Skip to main content

நிலக்கோட்டை தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ.களுடன் திமுக போட்டி..!

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை (தனி) சட்டமன்றத் தொகுதி அதன் அடிப்படையில் தான் திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டு வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கோட்டையாக இருந்து வந்தது. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 6 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற மூத்த காங்கிரஸ் தலைவரான பொன்னம்மாளின் உறவினர் தான் திமுக வேட்பாளரான வழக்கறிஞர் சௌந்தரபாண்டியன் இப்படி காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்த சௌந்திரபாண்டியன் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு திமுகவில் ஐக்கியமாகி திமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியாக இருந்து வருகிறார்.

 

soundarpandiyan


இவருடைய சொந்த ஊர் நிலக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டி ஆகும். இந்த செம்பட்டியில் இருந்து கொண்டுதான்  வழக்கறிஞர் தொழில் செய்துவரும் சௌந்திர பாண்டியன், கட்சி தலைமை அறிவிக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டு கட்சிக்காரர்களுடன் நெருக்கமாக இருந்து கொண்டு கட்சி பணியாற்றி வருகிறார். அதோடு கட்சிக்காரர்கள் மற்றும் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் தானே முன் சென்று பிரச்சனைகளையும் தீர்த்து வைத்து தன்னால் முடிந்த உதவிகளையும் செய்துவருகிறார். இதன் மூலம் கட்சிக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்து வருகிறார். 
 

அதோடு கழக துணை பொதுச் செயலாளரும், துணைச் செயலாளரும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சருமான ஐ பெரியசாமி மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் ஆகியோரின் தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். 
 

அதன் அடிப்படையில்தான் இத்தொகுதிக்கு 20-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்து நேர்காணலுக்கு சென்றுவிட்டு திரும்பிகூட அதில் யாரை  தேர்தல் களத்தில் இறங்கினால் வெற்றி பெற முடியும் என ஐ. பெரியசாமி, மாவட்ட செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோருடன் கட்சிப் பொறுப்பாளர்களும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதின் பேரில் கட்சி மற்றும் கூட்டணி கட்சி பலத்துடன் இருக்கக்கூடிய சௌந்திரபாண்டியனுக்கு சீட்டு கொடுக்க முடிவு செய்தனர். அதை ஸ்டாலினிடம் வலியுறுத்தியதின் பேரில்தான் நிலக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளராக சௌவுந்திரபாண்டியனை ஐ.பி. பரிந்துரையின் பெயரில் ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார் என பேசப்படுகிறது.
 

thenmozhi


அதுபோல் அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ தேன்மொழியை களமிறங்கியிருக்கிறார்கள். தேன்மொழி கடந்த 2006-ல் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது பெயர் சொல்லும் அளவுக்கு தொகுதிக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் சரிவர செய்யவில்லை. அதுபோல் தேன்மொழி என் கணவர் சேகர் நிலக்கோட்டை பேரூராட்சி தலைவராகவும். பேரூர் கழக செயலாளராகவும் இருந்தும் கூட நகர மக்களின் அடிப்படை வசதிகளை சரிவர பூர்த்தி செய்யவில்லை அந்த அளவுக்கு தேன்மொழி மீதும் அவருடைய கணவர் சேகர் மீதும் மக்கள் மத்தியில் ஏற்கனவே ஒரு அதிருப்த்தி இருந்து வருகிறது.  


அதுபோல் ஆட்சி வந்தவுடன் யார் அமைச்சரோ அந்தப்பக்கம் இவர்கள் சாய்ந்து விடுவதும் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த முறை  முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் ஆதரவாளராக இருந்த தேன்மொழியும், கணவர் சேகரும் தற்பொழுது சிட்டிங் அமைச்சரான வனத்துறை அமைச்சர் சீனிவாசனின் ஆதரவாளராக இருந்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் தான் அமைச்சர் சீனிவாசனின் பரிந்துரையின் பெயரில் தேன்மொழிக்கு மீண்டும் சீட் கிடைத்திருக்கிறது என இவர்கள் தரப்பில் பேசப்படுகிறது. ஆனால் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்ற  அதிருப்தியும் தொகுதியில் உள்ளவர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதுபோல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் எம்எல்ஏவும். டிடிவி ஆதரவாளருமான தங்கத்துரையும் மீண்டும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தொகுதியில் களம் இறங்க இருப்பதால் தேர்தல் களமும் சூடு பிடிக்கப் போகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எடப்பாடி செய்த சதியை முறியடிக்கத் தயாராக இருக்கிறேன்” - ஓ.பி.எஸ்.ஸின் பிரத்யேக பேட்டி

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
ready to defeat tready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPShe conspiracy of EPS says Exclusive interview with OPS

