Skip to main content

கைக் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை...

Published on 09/09/2020 | Edited on 09/09/2020

 

Mother  jumped into well with baby


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ளது முருக்கேரி. இங்குள்ள அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், இவரது மனைவி யுவராணி(25). இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகள்தான் ஆகிறது. இவர்களுக்கு தன்ஷிகா என்ற 6 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. கோபாலகிருஷ்ணனுக்கு அப்பகுதியில் ஜவுளி மற்றும் நகைக்கடைகள் சொந்தமாக உள்ளன. இப்படி நல்ல வசதியான குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட யுவராணி ஏன் தனது கைக்குழந்தை தன்ஷிகாவுடன் அவர்கள் வீட்டின் பின்புறம் உள்ள குடிநீர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்? என்ற கேள்வி மக்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் பற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். 

 

திண்டிவனம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து கிணற்றில் குதித்து இறந்துபோன தாயையும் குழந்தையும் சடலமாக வெளியே மீட்டுக் கொண்டுவந்தனர். இரு உடல்களையும் கைப்பற்றிய பிரம்மதேசம் போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் போலீசாரின் விசாரணையில் யுவராணி பிறந்தது திருவெண்ணெய்நல்லூர். இவருக்கும் இவரது கணவர் கோபாலகிருஷ்ணனுக்கும் இருதரப்பு பெற்றோர்கள், உற்றார் உறவினர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். யுவராணி தன் குழந்தையுடன் திருவெண்ணைநல்லூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று வருவாதாக கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த யுவராணி கைக் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

 

இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து யுவராணியின் கணவர் கோபாலகிருஷ்ணனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு திருமணம் நடந்து ஒன்றரை வருடம் மட்டுமே ஆவதால், திண்டிவனம் கோட்டாட்சியர் விசாரணைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். கோட்டாட்சியர் விசாரணைக்குப் பிறகு தாய் சேய் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா அல்லது வரதட்சணை கொடுமையா என்பது பற்றிய தகவல்கள் வெளிவரும் என்கிறார்கள் போலீஸ் தரப்பில். 6 மாத கைக்குழந்தையுடன் தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆசை ஆசையாய் அம்மாவுக்கு வாங்கிய செல்போன்; காத்திருந்த அதிர்ச்சி

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
soap is offered to a teenager who bought a cell phone online for his mother

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் படிப்பை முடித்துவிட்டு வெளியூரில் வேலை செய்து வருகிறார். தன் தாயாரிடம் பேச முதல் முறையாக தனது சம்பளத்தில் இருந்து அமேசான் ஆன்லைன் வர்த்தக மையத்தில் ரூ. 7100க்கு 'சாம்சங் M04’ ஆர்டர் செய்துள்ளார்.

இந்த ஆர்டரை கர்நாடக மாநிலம் பெங்களூர் மகாவீர் டெலி வோல்டு நிறுவனம் எடுத்துக் கொண்டது. தான் வெளியூரில் இருப்பதால் தனது நண்பர் அருண் நேரு முகவரியையும் கொடுத்து செல்போன் மற்றும் பார்சல் கட்டணம் என முழுத் தொகையும் ஆன்லைனிலேயே செலுத்திவிட்டார். தங்கள் ஆர்டர் பதிவு செய்யப்பட்டது தங்களுக்கான பார்சல் எங்கள் முகவர்கள் தேடி வந்து தருவார்கள் என்று கூறியுள்ளனர்.

ஆர்டர் செய்த 7வது நாள் பார்சல் வந்திருப்பதாக டெலிவரி முகவர் செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்ததால் அருண் நேரு பார்சலை வாங்கி கார்த்திக் அம்மாவுக்காக முதன் முதலில் வாங்கிய செல்போன் என்பதால் அங்கேயே பிரிக்காமல் அம்மாவே பிரித்துப் பார்க்கட்டும் என்று பார்சலை பெற்றுக்கொண்டு கார்த்திக் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். அம்மாவுக்காக மகன் ஆசை ஆசையாய் வாங்கிய செல்போன் பார்சலை அம்மாவிடம் காட்டிவிட்டு வீட்டில் வைத்து பிரித்தபோது உள்ளே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 

கசங்கி இருந்த பார்சலை பிரித்தபோது, கார்த்திக் ஆர்டர் செய்திருந்த செல்போன் பெட்டி இருந்தது. பெட்டியைத் திறந்து பார்த்தால் பெட்டிக்குள் செல்போனுக்கு பதிலாக சலவை சோப், சாம்சங் செல்போன் சார்ஜர், ஆன்லைன் ஆர்டருக்கான பில் ஆகியவை இருந்தது. உடனே சம்பந்தப்பட்ட அமேசான் ஆன்லைன் நிறுவனத்திலும் டெலிவரி செய்த பேராவூரணி நிறுவனத்திலும் கேட்டால் சரியான பதில் இல்லை.

கடந்த 10 வருடங்களாக அமேசானில் பல பொருட்கள் வாங்கி இருக்கிறேன் ஆனால் இந்த முறை என் அம்மாவுக்காக முதல் முறையாக செல்போன் வாங்க அமேசானில் ஆர்டர் பண்ணி நான் வெளியூரில் இருப்பதால் என் நண்பன் முகவரிக்கு பார்சலை அனுப்பச் சொன்னேன். ஆனால் சலவை சோப் அனுப்பி என்னை ஏமாற்றிவிட்டனர். இதனால் பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அமேசானில் புகார் பதிவு செய்தும் எந்த பதிலும் இல்லை. டெலிவரி கொடுத்த பேராவூரணி நிறுவனமும் பதில் தரவில்லை. அதனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். என்னைப் போல இன்னும் எத்தனை பேரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களோ என்கிறார் கார்த்திக்.

Next Story

இரவில் பரவிய வதந்தி ; ராந்தம் சோதனைச்சாவடியில் பரபரப்பு

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
A fight sparked by rumours; There is commotion at Randham check post

தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

அண்மையில் சென்னையில்  ஐடி துறையில் பணியாற்றும் திருநங்கை ஒருவர் இரவில் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வரும் பொழுது அவரின் வினோத தோற்றத்தால் குழந்தை கடத்த வந்த நபர் என பிடித்த சிலர், அவரை அரை நிர்வாணமாக மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய காட்சிகள் வைரலாகி இருந்தது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ராந்தம் சோதனை சாவடி பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் குழந்தையைக் கடத்த முயன்றதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது. இதனையடுத்து அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிக்கிய இளைஞரை தாக்கினர். அதன் பின்னர் அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து கூட்டிச் சென்றனர்.

அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.