Skip to main content

நக்கீரன் இணையதள செய்தி எதிரொலி; தீண்டாமை வேலி அகற்றம்!!

Published on 16/02/2019 | Edited on 16/02/2019

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காட்டுமன்னார்குடி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் புதுபூலாமேடு என்ற கிராமத்தில் பட்டியல் இன சமூகபிரிவை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் வசிக்கும் பகுதிக்கு அரசு சார்பில் சாலைவசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் பயன்படுத்தி வந்த பொதுசாலையை மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் இந்த இடம் எங்களுக்கு சொந்தம் எனக்கூறி பாதையில் செல்வதற்கு வழியில்லை என மூங்கில் வேலியைகொண்டு தெருவின் பொதுபாதையை கடந்த 13-ந்தேதி  அடைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வேலியை எடுத்துபோட்டு செல்ல பயந்துகொண்டு அருகில் இருக்கும் பள்ளமான வயலில் இறங்கி சென்று வருகிறார்கள்.

 

 Nakheeran Internet News echo;Untouchability fence  Sequestration!!

 

பின்னர் இதுகுறித்து சிதம்பரம் சார் ஆட்சியர் விசுமகாஜனிடம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் அன்றைய தினமே மனுகொடுத்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் ரசீது மட்டும் கொடுத்துள்ளனர். ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அந்தபகுதி மக்கள் கூறுகிறார்கள்.

 

இதனைதொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக்குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன்,தேன்மொழி, மாவட்டக்குழு கற்பனைச்செல்வம், குமராட்சி ஒன்றிய செயலாளர் மூர்த்தி, ஒன்றியக்குழு மாசிலாமணி உள்ளிட்டவர்கள் சம்பவஇடத்திற்கு சென்று அப்பகுதி மக்களிடம் ஊர்கூட்டம் நடத்தி அதன் விபரத்தினை அறிந்தனர். பின்னர் ஊர்மக்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு வெள்ளிக்கிழமை இரவு சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து நிலமையை சார்ஆட்சியரிடம் எடுத்து கூறினார்கள். மேலும் இருநாட்களுக்குள் தீண்டாமை வேலியை எடுக்கவில்லையென்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று அவரிடம் கூறினார். அவரும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார்.

 

 Nakheeran Internet News echo;Untouchability fence  Sequestration!!

 

இந்நிலையில் சனிக்கிழமை சம்பவ இடத்திற்கு சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ் உள்ளிட்ட வருவாய்துறையினர், காவல்துறையினர் சென்று  பொதுபாதையை அடைத்துவைத்துள்ள வேலியை அப்புறபடுத்தினார்கள்.

 

இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு வாஞ்சிநாதன் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து வசித்து வருகிறார்கள். இவர்களின் குடியிருப்பை சுற்றி மாற்றுசமூகத்தினரின் வயல்கள் உள்ளது. இவர்களது வயல்களில் கூலிவேலைக்கு செல்லவில்லையென்றால். பட்டியல் இனமக்களின் பொதுபாதையை அடைத்துவைத்து அவர்களுக்கு சொந்தமானது என்று கூறுகிறார்கள். இது தீண்டாமையின் கோரவடிவம் மிகவும் கண்டிக்கதக்கது. தற்போது அடைத்து வைத்த பாதையை அகற்றினாலும் அவர்கள் மறுபடியும் அடைக்கசெய்வார்கள். எனவே சார்ஆட்சியர் தலைமையில் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் மேலும் பொதுபாதையை அடைத்தவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். 

 

மேற்கண்ட தகவல் குறித்து நக்கீரன் இணையத்தில் கடந்த14-ந்தேதி செய்தி வெளியானது. இதனை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். அதனடிப்படையில் அரசியல் கட்சியனர் மற்றும் பொதுநல அமைப்புகள் தீண்டாமை வேலியை அகற்ற வேண்டும் என்று போராட்டத்தை அறிவித்ததால் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் மூலம் அகற்றப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.