Skip to main content

நவப்பாசன முருகனுக்கு பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும்! உரியவர்கள் கோரிக்கை!!

Published on 18/07/2018 | Edited on 18/07/2018

ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போகர் சித்தரால் உருவாக்கப் பட்ட நவபாசனமான ஞான தண்டாயுதபாணி சிலை தான் பழனி மலையில் உள்ள மூலஸ்தானத்தில்  இருக்கிறது.இப்படிப்பட்ட நவப்பாசன சிலையை மறைத்து ஐம்பொன்சிலை வைத்ததில் மோசடி நடத்தியதின் பேரில் ஸ்தபதி முத்தையா உள்பட கோவிலில் பணிபுரியந்த சில அதிகாரிகளுக்கும் தொடர்பு  இருப்பதை சிலைதடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான காக்கிகள் கண்டு பிடித்து அதிரடி விசாரண நடந்து வருகிறது. 

 

STATUE

 

 

 

இந்தநிலையில் தான் போகரால் உருவாக்கப்பட்ட நவப்பாசன முருகன் சிலையை 205ஆண்டு காலம் பூஜைகள் செய்து வந்த புலிப்பாணி வம்சா வழிவந்த  13 வது பட்டம் பெற்ற பழனி மலை அடிவாரத்தில் உள்ள சிவானந்த புலிப்பாணி  பாத்திர சுவாமியோ நவப்பாசன  சிலைக்கு  எங்கள் தலைமையில் பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும்  என மதுரை ஐகோட்டில் வழக்கு  தொடர்ந்திருக்கிறார். 

        

இதுபற்றி சிவனாந்த புலிப்பாணி பாத்திர சுவாமியிடம் கேட்ட போது, போகர் சித்தரால் உருவாக்கப் பட்ட நவப்பாசன சிலைக்கு உரிமைபட்டவர்களும் உரியவர்களும் நாங்கள்தான் எனவேதான் அப்படிபட்ட நவப்பாசன ஞானதண்டாயுதபாணிக்கு எங்கள்  தலைமையில் பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும் என கடந்த மாதம் அறநிலையத்துறைக்கு மனு கொடுத்தும் கூட எந்த ஒரு பதிலும் வரவில்லை.  அதனால்தான்  மதுரை ஐகோட்டில் மனு தாக்கல் செய்தோம். அதன்படி மனுவை விசாரித்த நீதிபதியும் கூட அரசு நவப்பாசன சிலையை பாதுகாத்துதான் வருகிறது பாதுகாப்புடனும் இருக்கிறது என்று கூறியுள்ளதே தவிர எப்படி பாதுகாக்கப்பட்டு வருகிறார்கள் என்ற விஷயத்தவே சொல்லவில்லை அதனால் மீண்டும்  ரிட் மனு தாக்கல் செய்து கேட்க இருக்கிறோம்.

 

STATUE

 

 

 

 கடந்த 1984  முன்பு எல்லாம் அனைத்து பூஜைகளும் மூலவருக்கு செய்யப்பட்டு வந்தது அதன் பிறகு சிலை சேதாரமாகி  வருகிறது என்று சொன்னதின் பேரில் தான் தற்பொழுது ஆறு கால பூஜைகள் மட்டும் செய்து வருகிறார்கள் ஆனால் அந்த  நவப்பாசன சிலைக்கு பாதுகாப்பு என்பது கிடையாது அப்படி இருக்கும்போது கோர்ட்டும் அரசு சொன்னதை கேட்டு பாதுக்கப்பட்டு வருகிறது என்றால் யார் பாதுகாக்கிறார்கள் என்று தெரியவேண்டும்.

 

 கோவில் இணை ஆணையரா?,குருக்களா?,பண்டாரங்களா?அல்லது கோவில் செக்யூரிட்டிகளா இப்படி யாருன்னு சொல்லாமலே கோர்ட்டும் அரசு சொல்வதை கேட்டு பதில் சொல்கிறதே தவிர நாளைக்கு ஏதாவது சிலைக்கு பாதிப்பு வந்தால் ஏற்கனவே கை கால் பழுந்தடைந்து விட்டது என கூறிவருகிறார்கள் அப்படி இருக்கும்போது மேலும் பழுதாகி கீழே விழுந்து விட்டது என சொன்னார்கள் என்றால் அதற்கு யார் பொறுப்பு.   எனவேதான் எங்க வம்சா வழியினர் பாதுகாத்து வந்த நவப்பாசன சிலைக்கு எங்க தலைமையில் ஒரு அமைக்கவேண்டும் என கூறுகிறோம்.

 

 அப்படி அமைந்தால் கோவில் அதிகிரிகள் முதல் அர்ச்சகர்வரை பயம் இருக்கும் அந்த  நவப்பாசன சிலையை முறையாக  பாதுகாப்பார்கள் இப்படிப்பட்ட நவப்பாசன  சிலையை போகரை தவிர இனி யாரலும் உருவாக்க முடியாது. எனவேதான் பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும்  என வலியுறுத்தி வருகிறோம்.  

 

 

ஐகோர்ட்டில் நியாயமான  நீதி கிடைக்க வில்லை என்றால் சுப்ரீம் கோர்ட்டுக்கு போய் நவப்பாசன சிலையை பாதுகாக்க குழு அமைக்க வேண்டும்  என்பதையும் வலியுறுத்த இருக்கிறோம் என்று கூறினார்.  ஆனால் புலிப்பாணி பாத்திர சுவாமிகள் கூறுவது போலவே பெரும்பாலன முருக பக்தர்களும் கூட  அந்த  நவப்பாசன முருகன் சிலையை பாதுகாக்க பாதுகாப்பு குழு அமைக்க வேண்டும்  என்பதையும் வலியுறுத்தி வருகிறார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.