Skip to main content

'வைத்தியம் பார்க்க டாக்டர் தேவையில்லை செவிலியரே போதும்' அப்படித்தானே இதுவும்!- நீதிமன்ற புறக்கணிப்பில் வழக்கறிஞர்கள்

Published on 07/02/2020 | Edited on 07/02/2020

குற்றவியல் நடைமுறை சட்ட திருத்த விதி 2019ஐ தமிழகத்தில் சென்ற ஜனவரி முதல் மாநில அரசு அமுலுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த குற்றவியல் நடைமுறை விதிகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகவும் குறிப்பாக ரூல் 27(2)ல் குற்றவாளி ஒருவர் தனது பிரதிநிதியாய் வழக்கறிஞர் அல்லாத ஒருவருக்கு பொது அதிகாரம் கொடுக்கலாம். அப்படி பொதுஅதிகாரம் பெற்றவர் குற்றவாளிக்காக வழக்கை நடத்தலாம். இதற்கு தமிழக வழக்கறிஞர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

 

Lawyers boycotted  court

 



இதுபற்றி மூத்த வழக்கறிஞர்கள் "நோயாளி ஒருவருக்கு வைத்தியம் பார்க்க வேண்டுமென்றால் நோயின் தன்மை அதனால் ஏற்படும் பாதிப்பு அதை கட்டுப்படுத்த அந்த நோயாளியை குணப்படுத்த மருத்தும் படித்த பாக்டரால் தான் முடியும். ஆனால் டாக்டர் தேவையில்லை ஊசி போடத் தெரிந்த செவிலியரே போதும் என்பது போல உள்ளது. மொத்தத்தில் வழக்காடுமன்றத்திற்கு வழக்கறிஞர்கள் தேவையில்லை என்பது தான் அது" என்கிறார்கள். 

புதிய குற்றவியல் நடைமுறை வதிகளை முழுமையாகத் திரும்பப்பெறவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று 07-02-2020 ஒருநாள் கோர்ட் பாய்காட் என்ற புறக்கணிப்பு போராட்டத்தில் தமிழக, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டு நடவடிக்கை குழு (JACC) அமைப்பு இன்று ஈடுபட்டுள்ளது. அதே போல் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 2009ம் ஆண்டு, பிப்ரவரி 19 ம் தேதி வழக்கறிஞர்களை காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதை ஒவ்வொரு வருடமும் அந்நாளை கருப்பு தினமாக அனுசரித்து வருகிறார்கள்.

 



இந்தாண்டும் வருகிற 19ந் தேதியன்றும்  வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளார்கள். வழக்கறிஞர்கள் கோர்ட் பாய்காட் போராட்டத்தால் வழக்கில் சம்பந்தப்பட்டு இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய பொது மக்கள் பலருக்கும் சிரமங்கள் ஏற்பட்டதோடு, வார இறுதி நாளான இன்று ஜாமீனுக்கு வாய்ப்புள்ளவர்கள் அடுத்த வாரம் வரை காத்திருக்க வேண்டியதாயிற்று. 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.