Skip to main content

"கருவை கலைச்சிட்டு வா கல்யாணம் பண்ணி வைக்கிறேன்!" - இளம்பெண்ணை ஏமாற்றிய குடும்பம்!

Published on 16/04/2021 | Edited on 16/04/2021

 

The one who got married and went home, came only twice a week ... cheating came to light

 

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிங்கிரிபாளையம், வடக்கு வீதியைச் சேர்ந்த 25 வயதான இளம்பெண் முத்துமாரி. அவர் இன்று 16ந் தேதி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து ஒரு புகார் மனுவைக் கொடுத்தார். பிறகு அவர் கூறும்போது, “சென்ற 2018 ஆம் ஆண்டு சமூக வலைதளமான ஃபேஸ்புக் மூலம் தீனதயாளன் என்பவருடன் எனக்கு நட்பு ஏற்பட்டது. இந்தப் பழக்கம் எங்களுக்குள் நாளடைவில் காதலாக மாறியது.

 

தீனதயாளன் எனக்கு திருப்பூரில் வேலை வாங்கித்தருவதாகக் கூறினார். நானும் திருப்பூருக்குச் சென்றேன். பெருமாநல்லூரில் உள்ள நேதாஜி அப்பேரல் பார்க் என்ற இடத்தில் உள்ள ஒரு கம்பெனியில் அவர் என்னை வேலைக்குச் சேர்த்துவிட்டார். நான் அந்த கம்பெனியின் மகளிர் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தேன். தீனதயாளனும் நானும் விடுமுறை நாட்களில் நேரில் சந்திப்பதும் பிறகு தொலைப்பேசியில் பேசுவதும் வாடிக்கையாக இருந்தது. ஏன் மகளிர் விடுதியில் தங்க வேண்டும் வெளியில் தனியாக வீடு பார்த்துள்ளேன், அதில் தங்கலாம் எனக் கூறினார்.

 

இதனால் நான் விடுதியை காலி செய்து அவருடன் ஒரே வீட்டில் தங்கி திருமணம் ஆகாமலேயே கணவன் மனைவியாய் வாழ்ந்து வந்தோம். உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் எனக் கூறி என்னோடு உறவு வைத்துக் கொண்டார். ஆறு மாதம் பொறுத்திரு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்வதாக உறுதி கொடுத்தார். நான் முழுமையாக அவரை நம்பினேன். பிறகு அவர் அவரது வீட்டுக்குப் போய் விட்டார். வாரத்துக்கு இரண்டு முறை மட்டுமே வந்து என்னோடு இருந்து செல்வார். இந்த நிலையில், நான் கர்ப்பம் ஆனேன். தீனதயாளனிடம் இதுபற்றி கூறி என்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ளுங்கள் என வேண்டினேன்.

 

அவர் என்னை திருமணம் செய்ய முடியாது என்று கூறினார். அதிர்ச்சியடைந்த நான் கோபி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றேன். அப்போது தீனதயாளனின் பெற்றோர் வந்து என்னைத் தடுத்து நிறுத்தி நாங்கள் திருமணம் செய்து வைக்கிறோம் என உறுதி கூறினார்கள். அதே போல் உங்கள் திருமணம் நடைபெற வேண்டுமென்றால் நீ கர்ப்பத்தைக் கலைத்து விட்டு வர வேண்டும் என்றனர். பிறகு தீனதயாளனின் அம்மாவே என்னை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எனது வயிற்றில் இருந்த கருவைக் கலைக்க வைத்தார். பிறகு இப்போது நடந்த தேர்தலில் ஓட்டு போடுவதற்காக எனது ஊருக்கு என்னை அனுப்பி வைத்தார்.

 

தேர்தல் முடிந்து ஓட்டு போட்டப் பிறகு மீண்டும் அவங்க ஊருக்கு நான் சென்றபோது நீ இனிமேல் இங்கு வரக்கூடாது என தீனதயாளன், அவரது பெற்றோர்கள் என்னை மிரட்டினார்கள். என் மகன் உன்னுடன் சேர்ந்து வாழ மாட்டான் எனக் கூறி என்னை துரத்தி விட்டனர். இதனால், நான் மிகுந்த மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் உள்ளாகி உள்ளேன். என்னைத் திருமணம் செய்வதாகக் கூறி கட்டாயப்படுத்தி என்னோடு உறவுவைத்து அதன் மூலம் உருவான கருவைக் கலைக்க வைத்த எனது கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் ஏமாற்றப்பட்டுள்ளேன், எனது நிலை போல் வேறு யாருக்கும் வரக்கூடாது என்றால் ஃபேஸ்புக்கை நம்பாதீங்க” என்றார் பரிதாபமாக.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.