Skip to main content

25 வழக்குகளில் தொடர்புடைய பிரபல கார் திருடன் மீது 'குண்டாஸ்' பாய்ந்தது!

Published on 24/11/2018 | Edited on 24/11/2018

சேலத்தில் பிரபல கார் கொள்ளையனை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


சேலம் அஸ்தம்பட்டி பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாது. இவருடைய மகன் பூபதி என்கிற மைக்கண் பூபதி (32). கடந்த 2017ம் ஆண்டு, கொண்டலாம்பட்டி அருகே ஒரு கார் ஷெட்டில் பணியில் இருந்த இரவுக்காவலரை தாக்கிவிட்டு, அங்கிருந்த ஸ்கார்ப்பியோ, குவாலிஸ் ஆகிய இரண்டு கார்களை கூட்டாளிகளுடன் சேர்ந்து திருடிச் சென்றார்.

 

car theft


இச்சம்பவம் நடந்த சில நாள்களில் அதே பகுதியில் ஒருவரிடம் கத்திமுனையில் 2000 ரூபாய் பறித்தார். இது தொடர்பான வழக்குகளில் பூபதி, கூட்டாளிகள் முகைதீன் அப்துல் காதர், கோபாலகிருஷ்ணன், கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் திருடிச்சென்ற கார்களும் மீட்கப்பட்டன.


பின்னர் ஜாமினில் வெளியே வந்த பூபதி, மீண்டும் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு கடந்த ஜூலை மாதம் கடலூர் மாவட்டம் முத்தாண்டிகுப்பத்தில் இரண்டு கார்களை திருடினார். இந்த வழக்கிலும் பூபதியும், திருவண்ணாமலையைச் சேர்ந்த காளியப்பன் என்பவரையும் கடலூர் போலீசார் கைது செய்தனர். 


அந்த வழக்கிலும் ஜாமினில் வெளியே வந்த பூபதி, கடந்த 30.10.2018ம் தேதியன்று, சேலம் சொர்ணபுரி பகுதியில் ராமராஜ் என்பவரிடம் கத்தி முனையில் 1060 ரூபாயை வழிப்பறி செய்தார். 


மீண்டும் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட வந்த பூபதியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர், குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கருக்கு பரிந்துரை செய்தனர். அவருடைய உத்தரவின்பேரில் பூபதியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 


கைதான பூபதி என்கிற மைக்கண் பூபதி மீது சேலம் மாநகர, சேலம் மாவட்டம், நாமக்கல், கடலூர் மாவட்டங்களில் 23 திருட்டு உள்பட மொத்தம் 25 வழக்குகள் உள்ளன என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மண்ணுக்குள் போதைப் பொருள்; தோண்டி அழிக்கும் காவல்துறை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
police discovered and destroyed the wine cellars hidden in the liquor

வேலூர் மாவட்டத்தில்  கள்ளச்சாராயம்  காய்ச்சுபவர்களைத் தடுக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி வனப்பகுதிகளில் கள்ளச் சாராயம் காய்ச்சுவதற்காக பெரிய வகை பேரல்களில் ஊரல்கள் பதுக்கிவைக்கப்பட்டு சட்டத்துக்கு விரோதமாகக் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட காவல்துறை, கண்காணிப்பாளர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் தனிப்படை அமைத்து வனப்பகுதிக்குள் பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது,  கள்ளச்சாராயம் காய்ச்சி  லாரி டியூப்கள் மூலமாக நிரப்பி பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக முள் புதர்களில்  மறைத்து வைத்துள்ளனர். இதனைக் கண்டுபிடித்த போலீசார் சாராய டியூப்புகளை தோண்டி எடுத்து, அதைக் கீழே கொட்டி அழித்தனர்.

அதேபோல் பேரணாம்பட்டு அருகே சாக்கர் மலைப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 2900 லிட்டர் சாராய ஊரல்களைக் கண்டுபிடித்து கொட்டி அழித்தனர் . இதனால் நடுக்காட்டில் சாராயம் ஆறாக ஓடியது. வழக்கமாக சாராய ஊரல்கள்தான் ட்ரம்களின் ஊரல் போட்டு அதனை மண்ணுக்கு கீழே புதைத்து வைப்பார்கள். போலீஸில் மாட்டக்கூடாது என்பதற்காக இதுபோன்று செய்வார்கள். ஆனால் இப்பொழுது காய்ச்சப்பட்ட சாராயத்தை அதேபோல் செய்கிறார்கள். அதனையும் போலீசார் கண்டறிந்து மண்ணுக்குள் இருந்ததை தோண்டி எடுத்து கீழே போட்டு அழித்தனர்.

காவல் துறையினர் நடத்திய இந்த அதிரடி ரெய்டில், வனப்பகுதிகளில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 120 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 2900 லிட்டர் சாராயம் காய்ச்சுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஊரல்களைக் கண்டுபிடித்து நடுக்காட்டில் கீழே கொட்டி அழித்தனர் காவல்துறையினர்.

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.