Skip to main content

சிறுத்தையின் தொடர் அட்டகாசம்! அலறும் அமைச்சரின் தொகுதி!

Published on 29/12/2018 | Edited on 29/12/2018



 

வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சிக்கனாங்குப்பம் கிராமத்தில் உள்ள காட்டுப்பகுதியில் சிறுத்தை ஒன்று பதுங்கிக்கொண்டு அந்த வழியாக செல்பவர்களை தாக்குகிறது. அப்படி தாக்கியதில் 5 பேர் காயம்பட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

 

இந்நிலையில் டிசம்பர் 27ந் தேதி இரவு கொல்லப்பள்ளி பகுதியில் பட்டியில் இருந்த ஆடுகளை வேட்டையாடியது அந்த சிறுத்தை. இதில் 13 ஆடுகள் பலியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறுத்தை தங்களை தாக்கிவிடும்மோ என பயந்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வரவே வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கின்றனர்.

 

இந்நிலையில் வனத்துறையினர் அப்பகுதியில் கூண்டு வைத்து அதற்குள் ஆடு ஒன்றை கட்டிவைத்து சிறுத்தைக்கு ஆசைக்காட்டி பிடிக்க காத்துள்ளனர். அது இதுவரை சிக்கவில்லை. அதோடு, வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள் மருத்துவக்குழு ஒன்றை அழைத்துள்ளனர் வனத்துறையினர். மருத்துவர்கள் மூலமாக மயக்க ஊசியை துப்பாக்கி மூலமாக சிறுத்தையின் உடலில் பாய்ச்சி பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.

 

தனது தொகுதியில் சிறுத்தையின் அட்டகாசம் அதிகரித்துள்ள தகவல் மற்றும் விலங்குகள், மனிதனை தாக்கியது தொடர்பாக வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏவும், அமைச்சருமான நிலோபர்கபில்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதோடு, சிறுத்தை பதுங்கியுள்ளதாக கூறப்படும் கரும்பு தோட்டத்தை பார்வையிட்டார்.




சார்ந்த செய்திகள்

Next Story

சாலையோரம் நடமாடும் 2 சிறுத்தைகளால் மக்கள் பீதி

Published on 26/01/2024 | Edited on 26/01/2024
People panic because of 2 leopards roaming along the road

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, மான் காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதில் யானை, சிறுத்தை, புலி வனப் பகுதிகளை விட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதும், விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகளை வேட்டையாடி வருவது வாடிக்கையாகி வருகின்றன.

சில சமயம் யானை தாக்குதல்களால் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் சிறுத்தை உலா வருவதைக் கண்ட பொதுமக்கள் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அப்பகுதியில் இருந்த கால் தடயங்களை ஆய்வு செய்து ஊருக்குள் உலா வருவது சிறுத்தையா என கண்காணிக்கும் வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் கிராமம் கக்கரா குட்டையில் இருந்து கேத்தம்பாளையம் செல்லும் வழி சாலையோரம் இரண்டு சிறுத்தைகள் உலா வந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை வரும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனைப் பார்த்து வீதி அடைந்த அக்கிராம மக்கள் ஊருக்குள் உலா வரும் சிறுத்தைகளை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் கிராமம் கக்கரா குட்டையில் இருந்து கேத்தம்பாளையம் செல்லும் வழி சாலையோரம் இரண்டு சிறுத்தைகள் உலா வருவதுபோன்று வீடியோ வெளியாகி உள்ளது. எனவே இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் வாகன ஓட்டிகள் இந்த பகுதியில் செல்லும் போது மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். இந்தப் பகுதிகளில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டால் கூண்டு வைத்துப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

Next Story

பெண் சிறுத்தை பலி! - இரு மாநில வனத்துறையினர் விசாரணை

Published on 16/11/2023 | Edited on 16/11/2023

 

Female leopard victim! Two State Forest Departments are investigating

 

வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டில் இருந்து ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப்பம் செல்லும் சாலையில் உள்ள பத்தலப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினரும் காவல்துறையினரும் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே தமிழக எல்லையை ஒட்டிய ஆந்திர வனப்பகுதியில் சாலையோரம் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தலையில் பலத்த காயத்துடன் பெண் சிறுத்தை ஒன்று உயிரிழந்துள்ளது. 

 

இது குறித்து பேர்ணாம்பட்டு வனத்துறையினருக்கு வாகன ஓட்டிகள் தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த பேர்ணாம்பட்டு வனத்துறையினர் சிறுத்தை உயிரிழந்த பகுதி ஆந்திர வனப்பகுதி என்பதால் இது குறித்து ஆந்திர மாநில வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ஆந்திர மாநில வனத்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக சிறுத்தையைக் கொண்டு சென்றனர். இது குறித்து ஆந்திரா மற்றும் தமிழக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.