Skip to main content

மாமூல் பண்ணும் வேலை! கமிஷனர் வீட்டு ஏரியாவில் கனஜோராக லாட்டரி விற்பனை!

Published on 08/04/2018 | Edited on 08/04/2018

ஏழை எளிய மக்களின் வருமானத்தைச் சுரண்டி, வாழ்வைச் சீரழிக்கும் லாட்டரி கலாச்சாரத்தை ஒழிக்கும் விதமாக, அதனை முற்றிலும் தடை செய்தார் ஜெயலலிதா என, இன்றும் புகழ்பாடி வருகிறது, எடப்பாடியின் அதிமுக அரசு. 

 

இனிப்பு என்று வெள்ளைத்தாளில் எழுதி, நாக்கில் வைத்தால், அது இனித்துவிடுமா? இதுபோன்ற நிலையில்தான், தமிழகத்தில் லாட்டரி தடை உள்ளது. 

 

lottery

 

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தேனாம்பேட்டை ஏரியாவில் லாட்டரி விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. ரூ.50, ரூ.100, ரூ200, ரூ.400, ரூ.500 வரை லாட்டரிச் சீட்டுகள் விற்பனை ஆகின்றன. ஒரு துண்டுச் சீட்டில் லாட்டரி சீட்டின் பெயரையும், நம்பரையும், தேதி போட்டு எழுதிக் கொடுக்கின்றனர். பரிசுத்தொகையோ, ரூ.1 லட்சத்திலிருந்து, ரூ.15 லட்சம் வரை உண்டு. 

 

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டுக்குப் பின்புறம் உள்ள தேனாம்பேட்டை போயஸ் சாலை, ஜெயாம்மாள் சாலை, முருகன் கோவில் சந்து ஆகிய பகுதிகளில்தான் லாட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனை செய்யப்படுகின்றன. 

lottery

 

லாட்டரிக்கு தலைமையகம் கேரளாதான் என்றாலும், அம்மாநில லாட்டரி சீட்டுகள் மட்டுமின்றி, லாட்டரிக்கு பெயர் பெற்ற மாநிலங்களான மணிப்பூர், மிசோராம், அஸ்ஸாம், நாகலாந்து போன்ற மாநில லாட்டரி சீட்டுக்களும் இங்கே கனஜோராக விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, இணையதளம் மூலமாகத்தான் இங்கே இந்த லாட்டரி வியாபாரம் நடக்கிறது. 
தினமும் காலையில் குறிப்பிட்ட இடத்தில் கூடும் லாட்டரி பிரியர்கள், புரோக்கர்களிடம் லாட்டரி சீட்டுகளையும், முந்தைய நாளுக்கான ரிசல்ட் பேப்பர்களையும் வாங்கி, தங்களது நம்பர் இருக்கிறதா என, பரிதவிப்புடன் முடிவுகளைப் பார்த்துவருவது காலக்கொடுமை! 

 

ஆளும் கட்சி பிரமுகரான கலையம்சம் பொருந்தியவர்தான் லாட்டரி தொழிலை நடத்துவதற்கு தொடர்ந்து உதவி வருகிறாராம்.  நாள்தோறும், பல லட்சங்கள் புழங்கும் இந்தத் தொழிலில், எந்தப் பிரச்சனையும் வராமல் இருப்பதற்கு, மாதம்தோறும் பல லட்சங்கள் கை மாறுகிறதாம். 

 

lottery

 

பசி ‘ருசி’ அறியாது என்பது பழமொழி. இந்தப் பழமொழியில் உள்ள பெயரைக் கொண்டிருக்கும் ஓட்டலை நடத்துபவர்தான், தேனாம்பேட்டை ஏரியாவில் லாட்டரி சீட்டு விற்பதற்கான லீசு எடுத்திருக்கிறார். இத்தனைக்கும், இந்த லாட்டரி வியாபாரம், சிட்டி கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனின் வீட்டிலிருந்து சரியாக 500 மீட்டர் இடைவெளியில்தான் நடக்கிறது. இதனை கமிஷனருக்கே தெரியாமல் பார்த்துக்கொள்ளும் லோக்கல் போலீசாரின் சாமர்த்தியத்தை என்னவென்று சொல்வது?

சார்ந்த செய்திகள்

Next Story

கேரளா லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் மீது வழக்குப் பதிவு

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

 A case has been registered against a teenager who was involved in selling Kerala lottery tickets

 

ஈரோடு மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 11 பேர் கொண்ட கும்பல் பிடிபட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கருங்கல்பாளையத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா என்று போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

 

இந்நிலையில் நேற்று ஈரோடு மாணிக்கம் ஹவுசிங் யூனிட் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியபோது சாய்ராம் (35) என்பவர் கேரளா லாட்டரி சீட்டுகளை வெள்ளைத் தாளில் எழுதி பரிசு விழும் என்று ஆசை வார்த்தைக் கூறி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் சாய்ராம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Next Story

லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேர் கைது

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

4 people, including a woman, were arrested for selling lottery tickets

 

ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதைப்போல் கருங்கல்பாளையம் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கருங்கல்பாளையம் கே.எஸ்.நகர் ஸ்ரீ ரங்கபவனம் திருமண மண்டபம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ஒரு கும்பல் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

 

அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி இளங்கோ தெருவை சேர்ந்த ரவி (50), ஈரோடு விநாயகர் கோவில் தெரு மூலப்பாளையம் பகுதி சேர்ந்த ஆனந்த் (50), ஈரோடு மாவட்டம் பவானி கேசரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த நிர்மலா (36), சேலம் மாவட்டம் ஆத்தூர் காந்திநகரைச் சேர்ந்த தரனீஷ் (21) ஆகியோர் எனத் தெரிய வந்தது.

 

இவர்கள் வெளிமாநில லாட்டரி சீட்டு எண்களை வெள்ளை தாளில் எழுதியும் ஆன்லைன் மூலமாக பரிசு விழும் எனக் கூறி பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளனர். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 6 விலை உயர்ந்த செல்போன்கள், 40 கேரளா லாட்டரி சீட்டுகள், ஒரு லேப்டாப், 2 கார்கள் மற்றும் ரூ. 1.30 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.