Skip to main content

துப்பாக்கிச்சூட்டில் முறையான சிபிஐ விசாரணைக்கு உதவிட முடிவுகள் மேற்கொள்ள வேண்டும் -முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

Published on 23/12/2018 | Edited on 23/12/2018
b

 

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன்,  தமிழக முதல்வருக்கு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டம் இயற்றுவது குறித்து நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் உரிய முடிவுகள் எடுக்க வேண்டுமென கேட்டு கடிதம் எழுதியுள்ளார். 


அக்கடிதத்தில்,   ‘’தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலை  சுற்றுச்சூழலுக்கும் வாழ்வாதாரத்திற்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்ததால் அனைத்துப் பகுதி மக்களும் போராடினார்கள்.  14 அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.  இவையனைத்தையும் கணக்கில் கொண்டு தமிழக அரசும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இந்த ஆலையை மூட உத்தரவிட்டன. ஆயினும், ஆலையை திறக்க வேண்டுமென தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

 

இந்நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில், கீழ்க்கண்ட அம்சங்கள் குறித்து முடிவெடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
1. தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும்.  இறுதி வரை ஆலையை நிரந்தரமாக மூடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு உரிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

 

2. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய சாதாரண அப்பாவி மக்கள், குழந்தைகள், முதியவர்கள்  மீது காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர், 50க்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கி குண்டுகளால் காயமடைந்தனர், 200க்கும் மேற்பட்டவர்கள் தடியடியினால் காயமடைந்தனர்.


 
இது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கும் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிப்காட் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட அத்தனை வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும், துப்பாக்கி சூடு மற்றும் இதர விஷயங்கள் குறித்த காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மீதான புகார்கள் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் 14.08.2018 அன்று தீர்ப்பளித்தது.   தீர்ப்பின் அடிப்படையில் சிபிஐயும் விசாரணையை துவக்கியுள்ளது. 


 
இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமானவர்கள் தற்போதும் பணியில் நீடிப்பது முறையான விசாரணைக்கு உதவி செய்யாது. எனவே, துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது பணியில் இருந்த உயர் காவல்துறை  மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்பட்ட காவலதுறையினரை தற்காலிக பணிநீக்கம் செய்து, முறையான சிபிஐ விசாரணைக்கு உதவிட முடிவுகள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.’’என்று தெரிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.