Skip to main content

திண்டுக்கல்லில் அங்குவிலாஸ் மண்டகப்படி! மின்அலங்கார ரதத்தில் கோட்டை மாரியம்மன்!!

Published on 15/02/2019 | Edited on 15/02/2019

 

k


திண்டுக்கல் மாநகரில் உள்ள கோட்டை மாரியம்மன் மாசித் திருவிழா நடந்து வருகிறது.  
இந்த கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதியில் இருந்தும் தினசரி நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு வந்து தீச்சட்டி,  பால்குடம் எடுப்பதும்,  முளைப்பாரி கொண்டு வருவதும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.  இந்த நிலையில்தான் கோட்டை மாரியின் பத்தாம் திருவிழா நாளில் திண்டுக்கல் பொடிகார வெளாளர் அறக்கட்டளை ( அங்கு விலாஸ்  ) சார்பில் கோட்டை மாரியம்மன் மின் அலங்கார ரதத்தில் முக்கிய ரத வீதிகளில் பவனி வந்த கோட்டை மாரியம்மனை அங்கங்கே பக்தர்கள் பெரும் திரளாக நின்று கோட்டை மாரியை தரிசித்தனர். 

 

ko


      இப்படி அங்குவிலாஸ் குடும்பத்தினர் சார்பில் வருடந்தோறும் மண்டகபடி நடப்பது வழக்கம்.  இந்த மண்டகப்படியில் மின் அலங்காரம் பல டிசைன்களில்  செய்யப்பட்டு அதில் கோட்டை மாரியம்மன் பவனி வரும் கண் கொள்ளாக் காட்சியை   பார்ப்பதற்காக மாவட்டத்திலுள்ள பட்டி தொட்டிகளில் இருக்கும் மக்கள் பல ஆண்டுகளாக இந்த அங்கு விலாஸ் மண்டகப்படி அன்று வந்து அலங்காரம் காட்சியை பார்த்து ரசித்து விட்டு போவார்கள். அந்த அளவுக்கு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவில் அங்குவிலாஸ் மண்டகப்படி முக்கிய பங்கு வகித்து வருகிறது.

 

k

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிங்கப்பூர் கோயிலில் கைவரிசை; கம்பி என்னும் தமிழக பூசாரி

Published on 31/05/2023 | Edited on 31/05/2023

 

singapore mariamman priest gold jewel issue court judgement came

 

சிங்கப்பூரில் உள்ள சவுத் டவுன் என்ற பகுதியில் மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. 194 ஆண்டுகள் பழமையான இந்தக் கோவிலானது மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலில் தலைமை பூசாரியாகப் பணியாற்றி வந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீ கந்தசாமி சேனாபதி. இவர்  2013 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் இந்த கோவிலில் அர்ச்சகர் பணியை மேற்கொண்டு வந்தார்.

 

இந்நிலையில் கோவில் நிர்வாகம் சார்பிலான நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் இவர் பொறுப்பில் இருந்து வந்துள்ளன. அப்போது அவர் கோவில் நகைகளை அடமானம் வைத்து பணம் பெற்று வந்துள்ளார். மேலும் இது தொடர்பாக பல்வேறு முறைகேடுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கம் போல் கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் நகைகள் தணிக்கை செய்யப்பட்டன. அப்போது நடந்த ஆய்வில் அர்ச்சகர் கந்தசாமி முறைகேடுகளில் ஈடுபட்டது உறுதியானது.

 

இதனைத் தொடர்ந்து பூசாரி கந்தசாமியின் பதவி பறிக்கப்பட்டது. மேலும் இது குறித்து காவல்துறையில் இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கந்தசாமி கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது பூசாரி முறைகேட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். சமீபத்தில் இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் கந்தசாமிக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

 

Next Story

சமயபுரம் மாரியம்மன் கோவில் காணிக்கை எண்ணும் பணி; உண்டியலில் குவிந்த தங்கம்

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

trichy samayapuram mariamman temple donation counting 

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது.

 

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில், தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இந்த தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். இவ்வாறு பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினர்.

 

அப்போது கோயில் உண்டியலில் கடந்த 13 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் ரூ.1 கோடியே 4 லட்சத்து 24 ஆயிரத்து 485 ரொக்கமும் 2 கிலோ 759 கிராம் தங்கமும் 5 கிலோ 117 கிராம் வெள்ளியும் 113 அயல்நாட்டு நோட்டுகளும் 264 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றன எனக் கோயிலின் இணை ஆணையர் கல்யாணி தகவல் தெரிவித்தார்.