Skip to main content

குழந்தை நிலை அறியாமல் பரிதவித்த தாய்! களத்தில் இறங்கிய தீயணைப்புத்துறை! 

Published on 16/02/2022 | Edited on 17/02/2022

 

The mother who was devastated by not knowing the status of the child! Fire Department landed on the field!

 

சென்னை கோயம்பேடு, சின்மயா நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜு. இவருடைய மனைவி மோகனப்பிரியா. இத்தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில், நேற்று (15/02/2022)மாலை இளைய மகள் சாய் கிரானா (வயது 7) வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததால் கதவை லேசாகச் சாத்திவிட்டு மூத்த மகளை அழைத்துவர மோகனப்பிரியா பள்ளிக்குச் சென்றுவிட்டார். பள்ளியிலிருந்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டது.

 

நீண்டநேரம் முயற்சி செய்தும் கதவைத் திறக்கமுடியவில்லை. கதவைத் தட்டியும் சாய் கிரானா கதவைத் திறக்கவில்லை. அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் பயந்து போன மோகனப்பிரியா, இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து, 5 நிமிடத்தில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோயம்பேடு தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், ஏணி மூலமாக அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் 3-வது தளத்திலிருந்து பின் பக்கமாக வீட்டுக்குள் சென்று கதவைத் திறந்து பார்த்தனர். அங்கு சிறுமி சாய் கிரானா, தூங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. அதன் பிறகே நிம்மதி பெருமூச்சுவிட்ட மோகனப்பிரியா, தனது மகளை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

 

சாய் கிரானா தனது யூடியூம் சேனலில், சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தின் ஹிட் பாடலான ‘ஊம் சொல்றியா மாமா.. ஊம்.. ஊம்.. சொல்றியா மாமா’ பாடலுக்கு நடனமாடி ஒரு வீடியோ அப்லோட் செய்து அதன் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்