Skip to main content

கர்ப்பிணி பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் கைது...

Published on 27/07/2020 | Edited on 27/07/2020
Kallakurichi

 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலி பகுதியை சேர்ந்தவர் முருகேசன். அவரது மருத்துவமனையில் இரண்டு பெண்களுக்கு கருப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இரண்டு பெண்கள் அவரது மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ய காத்திருப்பதாகவும், அவர் போலி மருத்துவர் எனவும் மேலூர் வட்டார அரசு மருத்துவ அலுவலர் பங்கஜம் என்பவருக்கு தெரியவந்துள்ளது.

 

இதையடுத்து அவர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து முருகேசன் மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்த இரண்டு பெண்கள் மற்றும் அதற்காக காத்திருந்த இரண்டு பெண்கள் உட்பட 4 பேரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து போலி மருத்துவர் முருகேசனிடம் நடத்திய விசாரணையில், அவர் டி.பார்மசி மட்டுமே படித்துவிட்டு மருத்துவமனை உருவாக்கி பலருக்கும் சட்டவிரோதமான முறையில் ரகசியமாக கருக்கலைப்பு செய்து வந்தது தெரியவந்துள்ளது.

 

இவருக்கு கச்சராபாளையம் கள்ளக்குறிச்சி விருகாவூர், அசகளத்தூர் உள்ளிட்ட பல கிராமங்களில் சிலர் புரோக்கர்களாக இருந்தது கொண்டு அங்கிருந்து கருகலைப்பு செய்ய விரும்பும் பெண்களை கண்டறிந்து அவர்களை இவரது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் பங்கஜம் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் முருகேசனை கைது செய்துள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சியில் செயல்பட்டுவரும் இவருடைய கருக்கலைப்பு மையத்தையும் கண்டறிந்து அதற்கு சீல் வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. இவருக்கு ஆள் பிடித்து அனுப்பும் புரோக்கர்களையும் கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

 

தங்கள் காதலர்களுடன் தனிமையில் இருக்கும்போது, முறைதவறிய நெருக்கம் ஏற்படுவதால் அதன்மூலம் கற்பமாகும் இளம் பெண்கள், கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு தெரியாமல் முறைதவறிய காதலில் ஈடுபடும் பெண்கள் கற்பமடைகின்றனர். இப்படிப்பட்டவர்கள் குடும்பத்தினருக்கு தெரியாமல் ரகசியமான முறையில் கருக்கலைப்பு செய்துகொள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால், கர்ப்பம் அடைந்தது வெளியே தெரிந்துவிடும் என்பதால் இது போன்ற போலி மருத்துவர்களிடம் யாருக்கும் தெரியாமல் சென்று கருக்கலைப்பு செய்து கொள்கிறார்கள். அதனால்தான் இதுபோன்ற போலி மருத்துவர்கள் அதிகரிக்கின்றனர். இதுகுறித்து அரசு மற்றும் சுகாதாரத்துறையினர் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாமியாரை துடிதுடிக்க கொன்ற மருமகன்; சென்னையில் பயங்கரம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Son-in-law incident mother-in-law in Chennai

சென்னை மாதவரம் கண்ணன் நகரில் வசித்து வருபவர்கள் புஷ்பராஜ் - ஜான்சி தம்பதியினர் புஷ்பராஜ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மனைவி ஜான்சி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுடன் ஜான்சியின் தாய் வசந்தியும் வசித்து வந்துள்ளார். புஷ்பராஜ் தினமும் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புஷ்பராஜ் மீண்டும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி ஜான்சியுடன் வாக்குவாம் ஏற்பட்டுள்ளது. மாமியார் வசந்தி தங்களுடன் வசித்து வருத்து வருவதால்தான் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கருதிய புஷ்பராஜ் மனைவி வெளியே சென்ற போது மாமியார் வசந்தியிடம் இதுகுறித்து தகராறு செய்துள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த புஷ்பராஜ் மாமியார் வசந்தியை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த வசந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார். இதையடுத்து புஷ்பராஜ் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வசந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த  புஷ்பராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.