Skip to main content

சத்தியமங்கலம் அருகே மூச்சுத் திணறல் ஏற்பட்டு முதியவர் பலி

Published on 30/12/2023 | Edited on 30/12/2023
 old man passed away of suffocation near Sathyamangalam

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கோட்டுவீராம்பாளையம், பழைய போஸ்ட் ஆபிஸ் பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன் (65). அந்தப் பகுதியிலேயே பெட்டிக் கடை வைத்துள்ளார். இவருக்குத் திருமணமாகவில்லை. கதிரேசன், தனது சகோதர, சகோதரிகள் 6 பேருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். கதிரேசனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் கதிரேசனுக்கு நேற்று முன் தினம் இரவு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை, சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு கதிரேசனை பரிசோதனை செய்த மருத்துவர், வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்