டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்ய கொண்டு வந்த கேரளா போலி மதுபாட்டில்களை போலிசாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.
![w](http://image.nakkheeran.in/cdn/farfuture/QElDPuZwWBng6_D41j816ucXb5xLFQiUsdLyXFoHWNU/1550769008/sites/default/files/inline-images/wine.jpg)
டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்ய கொண்டு வந்த கேரளா போலி மதுபாட்டில்களை போலிசாா் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனா்.
குமாி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கேரளாவில் இருந்து ஸ்பிாிட் கலந்த போலி மது பாட்டில்கள் விற்கப்படுவதாகவும் அதே போல் கடையை ஓட்டியிருக்கும் பாா்களிலும் 24 மணி நேரமும் அந்த போலி மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாகவும் போலிசாருக்கு தகவல்கள் கிடைத்தது.
அதன் அடிப்படையில் கடந்த சில தினங்களுக்கு முன் டி.எஸ்.பி க்கள் தலைமையில் பாா்களில் அதிரடி சோதனை செய்ததில் நூற்றுக்கணக்கான போலி மது பாட்டில்களை பறிமுதல் செய்ததோடு பலரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். அதன்பிறகு போலி மது விற்பனை நிறுத்தப்பட்டது.
![2](http://image.nakkheeran.in/cdn/farfuture/JS-8bIhzRlkbHVxgyyiLBMXq-jHrDAujJoxZpds4vGk/1550769080/sites/default/files/inline-images/wine3_0.jpg)
இந்தநிலையில் மீண்டும் டாஸ்மாக் கடைகளில் போலி மது பாட்டில்கள் விற்கப்படுவதாக குடிமகன்கள் போலிசுக்கு தகவல் தொிவித்துள்ளனா். இதை மதுவிலக்கு போலிசாா் ரகசியமாக கண்காணித்து வந்தனா்.
இன்று நாகா்கோவில் பகுதியில் வைத்து கேரளாவை சோ்ந்த சஜி என்பவரை போலிசாா் பிடித்து விசாரணை செய்த போது அவா் கேரளாவில் இருந்து விற்பனைக்கு கொண்டு சென்ற 100 போலி மதுபாட்டில்களை கண்டுபிடித்தனா். இதை தொடா்ந்து அந்த பாட்டில்களையும் பறிமுதல் செய்ததோடு சஜி வையும் கைது செய்தனா். அவா் எந்தெந்த கடைகளில் எல்லாம் ஏற்கனவே விற்பனைக்கு கொடுத்தாா் என்பது பற்றியும் விசாாித்து வருகின்றனா்.