Skip to main content

வீடு, வீடாக பணப்பட்டுவாடா - தி.மு.க., அ.தி.மு.க.வினர் கைது!

Published on 03/04/2021 | Edited on 03/04/2021

 

money distribution tn assembly election admk, dmk leaders

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், பணப்பட்டுவாடாவைத் தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்களின் வீடுகளில் தொடர்ச்சியாக வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது அரசியல் கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

'SNJ' மதுபான குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை நந்தனத்தில் உள்ள 'SNJ' மதுபான ஆலை அலுவலகத்திலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இந்த மதுபான ஆலையின் உரிமையாளரான ஜெயமுருகனுக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதி கதை, வசனம் எழுதிய ‘உளியின் ஓசை’, ‘பெண் சிங்கம்’ ஆகிய திரைப்படங்களை தயாரித்தவர் ஜெயமுருகன் என்பது நினைவுக்கூறத்தக்கது. 

 

சேலம் மாவட்டம் ஓமலூரில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், ரூபாய் 17 லட்சம் மதிப்பிலான வேஷ்டிகள், சேலைகள், கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பணப்பட்டுவாடா செய்த புகாரில் அதிமுகவினர் இருவரை தேர்தல் பறக்கும் படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரொக்கம் கைப்பற்றப்பட்டது. 

 

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகம் அருகில் உள்ள, மாவட்ட ஜெ.பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வி.கோட்டையூரில் திமுக ஊராட்சி மன்றத் தலைவர் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 

 

சென்னை ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், வாக்காளர் பட்டியலுடன் வீடு வீடாகச் சென்று பணம் கொடுத்த அதிமுகவைச் சேர்ந்த சரஸ்வதி, அம்சவேணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே குள்ளம்பட்டியில் வீடு வீடாக பணம் கொடுத்த திமுகவினர் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

 

புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த அதிமுகவைச் சேர்ந்த பழனி, சதாசிவம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பெண் நிர்வாகி வீட்டில் தொடரும் ரெய்டு; வருமான வரித்துறை உதவி ஆணையர் வருகையால் பரபரப்பு

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

Raid continues for fifth day; Assistant Commissioner of Income Tax visited DMK woman executive's home

 

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுக்குச் சொந்தமான இடங்களில் நான்கு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், ஐந்தாவது நாளாக இன்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் துணையுடன் சோதனையானது தொடர்ந்து வருகிறது. அதேபோல் திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் வீட்டிலும் சோதனை நடைபெற்ற நிலையில் அங்கும் சோதனையானது ஐந்தாவது நாளாகத் தொடர்ந்து வருகிறது.

 

கோவை ராமநாதபுரத்தில் உள்ள திமுகவின் கலை இலக்கியப் பகுத்தறிவு நிர்வாகி மீனா ஜெயக்குமார் வீட்டிலும், சவுரிபாளையம் பகுதியில் உள்ள காசா கிராண்டா அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஐந்தாவது நாளாக திமுக பெண் நிர்வாகி மீனா ஜெயக்குமார் வீட்டில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், கோவை வருமான வரித்துறை உதவி ஆணையர் கார்த்திகேயன் நேரடியாக அவரது வீட்டுக்கே சென்று ஆய்வு மேற்கொண்டார். சுமார் ஒரு மணி நேரமாக ஆய்வில் இருந்த உதவி ஆணையர் கார்த்திகேயன் பின்னர் அங்கிருந்து சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

Next Story

திமுக நிர்வாகி மீனா ஜெயக்குமார் வீட்டில் ஐ.டி சோதனை

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

IT search at DMK executive Meena Jayakumar's house

 

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்ற நிலையில், திமுக நிர்வாகி மீனா ஜெயக்குமார் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

 

திருவண்ணாமலையில் உள்ள அமைச்சர் எ.வ. வேலுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடுகளிலும் வருமான வரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. காலை முதலே நடந்துவரும் இந்தச் சோதனையானது, ஏற்கனவே அமைச்சர் எ.வ.வேலு மீது இருக்கும் சொத்துக்குவிப்பு வழக்கின் காரணமாக நடத்தப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்நிலையில் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பார்சன் குடியிருப்பு வளாகத்தில் உள்ள திமுகவின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை நிர்வாகி மீனா ஜெயக்குமாரின் வீட்டில் வருமான வரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது. அதேபோல் அவருடைய சகோதரர் ஒருவர் வீட்டிலும் சோதனையானது நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.