்களின் முயற்சியை அடையாளப்படுத்துகின்றது. இவ்வமைப்பினர் தங்களுக்கான செலவினை தாங்களே பூர்த்திச்செய்து கொள்கின்றனர்.

 

சமூகவளைதளங்கள் மூலம் தங்களின் வாழ்க்கையை தொலைத்தவர்களுக்கு சவாலாக விளங்குகின்றனர். இது போன்ற சமூக போராளிகளின் முயற்சிகள் பல.
தன்னெழுச்சியாக முன்வந்து தொண்டாற்றும் இதுபோன்ற சமூக போராளிகளை நாமும் பாராட்டுவோம்.


பா.விக்னேஷ் பெருமாள்

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.