Skip to main content

நீட்டால் என் மகளும் உயிரை விட்டாளே; கதறிய தந்தை

Published on 06/05/2019 | Edited on 06/05/2019

மதுரையில் நீட் தேர்வு எழுதிவிட்டு பேருந்தில் சொந்த ஊருக்குத் திரும்பும்போது மயங்கி உயிரிழந்த மாற்றுத்திறனாளி மாணவியின் உடலை பார்த்து கதறி அழுத தந்தை முனியசாமி.

 

santhya

 

ராமநாதபுரம் மாவட்டம் பாப்பனம் கிராம பகுதியைச் சேர்ந்த முனியசாமி என்பவரின் மகள் சந்தியா 17 வயது மாற்றுத்திறனாளி. இவர் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுதுவதற்காக வந்துள்ளார். தேர்விற்காக காலையில் இருந்து உணவு அருந்தாத நிலையில் மதியம் உணவும் உண்காமல் மன அழுத்தத்தோடு தேர்வு எழுதியிருக்கிறார். இந்நிலையில் தேர்வு முடிவடைந்து பேருந்தில் ராமநாதபுரம் சென்று கொண்டிருக்கும்போது திருப்புவனம் அருகே சென்றபோது மாணவி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக பேருந்தில் இருந்தவர்கள் 108 மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 
 

மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தவிட்டார் என தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள உடற்கூராய்வு மையத்தில் உடற்கூராய்வு முடிந்து மாணவியின் உடலை பார்த்து கதறிய தந்தை முனியசாமி, “எல்லாம் இந்த பாழாய்போன ‘நீட்’டால் வந்தது. காலையில் சோதிக்கிறேன் என்று என் மகள் காதில் கிடந்த தோடு, காலில் கிடந்த கொலுசு முதற்கொண்டு கழுட்டினார்கள் அடுத்து துப்பட்டாவை கழுட்ட அவள் ஒத்துக்கொள்ளவில்லை வெட்கமா இருக்கு வேண்டாமே என்றதற்கு அதை கேட்காமல் உறுவிகொண்டனர். அழுது கொண்டே தான் பரிட்சை எழுத உள்ளே போனாள்.

 

santhya

 

சாப்பிடாமல் இருந்துள்ளார் எழுதிகொண்டிருக்கும்போது தண்ணீர் கேட்டுள்ளார் அதைகூட கொடுக்க மறுத்துள்ளனர். கடுமையான மன உளைச்சலில் தான் உயிர் பிரிந்துள்ளது. எல்லாத்துக்கும் நீட் தான் காரணம். என் மகளோடு நீட் பரிட்சை தொலையட்டும் இனி வரும் அரசு நீட்டை தடை செய்யவேண்டும்” என்று கதறி அழுதார். அடுத்து சொந்த ஊரான பாப்பனம் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் மூலமாக அவரின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடலை புதைக்க மறுத்து ஊர் மக்கள் தர்ணா செய்து வருகின்றனர். பதட்டமான சூழ்நிலையே காணப்படுகிறது. இது குறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Important announcement For the attention of NEET students

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு; தேசிய தேர்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Important notification For students appearing for NEET

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.