தேனி பாராளுமன்றத் தொகுதியில் பி.ஜே.பி. கூட்டணி சார்பில் அ.ம.மு.க. வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுவதால் ஓ.பி.எஸ்.ஸின் முழு ஆதரவும் டிடிவிக்கு இருக்கிறது. அதோடு டிடிவியும் நான் போட்டி போடுகிறேன் என்று தெரிந்து தான் இத்தொகுதியை ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகன் ஓ.பி.ஆர்.ரும் எனக்காக விட்டுக் கொடுத்தும் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு ஓபிஎஸ்ஸும் டி.டி.வி.யும் தேர்தல் களத்தில் நெருக்கமாக இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கலின் இறுதி நாளான நேற்று 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய டிடிவி தினகரன் மதியத்துக்கு மேல் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வருவதாக இருந்தது. இந்த விஷயம் ஓபிஎஸ்-க்கு தெரியவே, மதியம் ஒன்னேகால் மணிக்கு எல்லாம் தேனி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தவர் அலுவலக வளாகத்தில் உள்ள மரத்தடியில் நின்று கொண்டு டிடிவியை வரவேற்க காத்துக் கிடந்தார். அவருடன் ஆதரவாளர்களான செல்லமுத்து மற்றும் சையதுகான் ஆகியோர் இருந்தனர்.

ad
ஓபிஎஸ் உடன் நமது நிருபர்

அப்போது நாம் முன்னாள் முதல்வரான ஓபிஎஸ்ஸிடம் சென்று நம்மை நக்கீரன் நிருபர் என்று அறிமுகப்படுத்திய உடனே ஆசிரியர் நல்லா இருக்காரா? என்று கேட்டார். அதைத் தொடர்ந்து நாமும் ஆசிரியர் நலமாக இருக்கிறார் என்று கூறியவாறே தொகுதியின் தேர்தல் பணி எந்த அளவுக்கு இருக்கிறது என்று கேட்டபோது, “நான் போட்டி போடும் அந்த தொகுதியில் பிரதமர் மோடி தான் போட்டிப் போடுவதாக இருந்ததால் அங்குள்ள கட்சியினர் தொகுதியை ஒரு கட்டுக்கோப்பாக பிரதமருக்காக தயார் செய்தும் வைத்திருந்தனர். ஆனால் பிரதமர் இங்கே போட்டி போடவில்லை என்பதால் என்னையத்தான் நிற்க சொன்னார். அதன்பேரில் தான் போட்டி போடுகிறேன்” என்றவரிடம் அத்தொகுதியில் முக்குலத்தோர் சமூக ஓட்டுக்கள் அதிகமாக இருக்கிறதா என்று கேட்டபோது, அத்தொகுதியில் மொத்தம் பதினாறு லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. இதில் சிறுபான்மை சமூக ஓட்டுகள் இரண்டு லட்சம் இருப்பதாக தெரிகிறது. அதுபோல் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள் ஆறு லட்சத்திற்கு மேல் இருப்பதாக தெரிகிறது. மீதி மற்ற சமூக மக்கள் இருக்கிறார்கள் என்றவரிடம், உங்களுடைய வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு என்னுடைய வெற்றி உறுதி இறைவன் இருக்கிறார்” என்றார்.

உங்களை பெயரிலேயே ஐந்து சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்து இருக்கிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, “நான் வெற்றி பெறக் கூடாது என்பதற்காகவே எடப்பாடி செய்த சதி. அதையும் முறியடிக்க தயாராக இருக்கிறேன்” என்றார். தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க.வினர் கூட டிடிவிக்கு மறைமுகமாக சப்போர்ட் பண்ண இருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறதே என்று கேட்டதற்கு சிரித்துக் கொண்டே “அதுவும் நடக்கலாம் நான் சொன்னது போல் தமிழகம் முழுவதுமே அ.தி.மு.க. படுதோல்வி அடையும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தார்.

ready to defeat the conspiracy of EPS says Exclusive interview with OPS

அப்போது தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்குள் இரண்டேகால் மணிக்கு டிடிவி வந்தார். அவரை ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். அதன்பின் ஓ.பி.எஸ். தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் மரத்தடியிலேயே நின்றார். அப்போது பயனாளிகளுக்காக போடப்பட்டிருந்த இரும்பு சேரில் ஓ.பி.எஸ் உடன் வந்த இருவரும் உட்கார்ந்து இருந்தனர். அதைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தனது வேட்புமனுவை தேர்தல் அதிகாரியான ஆட்சியரிடம் தாக்கல் செய்துவிட்டு வந்தார். வந்தவர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியும் கொடுத்தார். அதுவரை ஓபிஎஸ் டிடிவியுடனே நின்றுவிட்டு டிடிவியை பிரச்சார வேனில் திரும்ப வழியனுப்பி விட்டுத்தான் திரும்பினார்.

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.