Skip to main content

மோடி அரசின் பிராண்டு ஜியோ முதலாளி - சீதாராம் யெச்சூரி

Published on 24/01/2019 | Edited on 24/01/2019

 

ss

 

தேசம் காப்போம் என்கிற தலைப்பில் திருச்சி பொன்மலை ஜி கார்னர் இராணுவ மைதானத்தில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழகத்தின் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தேசியச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசும் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மோடி அரசைத் தூக்கி எறிய முன்னணியில் நிற்கும், பாஜகவை தோற்கடிக்கும், மதச்சார்பற்ற சக்திகளை அதிகளவில் பாரளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் . 2004 ல் வாஜ்பாயி தோற்கடிக்கப் பட்டார். வாஜ்பாயிக்கு மாற்று யார் எனக் கேட்ட போது இது நடந்தது. அது போல மோடிக்கு மாற்று நிச்சயம் உருவாவார்கள்.

 

மதச்சார்பற்ற அரசு அமைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாடுபடும் . மிகப் பெரிய பாரதப் போர் போராட்டம் நடைபெறுகிறது. தங்களை கௌரவர்கள் என பாஜக கூறுகிறது. பாஜகவில் மோடி, அமித்ஷா தவிர யார் இருக்கிறார்கள். சனாதன ஆட்சி வீழ்த்தப் படும். சனாதன அவதாரம் அகண்ட பாரதம், அபினவ் பாரத் , பஜ்ரங் தள் என பட்டியல் நீள்கிறது. ஒரு மனிதனுக்கு ஒரு ஓட்டு என அரசியல் சட்டம் வரையறுத்திருக்கிறது. 

 

சனாதன தர்மா அதை சமத்துவத்தை மறுக்கிறது. 2200 கோடி என ஒவ்வொரு நாளும் இந்திய பணக்கார மனிதர்களின் மதிப்பு தினமும் உயருகிறது. விவசாயிகள் மோசமான நிலையை சந்திக்கிறார்கள். மோடி அரசின் பிராண்டு ஜியோ முதலாளி, இந்திய மக்கள் தொகையின் ஐம்பது சதவிகிதத்தை  ஆக்கிரமித்திருக்கிறது இது தான் சமத்துவமான பொருளாதாரமா.

 

இந்தியாவை காக்க மோடி அரசை வீழ்த்துவோம். இந்தியா தலைவர்களை மட்டும் கேட்கவில்லை. தொழிலாளி வர்க்கத்துக்கான ஆதரவான நிலைப்பாட்டையும் கேட்கிறது. தமிழ்நாடு விவசாயிகள் நிர்வாணமாக டெல்லியில் வந்தார்கள். அந்த அளவுக்கு நிலைமை இருக்கிறது. மக்களின் காசை கொள்ளையடித்த மோடி இன்று வாக்குறுதிகளை கொடுக்க காத்திருப்பதாகவும் அவர் பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சனாதன எதிர்ப்பு மாநாடு அரசியலுக்காக மட்டுமல்ல, அடுத்த தலைமுறையை மாற்றும் போர் பட்டாளம் - கி.வீரமணி

Published on 24/01/2019 | Edited on 24/01/2019

 

 

v


தேசம் காப்போம் என்கிற தலைப்பில் திருச்சி பொன்மலை ஜி கார்னர் இராணுவ மைதானத்தில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழகத்தின் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசுகையில், 2014-ல் மோடி எந்த இடத்தில் பிரச்சாரத்தை துவக்கினாரோ அதே இடத்தில் மக்கள் அலையோடு திருமாவளவன் இந்த மாநாட்டை நடத்துவதாக குறிப்பிட்ட அவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு துணையாக திமுக தலைவர் ஸ்டாலின் இருப்பார். அதுவே திராவிடத்தின் அடிப்படை எனவும் கூறினார். 

 


ஜோதிபா பூலே, அம்பெத்கர், பெரியார் வழிகாட்டலில் இந்த மாநாடு தலைப்பு உள்ளது. அரசியல் போராட்டம் வெளியில் சனாதனம் vs ஜனநாயகம் போராட்டம் இது தான் தலைப்பு. ஆர்.எஸ்.எஸ் Vs தி.க, தி.மு.க வா என்பதை தலைப்பாக்கி இருக்கிறார்கள். சனாதன எதிர்ப்பு மாநாடு அரசியலுக்காக மட்டுமல்ல. அடுத்த தலைமுறையை மாற்றும் போர் பட்டாளம். சுத்தியலை எடுத்து பாசிச ஆட்சியை அடித்து நொறுக்குகிற சவப்பெட்டியின் மீது அடிக்கிற ஆணியை அறைகிற மாநாடு. சனாதானத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிக்கத் தான் இந்த மாநாடு. காலம் காலமான குலத் தொழிலை பின்பற்றுவது தான் சனாதனம். மீறினால் தண்டிப்பது அதன் நோக்கம். அதனை எதிர்ப்பது இந்த மாநாடு. சனாதன சிந்தனை கரு அழிக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்து நாடாக்க விரும்புவதை முறியடிக்க இந்த மாநாடு விரும்புவதாகத் தெரிவித்தார். சப்கா சாத் சப்கா விகாஸ் என ஏமாற்றினார் மோடி எனவும், இட ஒதுக்கீட்டை எதிர்த்து அனைத்து தரப்பினரும் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். போர் முழக்கம் தொடங்கி விட்டது, நீதிமன்றத்திலும் பார்போம், தேர்தல் மன்றத்திலும் பார்போம் என்று தனது உரையை முடித்தார்.

 

 

 

Next Story

ஓட்டு வங்கிக்காக கொண்டுவந்ததே 10% இடஒதுக்கீடு - சுதாகர்ரெட்டி

Published on 24/01/2019 | Edited on 24/01/2019

 

 

suthakar

 

தேசம் காப்போம் என்கிற தலைப்பில் திருச்சி பொன்மலை ஜி கார்னர் இராணுவ மைதானத்தில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழகத்தின் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தேசிய தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர்ரெட்டி, i support the resolutions adopted by the thirumavalavan என்று உரக்க பேசினார். சனாதன சன்ஸ்தா அமைப்பை தடை செய்யும் தீர்மானத்தை வரவேற்கிறோம். . அந்த அமைப்பு முற்போக்குவாதிகளான தபோல்கர், கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்றோரை கொலை செய்தது. 

 


இந்த அரசு திட்டமிட்டு மத்திய நிறுவனங்களை அழிக்கிறது.  MCI, Income tax போன்ற நிறுவனங்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டிருக்கிறது. . Islamic ideologies, dalits were attacked. No security for minorities, communists are ready to fight with secularist forces of the country. He termed modi as communal government. பொருளாதார அடிப்படையிலான உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு சட்ட விரோதமாக ஓட்டு வங்கிக்காக இரு நாளில் விவாதம் நடத்தாமல் நிறைவேற்றிவிட்டார்கள். . மோடி அரசின் தேர்தல் நேர வாக்குறுதிகளான கருப்பு பண மீட்பில் மோடி அரசு தோல்வி அடைந்தது என்று பேசினார்.