Skip to main content

இஷ்டப்படி வாழ தடை போட்டதால் கொலை செய்தேன்... ரகசிய காதலனை சேலையால் கழுத்தை இறுக்கி கொலை செய்த பெண்!

Published on 10/07/2022 | Edited on 10/07/2022

 

 

namakkal district incident police investigation women arrested



என் இஷ்டப்படி வாழ தடையாக இருந்ததால் ரகசிய காதலனை சேலையால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்ததாக, நாமக்கல் அருகே கைதான பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார். 

 

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள திடுமல் ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). இவருடைய மனைவி கலாமணி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். 

 

விவசாயியான செல்வராஜ், கூடுதல் வருமானத்திற்காக சொந்தமாக இரண்டு ஆம்னி வேன்களை வைத்து வாடகைக்கு ஓட்டி வரும் தொழிலும் செய்து வந்தார். இந்நிலையில், பரமத்தி வேலூர் அருகே உள்ள கோலாரம் பாலக்கரையைச் சேர்ந்த சுதா (வயது 45) என்பவர் வீட்டில் செல்வராஜ், இறந்து கிடப்பதாக அவருடைய மனைவி கலாமணிக்கு தகவல் கிடைத்தது. 

 

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், உறவினர்களை அழைத்துக்கொண்டு, நிகழ்விடத்திற்குச் சென்றார். அங்கு தனது கணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததைப் பார்த்து கதறி அழுதார்.

 

இதுகுறித்து அவர், தனது கணவருடைய இறப்பில் சந்தேகம் உள்ளதாக நல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று, சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். உடற்கூராய்வுக்காக சடலம், நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

 

சடலம் கிடந்த வீட்டின் உரிமையாளரான சுதாவிடம் காவல்துறையினர் நடத்தி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. மர்மமான முறையில் இறந்து கிடந்த செல்வராஜூக்கும், சுதாவுக்கும் கடந்த 5 ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. அவர் கணவரை பிரிந்து, தன் ஒரே மகனுடன் தனியாக வசித்து வருகிறார். செல்வராஜ் எப்போது இந்தப் பகுதிக்கு வந்தாலும் அவர்கள் இருவரும் தனிமையில் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். 

 

அவர்கள் இடையேயான ரகசிய உறவு, சீராக போய்க்கொண்டிருந்த நிலையில், திடீரென்று சுதாவுக்கு இன்னொரு ஆணுடனும் நெருங்கிப் பழகத் தொடங்கினார். அந்த புதிய நபரை சுதா, வீட்டிற்கு வரவழைத்து 'நெருக்கமாக' இருந்ததை செல்வராஜ் நேரில் பார்த்து, கண்டித்துள்ளார். உடனடியாக அந்த தொடர்பை கைவிடுமாறு தொடர்ந்து கூறி வந்துள்ளார். 

 

இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் செல்வராஜ், குடிபோதையில் அவரை தாக்கத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில்தான், செல்வராஜ் உயிருடன் இருக்கும்வரை தன் இஷ்டப்படி வாழ முடியாது என்று யோசித்த சுதா, அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்திருக்கிறார். 

 

தனது திட்டத்தை நிறைவேற்ற நாள் குறித்த சுதா, ஜூலை 7- ஆம் தேதி, செல்வராஜிடம் சகஜமாக பேச்சுக்கொடுத்து, தன் வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அவரை அளவுக்கு அதிகமாக மதுபானம் குடிக்க வைத்துள்ளார். போதை தலைக்கேறியதால் அவர் அங்கேயே சரிந்து விழுந்தார். 

 

இதையடுத்து சுதா, தான் அணிந்திருந்த சேலையை அவிழ்த்து, செல்வராஜின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்திருக்கிறார். யாருக்கும் சந்தேகம் வந்து விடக்கூடாது என்பதற்காக அவர் மாரடைப்பில் இறந்து விட்டதாக நாடகமாடியிருக்கிறார். 

 

இதையெல்லாம் விசாரணையின்போது சுதா தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் கூறினர். இதையடுத்து, சுதாவை கைது செய்த காவல்துறையினர், பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் அவரை சேலம் பெண்கள் கிளைச்சிறையில் அடைத்தனர். 

 

இந்த துணிகரச் சம்பவத்தில் சுதா மட்டும்தான் ஈடுபட்டாரா? அவருடைய புதிய காதலனுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறை தரப்பில் சந்தேகம் உள்ளதாகவும், தேவைப்பட்டால் வரை காவலில் எடுத்து விசாரிப்போம் என்றும் காவல்துறையினர் கூறினர்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவிலுக்குச் சென்ற போது நேர்ந்த சோகம்; பெண்கள், மாணவிகள் 4 பேர் பலி

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
4 women who went to the temple drowned in the water and passed away

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா( 45) அவரது மகள் லலிதா (22). அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காவியா (18) அவரது 17 வயது தங்கை   உட்பட 4 பெண்கள் இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் அருகே உள்ள வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுள்ளனர். வழிபாடு முடிந்த நிலையில் முனீஸ்வரன் கோவிலுக்கு அருகே உள்ள வேப்பூர் ஏரியில் உள்ள தண்ணீரில் நான்கு பெண்களும் இறங்கி உள்ளனர் 

ஏரியில் உள்ள சுழலில் சிக்கி நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கி கூச்சலிட்டுள்ளனர். மேலும் நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கிய நிலையில் அக்கம் பக்கத்தினர் இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா, ஆகிய நான்கு பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே பகுதியைச் சேர்ந்த அம்மா, மகள் மற்றும் சகோதரிகள் என நான்கு பெண்கள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

சகோதரிகள் இருவரை 5 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
 Police arrested 4 people for misbehaving with two sisters

அருப்புக்கோட்டை - கல்லூரணியைச் சேர்ந்த பெண் ஒருவர், அருப்புக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், ‘என்னுடைய தங்கை,  அருப்புக்கோட்டை பெர்கின்ஸ்புரத்தில் வசித்து வருகிறார். நாங்கள் இருவரும் குறிஞ்சாங்குளத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில், எனது சம்பளப் பணத்தை வாங்குவதற்காக அருப்புக்கோட்டையில் உள்ள என்னுடைய தங்கை வீட்டிற்குச் சென்றபோது, எங்களுக்கு அறிமுகமான ராஜ்குமார் என்பவர் எங்களிடம், ‘உங்க மாமாவுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிருச்சு.’ என்று கூறி, எங்களை அழைத்துக் கொண்டு வாழ்வாங்கி காட்டுப் பகுதிக்கு கூட்டிச் சென்றார்.  அங்கு  மறைந்திருந்த  நான்கு பேரும், ராஜ்குமாரை தாக்குவது போல் தாக்கி, அவர் கண் முன்னே எங்கள் இருவரையும் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டனர்.’  எனக் குறிப்பிட்டிருந்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜ்குமார் உள்ளிட்ட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். டிஎஸ்பி ஜெகந்நாதன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர், இளம் பெண்களை அழைத்துச் சென்று விசாரணை  நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, சேதுராஜபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (வயது 24) என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, ராஜ்குமாரும், இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மற்ற நான்கு பேரும் கூட்டாளிகள் என்பதும், அதிலொருவன் 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து ராஜ்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், அந்த 17 வயது சிறுவன், ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் (வயது 26), சூரநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலாஜி (வயது 26) மற்றும் இளம் பெண்களை அழைத்துச் சென்ற ராஜ்குமார்(24) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர். தலைமறைவான பந்தல்குடியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரைத் தேடி வருகின்றனர்.