Skip to main content

ஓபிஎஸ் கூட போனவர்  தான் அதை செய்தார்!  ஜக்கையன் பகீர் பேச்சு!!

Published on 15/10/2018 | Edited on 15/10/2018

 

ja


கடந்த  இரண்டு நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும்  எடப்பாடியார் பேரவை என்ற பெயரில் கேம்.எம்.பட்டியை சேர்ந்த பால்பாண்டியன் 
என்பவர் போஸ்டர் அடித்து ஒட்டியது மாவட்டம் மட்டும்மல்ல மாநில அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
     

  இப்படி ஒரு போஸ்டரை எடப்பாடி  ஆதரவாளரான கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் கோஷ்டியை சேர்ந்த பால்பாண்டியன் தான் ஒட்டினார் என்ற பேச்சு மாவட்ட அளவில் உள்ள கட்சி காரர்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. 


        
இந்த நிலையில் தான் கம்பம் வந்த சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையனிடம் பத்திரிகையாளர்கள் சில கேள்விகளை எழுப்பியபோது... கடந்த  இரண்டு வருடமாகவே அனைத்து  அரசு விழாவிலும் கலந்து கொண்டு தான் வருகிறேன்.  சமீபத்தில் ஒரு  விழாவுக்கு மட்டும் போக வில்லை.  அதுவும் எனக்கு உடல் நலம் சரியில்லாமல் போனதால் போக முடிய வில்லை. இங்குள்ள புதுப்பட்டியில் தங்கி  கொண்டு கடந்த இரண்டு  ஆண்டுகளில்  ஒவ்வொரு பகுதிகளுக்கும் நூறு தடவை போய் மக்கள் பணியாற்றி வருகிறேன். 


அரசியல் கட்சி  என்று  இருந்தால் அதில் உள்கட்சி பிரச்சினை இருக்கத்தான் செய்யும்.  அது காலப் போக்கில் சரியாகி விடும் என்று சொன்ன ஜக்கையனிடம் எடப்பாடியார் பேரவை என்ற பெயரில் போஸ்டர் ஒட்டிய பால்பாண்டியன்  உங்க ஆதவாளர் என்று சொல்கிறார்களே என்றதற்கு..அவர் என்னுடைய ஆதரவாளர் இல்லை  ஓபிஎஸ்  தர்மயுத்தம் நடத்திய போது அவருடன் இருந்த பால் பாண்டியன் தான் அப்படி செய்திருக்கிறாரே தவிர எங்களுக்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதுபோல் மாவட்டத்தில்  எடப்பாடி அணி ஒபிஎஸ் அணி எல்லாம் இல்லை  எல்லோரும் ஒரே அணியாக தான் செயல்பட்டு வருகிறோம் மாவட்டத்தில் எந்த ஒரு நிகழ்சியாக இருந்தாலும் பெயர் போட்டு தகவலும் சொல்லி விடுவார்கள். நானும் ஓபிஎஸ் சுடன் இணைந்து தான் செயல்பட்டு வருகிறேன்.  


அதுபோல்  எடப்பாடியும் மிக சிறப்பாக ஆட்சி  செய்து வருகிறார். ஓபிஎஸ்சும் கட்சியின் ஒருங்கிணைப்பையும் மிக சிறப்பாக செய்து வருகிறார் என்று கூறினார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.