Skip to main content

’விரைவில் பாடம் புகட்டுவோம்’-கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்

Published on 10/11/2018 | Edited on 10/11/2018
vb

 

திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி சர்கார் படத்திற்கு பேனர்வைத்ததாக விஜய் ரசிகர்கள் 21 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

 

     நடிகர் விஜய் படமான சர்கார் படம் கடந்த தீபாவளி அன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகளும் வசனங்கள் இடம் பெற்றிருப்பதாக  கூறி அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் திரையரங்குகளிலும்,பொது இடங்களிலும் வைக்கப்பட்டிருந்த சர்கார் படப்பேனர்களை கிழித்ததோடு வன்முறையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

அங்கங்கே அதிமுக தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்டு வரும் நிலையில்  காவல்துறையினர் அதனை தடுக்காமல் பாதுகாப்பு அளிப்பதாக பொதுமக்களும் விஜய் ரசிகர்களும் கூறிவருகின்றனர்.

 

  இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனுமதியின்றி சர்கார் படத்திற்கு பேனர் வைத்ததாக விஜய்ரசிகர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துவருகின்றனர்.  அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர்,  திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள  நடிகர் விஜய் ரசிகர்கள் 21 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டு பேனர் கிழித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் விஜய் ரசிகர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

’’ 10 ம்தேதி திருவாரூரில் சர்க்கார் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கு முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர்களை அதிமுக ஒ,செ, நா,செ க்களே முன்னின்று கிழித்ததை பொதுமக்கள் அனைவருமே பார்த்தனர். அதே போல் மன்னார்குடியில் அமைச்சர் காமராஜின் உறவினர்கள் கட்சியின் பொறுப்பாளர்களே நேரடியாக காவலர்களின் பாதுகாப்போடு கிழித்ததை   பொதுமக்கள் பார்த்தனர். இதன் மீது ஏன் நடவடிக்கை இல்லை. எம்,ஜி,ஆர் நூற்றாண்டு விழா என்கிற பெயரில் மலை மலையாக பேனர்கள், வளைவுகளை குவித்திருந்தனரே அதற்கு யாரிடம் அனுமதி வாங்கினார்கள். அதற்கான அதிகாரம் யார் கொடுத்தது, அதிமுகவினர் மட்டும் தான் இந்த நாட்டு பிரஜைகளா, அவர்கள் பேனர்வைக்க அனுமதி வாங்கிய ஆதாரம் காட்டமுடியுமா, இதற்கு விரைவில் பாடம் புகட்டுவோம்,’’ என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பேனரில் அரவிந்த்சாமி; பதறியடித்த நிர்வாகிகள் 

Published on 18/01/2024 | Edited on 18/01/2024
Aravindsamy in AIADMK banner; Panicked executives

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாள் நேற்று அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது. இதில் சில இடங்களில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த ஆதரவாளர்களும், எடப்பாடி அணியை சேர்ந்த ஆதரவாளர்களும் மோதிக்கொள்ளும் நிகழ்வுகளும் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மாதனூர் பகுதியில் எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். எம்.ஜி.ஆர் உடைய உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் சிறிய அளவிலான பந்தல் அமைக்கப்பட்டு அதனை ஒட்டி வரவேற்பு பேனர்களும் வைக்கப்பட்டிருந்தது.

அந்த வரவேற்பு பேனர் ஒன்றில் எம்ஜிஆர் புகைப்படத்திற்குப் பதிலாக 'தலைவி' என்ற படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடித்த புகைப்படம் இடம் பெற்றிருந்தது. இது சமூக வலைதளங்களில் வெளியாகி கிண்டலுக்கு ஆளானது. உடனடியாக பதறியடித்த அந்த பகுதி அதிமுக நிர்வாகிகள் அரவிந்த்சாமி புகைப்படம் இருந்த இடத்தில் எம்ஜிஆரின் மற்றொரு அசல் படத்தை ஒட்டி விட்டு சென்றனர்.

Next Story

பேனர்கள் மாயம்; சாலைமறியலில் ஈடுபட்ட விசிகவினர்

Published on 18/08/2023 | Edited on 18/08/2023

 

Banners are removed; The vck involved in the roadblock

 

புதுக்கோட்டையில் விசிக தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியினர் வைத்த பேனர்கள் காணாமல் போனதாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு பரபரப்பை ஏற்படுத்தியது.

 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த மாட்டாங்கால் பகுதியில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு அக்கட்சியினர் பேனர் வைத்திருந்தனர். இந்நிலையில், திடீரென நேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்கள் காணாமல் போனதாக இருதரப்பு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதனால் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பொழுது ஒவ்வொரு ஆண்டும் இதே போல் ஒரு சமூகத்தினர் பிளக்ஸ் பேனர்களை வைத்தால், மற்றொரு தரப்பினர் அவற்றை அகற்றுவதையே வேலையாக செய்து வருகின்றனர் எனக் குற்றச்சாட்டு தெரிவித்தனர். காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.