Skip to main content

மதுரை ராசி ஸ்டுடியோவும், விஜயகாந்த்தும்...; வெளிவராத கதைகள்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Memories of Madurai Rasi Studio and Vijayakanth

1979 மார்ச் 16-ஆம் தேதி,  விஜயகாந்த் நடித்து முதலில் வெளிவந்த  திரைப்படம் இனிக்கும் இளமை. சுதாகர் கதாநாயகனாக நடித்த இத்திரைப்படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வந்துபோவார் விஜயகாந்த். இதே ஆண்டில் விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த அகல் விளக்கு டிசம்பர் 7-ஆம் தேதி ரிலீஸானது. 1980-ல் நீரோட்டம், சாமந்திப்பூ, தூரத்து இடிமுழக்கம் என வரிசையாக அவர் நடித்த படங்கள் வெளிவந்தன. ஆனாலும், 1981-ல் வெளிவந்த சட்டம் ஒரு இருட்டறை திரைப்படத்தின் வெற்றிதான், கதாநாயகனாக அவரை கவனிக்கவைத்தது.

Memories of Madurai Rasi Studio and Vijayakanth

1978-ல் விஜயராஜாக இருந்த விஜயகாந்தை பல்வேறு கோணங்களில்  ஸ்டில் எடுத்தவர், மதுரையில் ராசி ஸ்டுடியோ நடத்திவரும் ஆசைத்தம்பி. அவர்  எடுத்த போட்டோ ஒன்று அன்றைய பிரபல பருவ இதழில் வெளியாகி, சினிமாவில் விஜயராஜ் நடிப்பதற்கு வாய்ப்பினைப் பெற்றுத் தந்தது.

Memories of Madurai Rasi Studio and Vijayakanth

‘தூரத்து இடிமுழக்கம்’ வெளிவந்தபோது  ‘நம்ம மதுரைக்காரன் ஒருத்தன்  சினிமாவுல ஹீரோவா நடிக்கிறான்’ என்று பேசப்பட்ட நிலையில், விஜயகாந்துடன் போட்டோ எடுத்துக்கொள்வதற்கு சிறுவர்களில் இருந்து இளைஞர்கள் வரை ஆர்வம் காட்டியிருக்கின்றனர்.

Memories of Madurai Rasi Studio and Vijayakanth
ஆசைத்தம்பி

அந்த நாட்களை  நம்மிடம் நினைவுகூர்ந்தார் ஆசைத்தம்பி, “அப்பல்லாம் சைக்கிள் ரிக்‌ஷாவுலதான் எங்க ஸ்டூடியோவுக்கு வருவார் விஜயகாந்த். சொந்தமாக மோட்டார் பைக் எதுவும் அவர்கிட்ட இல்ல. ஸ்கூல் பசங்கள்ல இருந்து இளவட்டங்கள் வரைக்கும் அவருகூட குரூப் போட்டோ எடுத்துக்கணும்னு எங்க ஸ்டூடியோவுக்கு விஜயகாந்த் பின்னாலயே வருவாங்க. நானும் அவர வச்சு குரூப் போட்டோக்கள் எடுத்தேன். அப்பல்லாம் விஜயகாந்த் வீட்ல அவங்க அப்பா ரொம்ப கெடுபிடியா இருந்தாரு. அதனால, நான் எடுத்த போட்டோவுக்கு விஜயகாந்தால பணம் கொடுக்க முடியல. நானும் சரின்னு விட்டுட்டேன்.

Memories of Madurai Rasi Studio and Vijayakanth

விஜயராஜ் போட்டோ எடுத்த பாக்கியே ரூபாய் எட்டாயிரத்துக்கும் மேல ஆயிருச்சு. விஜயராஜ் பெரிய நடிகரானதும் அவரை முதன்முதல்ல போட்டோ பிடிச்சது ராசி ஸ்டூடியோ ஆசைத்தம்பின்னு பேராயிருச்சு. இந்தப் பேரை வச்சே, சினிமாவுல நடிக்கணும்னு ஆசைப்படறவங்க எங்க ஸ்டூடியோவுக்கு படையெடுத்தாங்க. அந்தவகையில, அப்பவே ஐம்பதாயிரம் ரூபாய் வரை நான் சம்பாதிச்சிருக்கேன். எட்டாயிரம் போனாலும், ஐம்பதாயிரம் வந்ததுல, விஜயகாந்தை வச்சு ஸ்டில் எடுத்ததுல, கூட்டி  கழிச்சு பார்த்தா எனக்கு நல்ல லாபம்தான். விஜயகாந்த் கூட நின்னு குரூப் போட்டோ எடுத்த ரொம்பப் பேரு, அப்ப கையில பணம் இல்லாம, போட்டோ வாங்க வரல. அந்த போட்டோக்கள் நாலஞ்சு இப்பவும் என்கிட்ட இருக்கு” என்று காண்பித்தார், ஸ்டில்ஸ் எடுப்பதற்காக, முதன் முதலில் விஜயகாந்தை  ‘டைரக்ட்’ பண்ணிய ஆசைத்தம்பி. 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

மதுரையில் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ கொண்டாட்டம் - தமிழக அரசு தகவல்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Tamil Poet's Day' Celebration in Madurai - Tamil Nadu Government Information!

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக நாளை (29.04.2024) காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் 'பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே! சமுதாய உயர்வே' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் 'பாவேந்தர் கண்ட படைப்புக்களங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் முனைவர் சந்திர புஸ்பம் இசையரங்கமும் கவிஞர் நெல்லை ஜெயந்தா  தலைமையில் 'பாவேந்தரின் பார்வைகள்' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறவுள்ளது. மதுரை குரு மருத்துவமனையின் மருத்துவர் ச.கு.பாலமுருகன் நிறைவுரை வழங்கவுள்ளார். இந்நிகழ்வில் தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் அரசுப்பணியாளர்களும் தமிழார்வலர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாரதிதாசன். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் புரட்சிக்கவி என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் ஆவார். தமிழாசிரியர், கவிஞர், திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் ஆவார்.