Skip to main content

சட்டமன்றம் அல்ல... வெட்டி மன்றம்...: எடப்பாடியை தாக்கும் கருணாஸ் 

Published on 30/05/2018 | Edited on 30/05/2018

சென்னை அண்ணா அறிவாலயத்தில், கையாலாகாத அதிமுக ஆட்சியில் படுகொலையாகும் மக்கள் பறிபோகும் ஜனநாயகம் என்ற தலைப்பில் மாதிரி சட்டமன்றக் கூட்டம் இன்று காலை நடந்தது. சபாநாயகராக சக்கரபாணி பொறுப்பேற்று மாதிரி சட்டமன்றக் கூட்டத்தை நடத்தினார்.


 

karunas



 

 

 

இதில் பேசிய முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், திருவாடானை அதிமுக எம்எல்ஏவுமான கருணாஸ்,

 

எந்த வித உரிமைகளும் இல்லாத அந்த மன்றம் எதுக்கு? அது சட்டமன்றம் அல்ல வெட்டி மன்றம். அவர்களே அவர்களுக்காக குரல்கொடுத்து கொண்டு இருக்கிறார்கள். தற்பெருமை பேசிக்கொண்டு இருக்கிறார்கள். நான் செய்தேன், நான் செய்தேன், நான் செய்தேன் என்று சொன்னால் உங்க வீட்டில் இருந்து எடுத்து வந்த பணத்திலா அதை செய்திர்கள்? ஜனநாயக நாட்டின் அடிப்படை உரிமை அது.

 

உங்களை எதற்காக தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள் மக்கள். மக்களுடைய திட்டங்களை செயல்படுத்துவதற்காக தான். செயல்படுத்த தவறியவர்களை கேள்வி கேட்டகூடாது என்று சொன்னால் அது எந்த விதத்தில் நியாயம். ஆக நான் இன்றைக்கு இந்த இடத்தில் வந்துவிட்டேன் என்பதற்காக அவர்களை குறைசொல்லவில்லை. நான் ஆரம்பத்தில் இருந்து சொல்லிகொண்டு தான் இருக்கிறேன்.

 

இதுவரை 182 மனுக்கள் தொகுதி சார்பாக நான் கொடுத்து இருக்கிறேன். இரண்டே இரண்டு மனுக்கள் மட்டும் தான் பரிசீலனை செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்ககூடிய அதிமுகவின் நிர்வாக நிலை.முழுக்க முழுக்க வியாபாரிகள் ஒன்றாக சேர்ந்து ஒன்று நடத்தி கொண்டு இருக்கிறார்கள். ஒரு மிகப்பெரிய வியாபாரம் நடந்து கொண்டு இருக்கிறது.

 

 

 

தொகுதிக்கு செல்ல முடியவில்லை. பாதுகாப்பு இல்லை. பலமுறை சொல்லி இருக்கிறேன். தவறான தகவல்களை சொல்கிறார்கள். கடந்த குருஜெயந்திக்கு முதலமைச்சர் வருகின்ற பொழுது நான் அங்கு அன்னதானம் போடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தேன். எதிர்கட்சி தலைவரையும் வரவேற்றேன். ஆனால் அன்றைக்கு உளவுத்துறை சொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட தகவல். என்ன தெரியுமா? நான் முதல்வர் வருவதை தடுக்க போகிறேன். நான் முதல்வரை என் ஆட்கள் கொண்டு அடிக்க போகிறேன் என்கின்ற தகவலை தான் தமிழ்நாடு உளவுத்துறை கொடுத்தது. நடக்காதது ஒன்றை இல்லாத ஒன்றை சொல்லக்கூடிய அதிகாரி முதல்வர் இடத்தில் இருக்கிறார். உண்மையை சொல்வதற்கு யாரும் இல்லை. மக்களை காப்பற்றுவதற்கான அதிகாரி யாரும் இல்லை. அரசு செய்யகூடிய தவறுகளை எப்படி சமாளிப்பது என்று சொல்லகூடிய அதிகாரிகள் தான் அங்கு இருக்கிறார்கள்.

 

karunas

 

ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பணியை செய்வதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்படுத்தி கொடுக்காத அரசு தேவையா? இதுதான் என்னுடைய கேள்வி? செயலற்ற அரசாக மக்களுக்கு பணிகள் செய்யமால் இருக்ககூடிய அரசு தேவையா? இதுதான் தமிழர்களின் ஒட்டுமொத்த கேள்வியாக இருக்கிறது. ஆகவே மக்களுக்கான ஒரு ஆட்சி, மக்களை குறைகளை போக்ககூடிய ஒரு ஆட்சி, மக்களுக்கு பிடிக்காத திட்டங்களை வேண்டாம் என்று சொல்லக்கூடிய ஒரு ஆட்சி, மக்களின் உரிமைக்களுக்காக போராடக் கூடிய ஒரு ஆட்சி, மக்களுக்காக மக்களுடனேயே வாழ்ந்து காட்ட கூடிய ஒரு ஆட்சி இந்த தமிழகத்தில் வேண்டும். அது ஸ்டாலின் தலைமையில் உருவாக வேண்டும். என்பது தான் என்னுடைய ஆசை. என்னுடைய ஆவல். அன்றைக்கு எனக்கு சட்டமன்ற வாய்ப்பு கிடைத்து விடும் என்பதற்காக அல்ல. நான் மிகமிக ஆர்வபட்டுவந்தேன். நடப்பதை எல்லாம் பார்த்தேன். போதும்.

 

கூவத்தூரில் ஏற்பட்ட அவமானங்கள் போல வேற எந்த அவமானமும் எனக்கு ஏற்படப்போவதில்லை. யார் ஒருவரும் என்னை பார்த்து விரல் நீட்டி பேசியது கிடையாது. ஆனால் அத்தனை அவமானங்களை சந்தித்து இருக்கிறேன்.

 

 

 

இன்றைக்கு நடந்து கொண்டிருக்க கூடிய நிர்வாகம் சரியில்லை. தலைமை சரியில்லை. ஒரு வீட்டில் கணவன் சரியில்லை என்று சொன்னால் அதன் முழு பொறுப்பு அந்த குடும்ப தலைவனுடையது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை. உள்ளாட்சி கட்டமைப்பு இல்லை. மாவட்ட ஆட்சியாளர்கள் மந்திரிகளுக்கு தலை சாய்க்க கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியவர்களை அமர்த்தி கொள்கிறார்கள்.

 

எதற்காக என்று கேட்டால் மணல் அள்ளுவதில்தான் அதிகமாக பணம் இருக்கிறது என்கிறார்கள். காவல் துறை அதிகாரிகளுக்கு பிரித்து வழங்கப்படுகிறது. அதற்கான ஆதாரம் என்னிடத்தில் இருக்கிறது. நானே பேசியிருக்கிறேன். ஆதாரத்தை கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை. முதலமைச்சரிடத்தில் புகார் கொடுத்துட்டா, முக்குலத்தோடர் புலிப்படைக்கு அமைச்சர் பதவி கொடுத்துருவாங்களா? என்று கேட்கின்றனர். இவ்வாறு பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Edappadi Palaniswami said Safe travel of passengers should be ensured

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்தப் பேருந்தின் நடத்துநரின் இருக்கை கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தப் பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நேற்று திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே, ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த தி.மு.க அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால், மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்தத் திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்