Skip to main content

பொதுவுடைமைவாதி ஜீவானந்தத்தின் நினைவு நாள்... அரசு சாா்பில் மாியாதை 

Published on 18/01/2020 | Edited on 18/01/2020

குமாி மாவட்டம் பூதப்பாண்டி கிராமத்தில் 1907-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ல் பிறந்த தோழா் ப.ஜீவானந்தம் மகாத்மாகாந்தியின் கொள்கையால் ஈா்க்கப்பட்ட அவா் தான் 9 ஆம் வகுப்பு படிக்கும் போது காந்தியையும், கதரையும் பற்றி முதல் கவிதை எழுதினாா். தொடா்ந்து நாடக நடிகராகவும், சுதந்திர போராட்ட வீரராகவும், பொதுவுடைமை வாதியாகவும் 40 ஆண்டுகள் பொதுவாழ்வில் ஈடுபட்டு அதில் பல ஆண்டுகள் சிறையில் கழித்தாா்.

 

jeeva


மேலும் பத்திாிகையாளராகவும், பேச்சாளராகவும் திகழ்ந்த தோழா் ஜீவானந்தம் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவராகவும் திகழ்ந்தாா். அரசியலில் எதிரணியாக இருந்தாலும் காமராஜரால் பொிதும் மதிக்கப்பட்டவா். பொியாருடன் சோ்ந்து தீண்டாமைக்கு எதிராக போராடியவா். அவருடைய வாழ்வின் இறுதிநாளில் உடுக்க மாற்று உடை இல்லாமல் வறுமை நிலையில் வாழ்ந்த தோழா் ஜீவானந்தம் 1963-ல் ஜனவாி 18-ம் தேதி மறைந்தாா்.

ஜீவானந்தத்தின் 57-ஆவது  நினைவு நாளையொட்டி இன்று நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள ஜீவானந்தம் மணிமண்டபத்தில் இருக்கும் திருவுருவ சிலைக்கு அரசு சாா்பில் மாவட்ட ஆட்சியா் பிரசாந் வடநேரா மாலை அணிவித்து மாியாதை செலுத்தினாா். இதில் எம்.பி வசந்தகுமாா், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாஜி கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. ராஜசேகரன் மறைவு! 

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Former communist MLA S. Rajasekaran passed away

கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜசேகரன் மறைந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் நிறைந்திருந்த குளமங்கலம் வடக்கு கிராமத்தில் ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ராஜசேகரன். கீரமங்கலத்தில் பள்ளியில் படிக்கும் போது கிராமங்கள் தோறும் நடக்கும் கம்யூனிஸ்ட் மக்கள் நலப் போராட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்களைப் பார்த்து இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு ஜமீன் ஒழிப்பு போராட்டம், தொழிலாளர் நலப் போராட்டங்களில் பங்கேற்றவர். பல போராட்டங்களை முன்னெடுத்து வெற்றியும் கண்டார். அதேபோல படிப்படியாக கட்சிப் பதவிகளிலும் முன்னேறினார்.

2001ம் ஆண்டு ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டாலும் அடுத்து 2006ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். கட்சியின் மாவட்டச் செயலாளராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

2011ல் சட்டமன்ற உறுப்பினர் காலம் முடிந்த பிறகு கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அதன் பிறகும் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வீட்டிலேயே இருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென மீண்டும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு புதுக்கோட்டையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் இன்று புதன் கிழமை உயிரிழந்தார்.

Next Story

ஆளுநர் தேநீர் விருந்து; காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பு!

Published on 24/01/2024 | Edited on 24/01/2024
Governor's Tea Party; Congress, Communist parties boycott

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

குடியரசு தினத்தையொட்டி ஒவ்வொரு ஆண்டும் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இதில் தமிழக முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் எனப் பலரும் பங்கேற்பர்.

அந்த வகையில் குடியரசு தினத்தையொட்டி இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி  மாலை ஆளுநர் ஆர்.என். ரவி தேநீர் விருந்து அளிப்பது குறித்து அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன.