Skip to main content

ஆர்டர் செய்தது 76 ரூபாய் பிரியாணி... பறிபோனது 40 ஆயிரம்...!;பணத்தை இழந்த கல்லூரி மாணவி!

Published on 05/07/2019 | Edited on 05/07/2019

சென்னையில் உபர் ஈட்ஸ் செயலியில் பிரியாணி ஆர்டர் செய்த கல்லூரி மாணவி 76 ரூபாய்க்கு 40 ஆயிரத்தை இழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. கூகுளில் கொட்டிக் கிடக்கும் சேவை எண்களில் அதிகம் போலியே இப்படி போலி சேவை எண்ணால் சுளையாக 40 ஆயிரத்தை இழந்துள்ளார் ஒரு கல்லூரி மாணவி. 

 Ordered 76 rupees Biryani ... Lost 40 thousand ...!


சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த மாணவி பிரியா அகர்வால். இவர் தன் நண்பர்களுடன் வடபழனிக்கு வந்துள்ளார். அப்போது பிரியாணி சாப்பிடலாம் என நினைத்து தனது செல்போனில் இருந்து உபர் ஈட்ஸ் செயலி மூலம் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார் அந்த கல்லூரி மாணவி. பிரியாணிக்கான தொகை 76 ரூபாய்  மாணவி பிரியாவின் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால் பணம் பிடித்தம் செய்யப்பட்ட பிறகு ஆடர் ரத்து செய்யப்பட்டதாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. ஆனால் ஆன்லைன் மூலம் செலுத்திய பணம் 76 ரூபாய் திரும்ப வரவில்லை செய்யப்பட்ட ஆர்டர் மட்டும் ரத்து செய்யப்பட்டது.

cheating


இதனையடுத்து உபர் ஈட்ஸ் சேவை எண்ணுக்கு தொடர்பு கொண்டு இதுகுறித்து விளக்கம் கேட்கலாம் என அவர்  உபர் ஈட்ஸ் கஸ்டமர் கேர் எண்ணை கூகுளில் சர்ச் செய்துள்ளார். அப்போது வந்த நம்பரை  உபர் ஈட்ஸ்சின்  உண்மையான கஸ்டமர் கேர் நம்பர் என நினைத்து அந்த நம்பருக்கு கால் செய்து உள்ளார் அந்த மாணவி. எதிர்முனையில் பேசிய நபர் மாணவியின் வங்கி விவரங்களை வாங்கியுள்ளார். பின்னர் 76 ரூபாய் சின்ன தொகையாக இருப்பதால் ஆன்லைன் பரிவர்த்தனையில் திருப்பி செலுத்த முடியாது எனவே 5000 ரூபாயாக அனுப்பினால் மொத்தமாக சேர்த்து 5076 ரூபாயாக திருப்பி செலுத்தப்படும் என கூறியுள்ளார். இதனை நம்பிய மாணவி பிரியா கூகுள் பே செயலி மூலம் 5,000 ரூபாயை அந்த போலி சேவை மைய மோசடி நபர் சொல்லும் வங்கி எண்ணிற்கு அனுப்பி உள்ளார்.

 

 Ordered 76 rupees Biryani ... Lost 40 thousand ...!


இதன்மூலம் மாணவியின் வங்கி விவரங்களை தெரிந்து கொண்ட மோசடி நபர் பணம் வந்து சேரவில்லை என கூறிய மாணவியிடம் தற்போது உங்களுக்கு ஒரு ஓடிபி எண் வரும் அதைத் தெரிவித்தால் பணம் கணக்கில் வந்து சேரும் எனக்கூற மாணவியும் ஓடிபி எண்ணை தெரிவித்துள்ளார். ஆனால் தனது கணக்கில் பணம் வரவில்லை என மாணவி கூற அப்படியானால் மீண்டும் ஓடிபி எண்ணை கூறும்படி கேட்க, இப்படி எட்டு முறை ஓடிபி எண்ணை கேட்டுள்ளான். ஒவ்வொரு முறையும் 5000 வீதம் மொத்தம் 40 ஆயிரம் ரூபாயை அந்த மாணவியின் வாங்கி கணக்கில் சுருட்டிய பின் அதன்பிறகு தொடர்பை துண்டித்துவிட்டான் அந்த மோசடி நபர்.

 Ordered 76 rupees Biryani ... Lost 40 thousand ...!


அதற்குப் பிறகுதான் போலியான சேவை எண்ணிற்கு அழைத்து பணத்தை இழந்து விட்டோம் என்பது அந்த மாணவிக்கு தெரியவந்தது. இதனையடுத்து வடபழனி காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட மாணவி புகார் அளிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி நபர் தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 Ordered 76 rupees Biryani ... Lost 40 thousand ...!


இதேபோன்று அண்மையில் கூகுளில் இருக்கும் கூகுள் பே சேவை எண்ணுக்கு தொடர்பு கொள்வதாக கூகுளில் வந்த போலியான சேவை எண்ணை தொடர்புகொண்டு சென்னையில் பணிபுரியும் ஆசிரியர் பௌவுலின் என்பவர் இதேபோல் பணத்தை இழந்தது குறிப்பிடத்தக்கது.

 

 Ordered 76 rupees Biryani ... Lost 40 thousand ...!

இதுபோன்று தெரியாமல் போலி சேவை எண்களை தொடர்பு கொள்ளபவர்களிடம் மர்ம நபர்கள் இது போன்று ஓடிபி எண்களை பெற்றுக்கொண்டு அவர்களது வங்கி கணக்கில் பணத்தை திருடும் சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருவதாகவும், இதுதொடர்பாக சென்னை வங்கி மோசடி தடுப்பு பிரிவில் புகார்கள் குவிந்து வருவதாகவும் இதனால் பொதுமக்கள் தனியார் பணப்பரிவர்த்தனை செயலிகள் பயன்படுத்தும்போது மிகவும் எச்சரிக்கையாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்