Skip to main content

ஏழு பேரை பலி வாங்கிய மக்னா யானையை பிடிக்க வந்தது கும்கி யானை!

Published on 31/07/2018 | Edited on 31/07/2018
elephant


தேனி மாவட்டத்தில் உள்ள போடி, தேவாரம், கோம்பை, பண்ணப்புரம், பாளையம் உள்பட சில பகுதிகளில் கடந்த ஏழு ஆண்டுகளாகவே அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து இறங்கி வந்த மக்னா யானை அப்பகுதிகளில் இருக்க கூடிய விவசாய நிலங்களுக்குள் புகுந்து வாழை, கரும்பு உள்பட விவசாய பொருட்களை அழித்து சேதப்படுத்தி வருகிறது.

இதனால் மனம் நொந்து போன விவசாயிகள் அந்த மக்னா யானையை பல முறை விரட்டி அடித்தும் வந்தனர். அப்படி இருந்தும் தனியாக தோட்டம், காடுகளுக்கு போன விவசாயிகள் ஏழு பேரை இந்த மக்னா யானை விரட்டி விரட்டி கொன்னு இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வனத்துறையிடமும் புகார் கொடுத்ததின் பேரில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்களும் இணைந்து அந்த மக்னா யானையை பல முறை விரட்டியும் கூட மீண்டும் விலை நிலங்களுக்குள் புகுந்து விவசாயத்தை அழித்து வந்தது.
 

elephant


இதனால் மனம் நொந்து போன விவசாயிகள் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் புகார் மனு கொடுத்து அந்த மக்னா யானையை பிடிக்க வலியுறுத்தினார்கள். அதன் அடிப்படையில் தான் வனச்சரகர் நவீனும் கோழிக்க முத்தி யானைகள் முகாமில் இருந்து கலீம் என்ற கும்கி யானையை லாரியில் ஏற்றி தேவாரத்திற்கு கொண்டு வந்து இருக்கிறார்கள் அதோடு பத்து யானை பாகன்களும் வந்து இருக்கிறார்கள்.

இப்படி மக்னா யானையை பிடிக்க இன்று முதல் இந்த கும்கி யானையை தோட்டம் காட்டுக்குள் அனுப்பி வைக்க இருக்கிறார்கள் அதனால் இன்னும் சில நாட்களில் இந்த கும்கி யானை மூலம் அந்த மக்னா யானையை பிடிக்க இருக்கிறார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தாளவாடியில் புகுந்த கருப்பன் - 2 கும்கி யானைகள் வரவழைப்பு

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

karupan elephant entering Thalawadi

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி, ஜீரகள்ளி, ஆசனூர், தலைமலை உள்ளிட்ட வனச்சரகங்களில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவ்வப்போது யானைகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் நுழைவதும், பயிர்களை சேதம் செய்து வருவதும் தொடர்கதையாக உள்ளது.

 

குறிப்பாக ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட திகினாரை, கரளவாடி, அக்கூர் ஜோரை, ஜோரா ஓசூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளுக்குள் வனப்பகுதியில் சுற்றித் திரியும் கருப்பன் என்ற ஒற்றை யானை கடந்த 6 மாதங்களுக்கு மேலாக விவசாய விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதம் செய்து வருகிறது. மேலும் வனத்துறையினரையும், விவசாயிகளையும் துரத்தி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து விளை நிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்தி வரும் கருப்பன் யானையைப் பிடிக்க வனத்துறையினர் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் கருப்பன் யானை வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது. கடந்த ஜனவரி மாதம் பொள்ளாச்சி ஆனைமலையிலிருந்து முத்து, கபில்தேவ் என இரண்டு கும்கி யானைகள் கருப்பனை பிடிக்க அழைத்து வரப்பட்டன. ஆனால் கருப்பன் யானையைப் பிடிக்க முடியாததால் மீண்டும் பொள்ளாச்சி ஆனைமலையில் இருந்து சலீம் என்ற கும்கி யானை வந்தது.

 

இவ்வளவு முயற்சி செய்தும் கருப்பன் யானையைப் பிடிக்க முடியவில்லை. அடர்ந்த வனப்பகுதிக்குள் கருப்பன் யானை சென்று மறைந்து விட்டது. இதனையடுத்து வனத்துறையினர் ட்ரோன் மூலம் கருப்பன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். அதன் பின்னர் வனத்துறையினர் கருப்பன் யானையைப் பிடிக்கும் வகையில் அதற்கு மயக்க ஊசி செலுத்தினர். இருந்தும் கருப்பன் யானை அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்று மீண்டும் மறைந்து விட்டது. இதனைத் தொடர்ந்து கருப்பன் யானையைப் பிடிக்கும் முயற்சி கைவிடப்பட்டது. சில நாட்களாக கருப்பன் யானை தொந்தரவு இல்லாமல் விவசாயிகள் நிம்மதியாக இருந்தனர். இந்நிலையில் மீண்டும் கருப்பன் யானை தாளவாடி வனப் பகுதியில் உள்ள ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருகின்றது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மீண்டும் அச்சம் அடைந்துள்ளனர்.

 

தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் கருப்பனை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து கருப்பன் யானையைப் பிடிக்க முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து பொம்மன், சுஜய் ஆகிய 2 கும்கி யானைகளை வரவழைக்க தாளவாடி வனத்துறையினர் ஏற்பாடு செய்தனர். அதன்படி இன்று பொம்மன், சுஜய் இரண்டு கும்கி யானைகளும் தாளவாடி மலைப் பகுதிக்கு வந்தன.

 

 

Next Story

எல்லையில் நின்ற யானை எங்கே?- கண்டுபிடிக்க கும்கி வரவழைப்பு!

Published on 17/08/2022 | Edited on 17/08/2022

 

Where is the elephant standing on the border?-Kumki invites to find!

 

கோவை அருகே தமிழக-கேரள எல்லையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானையை தேடும் பணி இரண்டாவது நாளாக தொடர்கிறது.

 

கோவையின் ஆனைக்கட்டி பகுதி தமிழக - கேரள எல்லைக்கு இடைப்பட்ட பகுதியாக இருக்கிறது. இந்த பகுதியில் சில மலை கிராமங்களும் உள்ள நிலையில் கோவை ஆனைக்கட்டி பட்டிச்சாலை பகுதியில் காட்டு யானை ஒன்று இரண்டு நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு நேற்று காணப்பட்டது. இதனால் யானைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால்  தமிழக எல்லையில் இருக்கும் அந்த யானைக்கு சிகிச்சை அளிப்பது கேரள வனத்துறையா? தமிழக வனத்துறையா? என்ற குழப்பம் நிலவியது. இது தொடர்பாக தமிழக வனத்துறை கேரள வனத்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில் அந்த யானை மாயமானது.

 

8 வயது கொண்ட அந்த ஆண் யானையைத் தேடும் பணிக்காக கோவை டாப்சிலிப் பகுதியில் இருந்து கலீம் என்ற கும்கி யானை கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் ட்ரோன் கேமரா மூலம் யானையை தேடும் பணியும் மறுபுறம் நடந்து வருகிறது. யானையை கண்டுபிடிக்கும் பணிக்காக மேலும் ஒரு கும்கி யானையை கொண்டுவர வனத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.