கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் தாக்குதலால் பலர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுவரும் சூழலில், தமிழக கேரள எல்லையில் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிபா வைரஸ் கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அந்த வகையில் தேனி மாவட்டத்தில் கம்பம் மெட்டு, போடி மெட்டுப் பகுதிகளில் மருத்துவக்குழு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தொடர் வாந்தி, மயக்க நிலை, கடும் தலைவலி, காய்ச்சல், உடல் சோர்வு போன்ற அறிகுறிகளுடன் கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள் வருபவர்களை கண்காணித்து அவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்வதே இந்த மருத்துவக் குழுவின் நோக்கம்.
’’கேரள மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படும் பட்சத்தில் எல்லையில் இருக்கும் மருத்துவ கண்காணிப்புக் குழுவின் உதவியை நாடலாம். அவர்கள் 24மணி நேர கண்காணிப்பில் இருப்பார்கள். தேவையான மருத்துவ உதவிகளை செய்து கொடுப்பார்கள்.’’ என மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நிபா வைரஸ் தாக்குதல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை சம்மந்தமாக சுகாதாரத்துறை செயலர் தலைமையில், தமிழக கேரள எல்லையோர மாவட்ட கலெக்டர்கள் கலந்துகொள்ளும் வீடியோ கண்ப்ரன்ஸிங் கூட்டத்திற்கு நேற்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வெடித்த எழுச்சி காரணமாக இந்த வீடியோ கண்ப்ரன்ஸிங் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வைரஸ் தாக்குதலில் கேரளாவில் பலர் பலி! தமிழக எல்லையில் மருத்துவ குழு!!
சார்ந்த செய்திகள்
Next Story
நிஃபா வைரஸ் எதிரொலி; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கேரளாவில் இருவருக்கு உறுதி செய்யப்படாத வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து இறந்தவர்களின் மாதிரிகள் புனேவில் உள்ள வைரஸ் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் உயிரிழந்த இருவருக்கும் நிஃபா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இரண்டு பேர் நிஃபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருந்தார்.
நிஃபா வைரஸ் பரவல் காரணங்களால் கேரளாவில் பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் எனக் கேரள மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கேரளாவில் குறிப்பாக கோழிக்கோடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த கேரள சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் மாநில எல்லைகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிஃபா வைரஸ் தொற்றைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஐ.சி.எம்.ஆர் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. கரோனா பரவலைத் தடுப்பதற்கான வழிகாட்டுதலை போலவே கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் எனவும், முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிஃபா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குத் தொற்றுவதால் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானது என ஐ.சி.எம்.ஆர் தலைவர் ராஜீவ் தெரிவித்துள்ளளார்.
தற்போது, உறுதிசெய்யப்பட்ட நிஃபா நோயாளிகளின் தொடர்பு பட்டியலில் 1080 பேர் உள்ளனர். மேலும், இன்று 130 பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், கோழிக்கோடு மாவட்டத்தைத் தவிர தொடர்பு பட்டியலில் 29 பேர் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து தொடர்பு பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். நிஃபா வைரஸ் காய்ச்சலின் பரவல் அதிகமாக இருப்பதால் கேரள மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் மத்திய குழு அம்மாவட்டத்திற்கு சென்று ஆய்வு நடத்தி வருகிறது.
இந்த நிலையில், நிஃபா வைரஸ் காரணமாக கேரள மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் வருகிற செப்டம்பர் 24 ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், படிப்பு சார்ந்த நிறுவனங்கள், டியூசன் மையங்கள் ஆகிய அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகுப்புகளுக்கு தடையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
நிஃபா வைரஸ் எதிரொலி; 'வவ்வாலுக்குத் தொல்லை தந்து பறக்க வைக்க வேண்டாம்' - அமைச்சர் அறிவுரை
கேரளாவில் இருவருக்கு உறுதி செய்யப்படாத வைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்த இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து இறந்தவர்களின் மாதிரிகள் புனேவில் உள்ள வைரஸ் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் உயிரிழந்த இருவருக்கும் நிஃபா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இரண்டு பேர் நிஃபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருந்தார்.
நிஃபா வைரஸ் பரவல் காரணங்களால் கேரளாவில் பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும் எனக் கேரள மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கேரளாவில் குறிப்பாக கோழிக்கோடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த கேரளா சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் மாநில எல்லைகளிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிஃபா வைரஸ் தொற்றைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் குறித்து ஐ.சி.எம்.ஆர் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. கரோனா பரவலைத் தடுப்பதற்கான வழிகாட்டுதலை போலவே கைகளை நன்றாகக் கழுவ வேண்டும் எனவும் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிஃபா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குத் தொற்றுவதால் தடுப்பு நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானது என ஐ.சி.எம்.ஆர் தலைவர் ராஜீவ் தெரிவித்துள்ளார். நிஃபா வைரஸால் பாதிக்கப்படுபவரின் வியர்வை, உமிழ்நீர், ரத்தம் போன்றவற்றை தொடக்கூடாது. நிஃபா வைரசால் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்தி சிகிச்சை தர வேண்டும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஐ.சி.எம்.ஆர் வழங்கியுள்ளது. அதே நேரம் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், 'வவ்வாலில் இருந்து தான் நிஃபா வைரஸ் பரவுகிறது. எனவே அவற்றுக்குத் தொல்லை தந்து பறக்க வைக்க வேண்டாம்' எனத் தெரிவித்துள்ளார்.